Friday, November 30, 2007

வேண்டும் ஒரு கலாசார அமைச்சர்!!

அமைச்சர் அன்புமணியின் கோரிக்கைக்கு இணங்கி நடிகர் விஜய் "நான் இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன்" என்று உறுதியளித்திருக்கிறார்! நல்ல விசயம் தான்.

சில நாட்களுக்கு முன் அமைச்சர் அன்புமணியின் இந்த கோரிக்கையை சன் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தேன். அமைச்சர் பேசுகையில் "விஜய்ன்னு ஒருத்தர் இருக்கார்...அவர் என்ன நினைச்சிகிட்டு இருக்கார்ன்னு தெரியலை..." என்று சற்று நக்கலாகத் தொடங்கினார். நான் கூட என் கணவரிடம் சொன்னேன், இப்படியெல்லாம் நக்கலாகப் பேசினால் எந்த நடிகரும் கண்டுகொள்ளமாட்டார்கள். அலட்சியாகப்படுத்திவிடுவார்கள் என்று. ஆனால் என்ன ஆச்சரியம், விஜய் இதனை நல்ல விதத்தில் எடுத்துக்கொண்டு கோரிக்கைக்கு செவி சாய்த்திருக்கிறார். ரஜினியும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்று முன்பே உறுதியளித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்னால் நடிகை த்ரிஷா கூட, சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் குழந்தைகள் வேலை செய்வதால், தான் இனி தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போவதில்லை என்று சொன்னார். முன்பு முன்னனி நடிகையாக இருந்த அமலா தன்னை Blue Cross Blue Shield அமைப்பில் இனைத்துக்கொண்டிருக்கிறார். இளைய தலைமுறையினரிடத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமா நடிகர் நடிகைகளெல்லாம் தாமே முன் வந்து சமூக நலனுக்காக சிந்திப்பது உண்மையிலேயெ மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு ஒரு ஆசை. சுகாதாரத்தைப் பாதுகாக்க அமைச்சர் அன்புமணி முன்னனி நடிகர்களுக்கு கோரிக்கைகள் வைக்கிறார். கலாசாரத்தைப் பாதுகாக்க எந்த அமைச்சராவது ஆபாசக் காட்சிகளில் நடிக்கக்கூடாதென்று நடிகைகளுக்கு கோரிக்கை வைப்பார்களா?! "கலாசாரத்தைப் பாதுகாப்பது" எந்த அமைச்சகத்தின் பொறுப்பு? :-)

No comments: