Monday, July 16, 2007

பெட்னா(FeTNA)வும் சில விளக்கங்களும்

பெட்னா விழாக்களைப் பற்றியும், பெட்னா நிர்வாகத்தைப் பற்றியும் சிலர் என்னுடைய முந்தைய பதிவில் சில கேள்விகள் எழுப்பியிருந்தனர். வாசன் என்கிற பதிவரைப் பாராட்டுகிறேன். பெட்னா பற்றிய தனது வருத்தங்களை மிகவும் நாகரீகமாக எழுதியிருந்தார். ஆனால் சில அனாமதேய, அநாகரீகமான பின்னூட்டங்கள் படிப்பதற்கு வேதனையாக இருந்தது. தொடர்ந்து 4 வருடங்களாக பெட்னா விழாக்களுக்குப் போய்வருவதாலும், 2004 ஆம் ஆண்டு பால்டிமோரில் நடந்த பெட்னா விழாவில் வேலை செய்ததாலும், ஓரளவு இந்த விழா ஏற்பாடுகள் எப்படி ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதை நான் அறிவேன். அந்த சிறு அனுபவத்தின் அடிப்படையில் சில விளக்கங்கள் அளிக்க விரும்புகிறேன். நான் எதையும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, எனக்குத் தெரிந்த சில உண்மைகளை மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். .

முதலில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். பெட்னா நிர்வாகிகளும், விழா ஏற்பாடுகளில் உதவுபவர்களும், நம்மைப் போலவே அமெரிக்காவில் முழு நேர வேலையில் இருப்பவர்கள். இவர்களுக்கும் குடும்பப் பொறுப்புகள் இருக்கின்றன. ஒரு முழு நேர "Event Co-ordinator" ஆக இருப்பவரிடன் உள்ள செயலாற்றும் திறமையை இவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு. அலுவல், குடும்பம் இவற்றுக்கப்புறம் எஞ்சியிருக்கும் நேரத்தில் இவர்கள் ஒருங்கிணைக்கும் விழாவில் குறைகளே இருக்கக்கூடாது என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்?

குற்றச்சாட்டு 1: தமிழ்நாட்டிலிருந்து விழாவுக்கு வருகிறார்கள் என்று விளம்பரப்படுத்தப்படும் பிரமுகர்களில், பாதி பேர் விழாவுக்கு வருவதில்லை.
இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. விழாவிற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தப் பிரமுகர்களுக்கு பெட்னா அழைப்பு அனுப்பும் போது, எல்லாரும் ஒத்துக்கொள்வார்கள். பெட்னாவும் தன் அறிவிப்புகளிலும், இணையதளத்திலும் இவர்களின் பெயர்களை அறிவிக்கும். இடையில் அந்த மூன்று மாதக் காலத்தில் என்னென்னவோ நடக்கும். உதாரணத்திற்கு, இந்த வருடம் இறையன்பு வருவதாக இருந்தார். ஆனால் விழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன் அவர் காரில் செல்லும்போது விபத்து நடந்து எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. லக்ஷ்மன் ஸ்ருதி வருவதாக இருந்தது. ஆனால் அவர்கள் குழுவிற்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. சனிக்கிழமை அன்று விழா. புதன் இரவு தான் இந்த விசா மறுக்கப்பட்ட விசயம் நிர்வாகிகளுக்குத் தெரிகிறது. அதற்குப் பிறகு முட்டி மோதி நியூஜெர்சியில் உள்ள "ஜெர்ஸி ரிதம்ஸ்" என்கிற இசைக்குழுவை ஏற்பாடு செய்தார்கள். அந்த இசைக்குழுவில் இருப்பவர்களெல்லாம் படிக்கும், வேலைக்குப் போகும் தமிழ் இளைஞர்கள். இரண்டே நாட்களில் இரவு பகல் பாராமல் பயிற்சி செய்து அரங்கத்தில் அசத்தினார்கள். இப்படி கடைசி நேரச் சறுக்கல்களும் சமாளிப்புகளும் ஒவ்வொரு விழாவிலும் வழக்கமாக நடந்துவருகிறது. இதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நிர்வாகிகள் வராதவர்களின் பெயர்களை இணையதளத்திலிருந்து எடுத்துவிடவேண்டும். இந்த வருடம், லியோனி, சேரன், திலகவதி ஆகியோரின் படங்கள்/பெயர்களை அகற்றியவர்கள், லக்ஷ்மன் ஸ்ருதி மற்றும் இறையன்புவின் படங்கள்/பெயர்களை அகற்றத் தவறிவிட்டார்கள். TANA இணையதளத்தைப் பார்த்தீர்களென்றால், அங்கே "Important Announcement" என்று கொட்டை எழுத்தில் போட்டு, அதில் ஒரு நடிகர் விழாவுக்கு வரமுடியாது போனதை தெரிவித்திருந்தார்கள். இது போல் பெட்னா செய்திருக்கவேண்டும். இது கட்டாயம் தவறுதான்.

குற்றச்சாட்டு 2: சினிமாக்காரர்களை பெட்னா எதற்காக அழைக்கவேண்டும்?
நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சினிமா நம் வாழ்க்கையில் இரண்டரக் கலந்த ஒன்று. சினிமா இல்லாத தமிழ்ச் சமுதாயம் இருக்க முடியாது. எந்த ஒரு அமைப்பிலும், அனைத்துச் சாராரையும் திருப்திப் படுத்தும் வகையில் தான் நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டும். புதியவர்களையும், இளைஞர்களையும் எப்படி பெட்னாவுக்கு வரவழைப்பது? சினிமா நடிகர்/நடிகைகள் வந்தால், நிறைய பேர் விழாவுக்கு வருவார்கள் என்கிற ஒரு நப்பாசையில் தான் ஒவ்வொரு வருடமும் சினிமாத்துறையிலிருந்து நடிகரோ, நடிகையோ, இயக்குனரோ அழைக்கப்படுகிறார்கள். 2004 பால்டிமோர் விழாவிற்கு வந்திருந்த நடிகர் விவேக்கை பார்ப்பதற்காகவே அவருடைய நிகழ்ச்சி இருக்கும் நாளன்று மட்டும் ஒரு நாள் டிக்கட் வாங்கிக்கொண்டு விழாவுக்கு நிறைய பேர் வந்தார்கள். வந்தவர்கள் மற்ற சில நிழ்ச்சிகளையும் இருந்து பார்த்துவிட்டுத் தான் போனார்கள். அதனால், மக்களை வரவைப்பதற்கும், அப்படியே மற்ற நிகழ்ச்சிகளை அவர்கள் பார்க்கவேண்டுமென்பதற்காகவும் தான் சினிமா நடிக/நடிகையரை பெட்னா அழைத்து வருகிறது. பெட்னா மட்டுமல்ல TANA என்கிற தெலுங்கு அமைப்பு(இந்த வருடம் இலியானாவை அழைத்திருக்கிறார்கள்!), மலையாளம், கன்னட அமைப்புகள் கூட மக்களை ஈர்ப்பதற்கு இந்த உத்தியைத்தான் கையாள்கின்றன. இதில் தவறு ஒன்றும் இல்லையென்பது என் கருத்து.

என் பதிவில் அனானி குறிப்பிட்டது போல் S.J சூரியா போன்றவர்களுக்கு காசு செலவழித்து அழைத்து வருவது வருத்தப்படவேண்டிய விசயம். நான் கேள்விப்பட்டது என்னவென்றால், S.J சூர்யா விழாவுக்கு வருவதைத் தடுத்து நிறுத்த பல தமிழ் ஆர்வலர்கள் கடுமையாக முயற்சி எடுத்தார்கள், ஆனால் அது தோல்வியில் முடிந்தது. என்னிடம் கூட ஒருவர், நீங்கள் பெண்களின் சார்பாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனக்கு அன்று அந்தத் துணிவு இல்லை. என்னைப் போல பயந்துகொண்டு, ஏன் வம்பு என்று கேள்வி கேட்காமல் பலர் இருந்துவிடுவதால் தான் தமிழ் அமைப்புகள் வளர முடியாது இருக்கின்றன. S.J சூர்யா மேடையில் ஏறியபோது அவருக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது என்றும் கேள்விப்பட்டேன். அதனால் சினிமா நடிகர்/நடிகைகளை அழைக்கும் விசயத்தில் பெட்னா மேலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குற்றச்சாட்டு 3: பெட்னாவின் முன்னாள் இயக்குனரை எப்.பி.ஐ பிடித்துக்கொண்டு போய்விட்டது.
எப்.பி.ஐ பிடித்துக்கொண்டு போனதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். இந்த அடிப்படை புரிந்துணர்வு கூட நம்மவர்களிடம் இல்லையென்பது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நீதிமன்ற விசாரணையின் மூலம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர் என்றே அனுமானித்துக் கொள்ள வேண்டும் என்கிற நெறி அமெரிக்க சட்டங்களில் வற்புறுத்தப்படுகிறது. முன்னாள் பெட்னா நிர்வாகி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டாலும் கூட, அதற்காக பெட்னாவை பழி சொல்வது எந்த வகையில் நியாயம்? "Guilty By Association" என்று கேளிவிப்பட்டிருக்கிறீர்களா? அதற்கு, விக்கியிலிருந்து சில உதாரணங்களை இங்கே கொடுக்கிறேன்.

1. பில் க்ளிண்டன் டெமாக்ரடிக் அணியைச் சேர்ந்தவர். பில் கிளிண்டன் தன் மனைவிக்குத் துரோகம் செய்தவர். அதனால் டெமாக்ரடிக் அணியைச் சேர்ந்த அனைவரும் மனைவிக்குத் துரோகம் செய்தவர்கள் என்று சொல்ல முடியுமா?

2. ஹிட்லர் சைவ உணவு சாப்பிடுபவர். ஹிட்லர் ஒரு கொடுங்கோலன். அதனால் சைவ உணவு சாப்பிடுபவர்களெல்லாம் கொடுங்கோலர்கள் என்று சொல்ல முடியுமா?

3. நீங்கள் XYZ என்கிற நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரை எப்.பி.ஐ பிடித்துக்கொண்டு போய்விட்டது. அதனால் அந்த நிறுவனமே தவறானதாகிவிடுமா? அந்த நிறுவனத்திலிருந்து நீங்கள் உடனே ரஜினாமா செய்துவிடுவீர்களா?

அதே போல,பெட்னாவின் முன்னாள் நிர்வாகி ஒருவர் இருக்கிறார். அவர் அமெரிக்க அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். அதனால் பெட்னா என்கிற அமைப்பே குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? யோசித்துப்பாருங்கள்!.

இங்கே வாசிங்டனில் எங்களிடையே வாழ்ந்த, அனைவரும் நன்கு அறிந்த ஒரு தமிழர், NASA வில் வேலைப்பார்த்த இன்ஜினியர்! சில மாதங்களுக்கு முன் எப்.பி.ஐ யினால் கைது செய்யப்பட்டார். காரணம், 16 வயதிற்கு குறைவாக இருந்த ஒரு பெண்ணுடன் தகாத முறையில் இணையத்தில் அளவளாவியது, மற்றும் கள்ளத்தனமாக அந்தப் பெண்ணை சந்தித்தது. அவருக்கு ஐந்து வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டது. அவருக்கு மனைவி, பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். அவர் குற்றவாளி என்பதற்காக, எங்க ஊர் தமிழர்கள் அவருடைய குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிடவில்லை, அவர் வேலைப் பார்த்த NASA வை பழி சொல்லவும் இல்லை!.

ஒருவர் குற்றவாளி என்பதற்காக அவரைச் சுற்றி இருப்பவர்களும் குற்றவாளிகள் என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மையை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள்.

குற்றச்சாட்டு 4: TNF/fetna இரண்டு அமைப்புகளும் தனித்தனியாக விழா நடத்துகின்றன
பெட்னாவின் குறிக்கோள் என்னவென்று முன்பு எனக்குப் புரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பெட்னா விழாவிற்கு கிட்டத்தட்ட 200,000 டாலர்கள் செலவழிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு நியூயார்க்கில் நடந்த விழாவுக்கு கிட்டத்தட்ட 400,000 செலவானது என்று கேள்விப்பட்டேன். இவ்வளவு பணத்தையும் ஒரு ஆடம்பரமான விழாவில் வாரி இறைத்து ஏன் கரியாக்கவேண்டும்? இவ்வளவு பணத்தையும் கொண்டு தமிழ்நாட்டில் எத்தனை ஏழைகளுக்கு உதவலாம் என்று என் கணவரிடம் பலமுறை விவாதித்திருக்கிறேன். அவரும், மற்ற சில நண்பர்களும் எனக்களித்த விளக்கம் - பெட்னா தொண்டு நிறுவனம் அல்ல. அதன் குறிக்கோள் தமிழ்க் கலையையும் இலக்கியத்தையும் வளர்ப்பது மட்டுமே. இங்கிருந்தபடி தமிழ்நாட்டில் தொண்டு செய்வதற்கு TNF போன்ற வேறு சில அமைப்புகள் இருக்கின்றன. பெட்னாவிற்கு நன்கொடை கொடுக்கும் தமிழ் ஆர்வலர்கள் பலர் TNF க்கும் நன்கொடை கொடுக்கின்றார்கள்.

TNF தமிழ்நாட்டுடன் மட்டுமே தொடர்புடைய ஒரு அமைப்பு. ஆனால் பெட்னாவின் குறிக்கொள் விசாலமானது. தமிழ்நாடு மட்டுமல்லாது உலகத் தமிழர்களின் கலையையும் இலக்கியத்தையும் வளர்க்கும் அமைப்பு. இப்படி முற்றிலும் வெவ்வேறு குறிக்கோள்களைக் கொண்ட இரு அமைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து விழா எடுப்பது சரியா அல்லது தனித்தனியாக விழா எடுப்பது சரியா என்று எனக்குத் தெரியாது. தமிழர்களின் ஒற்றுமையில், அனானிகளுக்கு இருக்கும் அக்கறை இந்த இரு பெரும் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு இருக்காது என்று நினைக்கிறீர்களா? அவர்கள் தனித்தனியாக விழா எடுக்க முடிவெடுத்ததற்கு ஒரு வலுவான காரணம் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்களப் பற்றி சொல்லவேண்டியதில்லை. அவர்கள் சுயமாகச் சிந்திப்பவர்கள். பெற்றோர்கள் எந்த முடிவையும் அவர்கள் மேல் தினித்துவிட முடியாது.
NTYO - National Tamil Youth Organization அமைப்பைச் சேர்ந்த அமெரிக்கத் தமிழ் இளைஞர்கள், 2004 ஆண்டில் இருந்து பெட்னா விழாக்களுக்கே போவது என்று முடிவு செய்தது ஏன் என்று, அந்த அமைப்பின் தலைவர், NTYO இணையதளத்தில் எழுதியிருக்கும் கடிதத்தைப் படித்துப் பாருங்கள். "The biggest event that TNF, FeTNA, and NTYO have is our annual July 4th conference that brings all Tamils, young and old, from all parts of America together for three days of exciting activities and captivating seminars. However, this year many of you might be aware that TNF and FeTNA are planning to have TWO SEPARATE conferences, one in Chicago , IL and the other in the Washington DC Area on the same July 4th weekend. This actions succeeds in only splitting the already small Tamil community. NTYO considers both TNF and FeTNA as parent organizations. Last year, the situation was similar and there were also two separate conventions. We decided to go with FeTNA, having the understanding that we would alternate between TNF and FeTNA in the years to come if there were going to be dual conferenes. However, this year, we reversed our decision from last year and have decided to also stick with FeTNA, and we feel that you, our members, deserve an explanation. We were unable to go with TNF this year for several reasons. First, we just recently had our convention in Chicago in 2002 and having it there again would not attract such a large crowd. Secondly, we feel that TNF is centered towards only a Tamil Nadu population, whereas FeTNA is more explicit in their objective to attract all Tamils. Finally, FeTNA is a larger organization and would lead to a better turnout, a necessity for the survival of NTYO. Whether we will ever go with TNF remains to be seen. We are continuously hopeful for a joint conference to once again take place. When that happens all of us are the winners. But for now we have to pick our best possible option."

குற்றச்சாட்டு 5: பார்ப்பன எதிர்ப்பு, மொழி வெறி, புலிகள் ஆதரவு
பார்ப்பன எதிர்ப்பு, மொழி வெறி, புலிகள் ஆதரவு போன்றவற்றை கடந்த மூன்று ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் நான் உணராவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் அனானிகளின் கிசுகிசுப்புகளில் அறிகிறேன். கொஞ்சம் தெளிவான ஆதாரங்களுடன் எழுதினால், அது அனானிகளின் கூற்று என்றாலும் ஏற்றுக்கொள்ளலாம். நந்தன் கதை நாடகத்தையும், ஈழத்தமிழர்களின் கலைநிகழ்ச்சிகளையும் இப்படி ஒரு பார்வையில் பார்க்கமாட்டீர்களென்று நம்புகிறேன்.

6. பொறுக்கிகளுக்காக பொறுக்கிகளால் நடத்தப்படும் அமைப்பு பெட்னா என்று சொன்ன அனானிக்கு:
பெட்னாவில் கிட்டத்தட்ட 30 தமிழ்ச் சங்கங்கள்/தமிழ் அமைப்புகள் உறுப்பினாராக இருக்கின்றன. இந்தச் சங்கங்கள்/அமைப்புகளைச் சேர்ந்த அனைத்துத் தமிழர்களும் உங்களைப் பொறுத்தவரை பொறுக்கிகள், குற்றவாளிகள். அப்படித்தானே? புரியாமல் கேட்கிறேன்...ஆயிரக்கணக்கான பொறுக்கிகளுக்கு பணமும் நேரமும் இருந்தால் என்ன செய்வார்கள்? சும்மா குடித்துவிட்டு கூத்தடிக்காமல், சிரமப்பட்டு தமிழையா வளர்த்துக்கொண்டிருப்பார்கள்? நீங்கள் சொல்லும் இந்தப் பொறுக்கிகளின் அமைப்பை புனித ஆத்மாக்களின் அமைப்பாக மாற்ற உங்கள் பங்களிப்பு என்ன? சும்மா அவதூரான பின்னூட்டங்கள் எழுதுவது மட்டுமே என்றால், மன்னிக்கவும்...இங்கே யார் பொறுக்கி? நல்ல மாற்றங்கள் ஏற்படவேண்டுமென்றால் ஏதாவது உறுப்படியாகச் செய்யுங்கள். ஏன்?! நீங்களெல்லாம் சேர்ந்து "அனானிகள் சங்கம்" அல்லது "பெட்னா எதிர்ப்புச் சங்கம்" என்று ஒரு அமைப்பைத் தொடங்கினால் கூட, உங்களுக்கு வரும் பிரச்சினைகளையும், உங்களைப் போல் உண்மையை உணராமல் வெளியில் உள்ளவர்கள் அவதூறு பேசுவதையும் உங்களால் தடுக்க முடியாது.

7 comments:

சிறில் அலெக்ஸ் said...

அருமையான பதில்கள். நான் அமெரிக்காவில் இருந்தபோதும் சங்கங்கள் பக்கம் தலைகாட்டவில்லை. உங்கள் பதில்கள் யோசிக்க வைக்கின்றன.

இந்தமுறை வலைப்பதிவர்களும் கலந்துகொள்ளவிர்ருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். அருமையான விதயம்.

சிகாகோவுக்கு எப்ப வருவீங்க :))

தாரா said...

சிறில் - மிக்க நன்றி! சிகாகொவில் 2002(2001? சரியாக ஞாபகம் இல்லை) ஆண்டு பெட்னா விழா நடந்தது, ஆனால் நான் வரவில்லை. நீங்க முடிந்தால் அடுத்த வருடம் ஆர்லாண்டோ வாங்க.

தாரா.

வெற்றி said...

தாரா,
நல்ல விளக்கங்கள்.

"வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா"

எனக் கவியரசர் சொன்னது போன்றும்,

"நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறனும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி "

எனப் பாரதி சொன்னது போலவும் சிலர் எப்போதும் குற்றம் கண்டுபிடித்துக் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

நல்ல ஆக்கபூர்வமான விமர்சனங்களை உள்வாங்கி எம்மைச் சரிசெய்து நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.

மற்றும்படி சும்மா குரைப்பவர்களைக்
கண்டால் காறித் துப்பிவிட்டுச் செல்ல வேண்டியதுதான். அவர்கள் யார் என்பதையும் அவர்களின் வரலாறுகளையும் நாம் அறியாததா என்ன?

Anonymous said...

/பெட்னாவில் தவறுகள் நடக்கின்றன. அவை எல்லாவற்றையும் பேசுமளவு எனக்கு விசயம் தெரியாது. ஆனால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, எனக்குத் தெரிந்த சில உண்மைகளை மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ./
உங்களது நேர்மையை பாராட்டுகிறேன்..

/விழாவில் குறைகளே இருக்கக்கூடாது என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்?/
எல்லா விழாக்களிலும் குறைகள் இருக்கும்..ஆனால் அடுத்த முறை எப்படி அவைகளை சரி செய்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்..இங்கு மற்றவர்களுக்கு குறை என்பது அடுத்தவர்க்கு இன்பமே..உதாரணம் நியுஜெர்ஸியில் மாதவன் வராதது பற்றி பிராமணீய எதிர்ப்போடு தொடர்பு படித்தி கவிதை பாடியது..இவை மற்றவர்களுக்கு இன்பம்..சில பேருக்கு குறை..இதே போலத்தான் புலி ஆதரவும்..இந்த கு(நி)றைகளை இவர்களால் எபோழுட்துமே திருத்த முடியாது..இன்னும் சுருக்கமாக சொல்ல போனால் இந்த விழா புலி ஆதரவு + பிராமணீய எதிர்ப்பு + கடவுள் நம்பிக்கையின்மை போன்றவர்களுக்கு என்றுமே நிறைதான்..இவை அல்லாத பிறருக்கு குறைதான்..

/தமிழ்நாட்டிலிருந்து விழாவுக்கு வருகிறார்கள் என்று விளம்பரப்படுத்தப்படும் பிரமுகர்களில், பாதி பேர் விழாவுக்கு வருவதில்லை/
உங்களது விளக்கங்கள் மிகவும் நியாமானவை..நடைமுறைக்கு ஏற்றவைதான்..ஆனால் விளம்பரம் செய்யும் போது நுழைவுச் சீட்டின் விழை வரப்போகும் விருந்தினைப் பொருத்ததுதான் அமையும்..நான் முன்பு சொன்னது போல் இளையராஜாவுக்கா நுழைவுச் சீட்டு வாங்கி அவர் வாரத பட்சத்தில் அனுமதி விலையை குறைப்பதுதானே நியாயம்?? அல்லது அவர் வரவில்லை என்பதற்காக அவருக்குன்டான தொகையை அவரிடம் கொடுப்பார்களா?? இல்லாத பட்சத்தில் இது ஒரு வகை ஏமாற்றுதானே??

/சினிமாக்காரர்களை பெட்னா எதற்காக அழைக்கவேண்டும்?/
சினிமாக்காரர்களை அழைப்பதை நான் தவறு என்று சொல்லவில்லை..அதில் தரமானவர்களை அழைக்க வேண்டும் ..வெ.ஆடை மூர்த்தி,சூர்யா,சிம்பு இந்த வகையாரக்கள் எந்த வகையில் உதவுவார்கள் என்பதுதான் என் கேள்வி..

/என்னிடம் கூட ஒருவர், நீங்கள் பெண்களின் சார்பாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனக்கு அன்று அந்தத் துணிவு இல்லை. என்னைப் போல பயந்துகொண்டு, ஏன் வம்பு என்று கேள்வி கேட்காமல் பலர் இருந்துவிடுவதால் தான் தமிழ் அமைப்புகள் வளர முடியாது இருக்கின்றன./
நீங்கள் கேள்வி கேட்காவிட்டாலும் பராயில்லை..இந்த ஆள் தமிழ் விழாவிற்கு அவசியம் இல்லை என்பதையாவது உணர்ந்ததில் மகிழ்ச்சி..

/பார்ப்பன எதிர்ப்பு, மொழி வெறி, புலிகள் ஆதரவு/
இவை இரண்டும் இல்லாமல் விழா நடத்த முடியாது..என்னைப் பொறுத்த வரை சாதீயத்தை வைத்து வசை பாடுவது தாழ்வு மன்ப்பான்மை கலந்த வக்கிரம்..இது சாதி பெருமை பேசுபவர்களுக்கும் சேர்த்துதான்..

/பொறுக்கிகளுக்காக பொறுக்கிகளால் நடத்தப்படும் அமைப்பு பெட்னா என்று சொன்ன அனானிக்கு:
/
மற்ற கேள்வி எல்லாம் வேற அனானி கேட்டது..

தாரா said...

அனானி:

//எல்லா விழாக்களிலும் குறைகள் இருக்கும்..ஆனால் அடுத்த முறை எப்படி அவைகளை சரி செய்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்//

இந்த முறை சிந்தித்திருக்கிறார்கள்.

//பார்ப்பன எதிர்ப்பு, மொழி வெறி, புலிகள் ஆதரவு இவை இரண்டும் இல்லாமல் விழா நடத்த முடியாது//

நடத்த முடியும். பார்ப்பன எதிர்ப்பு, புலிகள் ஆதரவு, மொழி வெறி இதெல்லாம் இந்த ஆண்டு விழாவில் துளி கூட இல்லை.

//இளையராஜாவுக்கா நுழைவுச் சீட்டு வாங்கி அவர் வாரத பட்சத்தில் அனுமதி விலையை குறைப்பதுதானே நியாயம்?? அல்லது அவர் வரவில்லை என்பதற்காக அவருக்குன்டான தொகையை அவரிடம் கொடுப்பார்களா?? இல்லாத பட்சத்தில் இது ஒரு வகை ஏமாற்றுதானே??//

நியாயம் இல்லை. மனதார ஒத்துக்கொள்கிறேன். வருடா வருடம் நடக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உங்கள் யோசனையைச் சொல்லுங்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் நுழைவுச்சீட்டு வாங்குகிறார்கள். அதில் இளையராஜாவுக்காக சிலர் நுழைவுச்சீட்டு வாங்குகிறார்கள் என்றால். இதை எப்படி வகைப்படுத்துவது? யார் யார் இளையராஜாவுக்கு மட்டும் நுழைவுச்சீட்டு வாங்கினார்கள் என்று நிர்வாகத்திற்கு எப்படி தெரிவிப்பது?
இளையராஜா வரவில்லை என்று உங்களுக்கு எத்தனை நாட்களுக்கு முன் தெரிந்தது? இதைப் பற்றி நீங்கள் நிர்வாகிகளிடம் புகார் செய்தீர்களா? உங்களுடைய யோசனைகளும் பதில்களும் அடுத்த வருட விழாவிற்கு திட்டமிடும் நிர்வாகிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

நன்றி,
தாரா.

தாரா said...

வெற்றி,

//நல்ல ஆக்கபூர்வமான விமர்சனங்களை உள்வாங்கி எம்மைச் சரிசெய்து நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.//

மிக்க நன்றி!

தாரா.

தாரா said...

அனானி:

//ஆனால் விளம்பரம் செய்யும் போது நுழைவுச் சீட்டின் விழை வரப்போகும் விருந்தினைப் பொருத்ததுதான் அமையும்..//

தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.
ஒவ்வொரு வருடமும் யார் வந்தாலும் வராவிட்டாலும் இரண்டு நாள் நுழைவுச்சீட்டு $75, ஒரு நாள் நுழைவுச்சீட்டு $50. வரும் விருந்தினரைப் பொறுத்து இது மாறுவதில்லை.

தாரா.