tag:blogger.com,1999:blog-93755922024-03-12T22:35:35.216-04:00சிறகுகள் நீண்டனUnknownnoreply@blogger.comBlogger136125tag:blogger.com,1999:blog-9375592.post-73330470753751134702017-06-27T10:01:00.003-04:002017-06-27T10:13:37.525-04:00மாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjl9SL6EDtgwHTYzu9hpXWEAMPEskYjAlVaGMjNJfyJ7r-2O1w5xlF3g7oWoCu7ADhgF_UmGeL1k6yJgFxxh42XCTHTeUlYwwlBc3LBh9uB_mF10is6imrvYmYCmhV-cTfYtNeS/s1600/mathoru.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="690" data-original-width="602" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjl9SL6EDtgwHTYzu9hpXWEAMPEskYjAlVaGMjNJfyJ7r-2O1w5xlF3g7oWoCu7ADhgF_UmGeL1k6yJgFxxh42XCTHTeUlYwwlBc3LBh9uB_mF10is6imrvYmYCmhV-cTfYtNeS/s320/mathoru.jpeg" width="279" /></a></div>
<br />
<br />
<div class="" data-block="true" data-editor="bj48t" data-offset-key="1euq8-0-0" style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; white-space: pre-wrap;">
<div class="_1mf _1mj" data-offset-key="1euq8-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;">
<br />
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; margin: 0in 0in 4pt;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">எழுத்தாளர் பெருமாள் முருகனை எழுதுலகத்திலிருந்தே விலகிக்கொள்கிறேன் என்றும்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என் படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன் என்றும் மனம் நொந்து சொல்ல வைக்கும் அளவு சர்ச்சையில் இழுத்துவிட்ட இந்தப் புத்தகத்தில் என்ன தான் அப்படி சர்ச்சை இருக்கிறது
என்று படித்துப் பார்த்தேன். எனது கண்ணோட்டத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; margin: 0in 0in 4pt;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">மாதொருபாகன் </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">கதைச் சுருக்கம்:</span></div>
<span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">பொன்னாவும் </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">காளியும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருக்கும் தம்பதியர். திருமணமாகி </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">12 </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">வருடங்களாகியும் </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">குழந்தை இல்லை என்பதைத் தவிர அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை. ஊர் வாயும்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">சமுதாயத்தின் ஈ</span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">விரக்கமற்ற எதிர்பார்ப்புகளும் அவர்களின் நிம்மதியைக் குலைக்கிறது. குழந்தை </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">பெறுவதற்காக தன் மேல் திணிக்கப்பட்ட அத்தனை பரிகாரங்களையும் செய்கிறாள் பொன்னா. </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">கசப்பான திரவியங்களைக் குடிக்கிறாள்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அறுபது படி விளக்கு </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">பூசை செய்கிறாள்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">ஆபத்தான </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">மலைப்பாறையைச் சுற்றி வருகிறாள்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">எல்லா தெய்வங்களையும் </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">வேண்டிக்கொள்கிறாள்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">….</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அப்படியும் </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">நல்லது நடக்கவில்லை. கடைசியாக எஞ்சி இருக்கும் ஒரே ஒரு தீர்வை நோக்கி அவள் </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">தள்ளப்படுகிறாள். கணவன் காளி வேண்டாம் என்று பதறுகிறான். அம்மா</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">மாமியார்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">பாட்டி</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">மச்சினன் என்று </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">எல்லோரும் அதே தீர்வையே வழிமொழிகிறார்கள். தன் மனைவி அதனை ஒத்துக்கொள்ள மாட்டாள் </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என்று காளி நம்புகிறான். ஆனால் விரக்தியின் எல்லையில் இருக்கும் அவளோ</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, “</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">நீ சரின்னு சொன்னா</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">நான் செய்யிறேன்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என்று சொல்ல</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அவன் அதை </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">எதிர்பார்க்காமல் அதிர்ச்சியாகிறான்.</span><br />
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; margin: 4pt 0in;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அது என்ன அப்படி ஒரு தீர்வு என்பது தான் கதையின் உச்சகட்டம்! திருச்செங்கோட்டில்
நடக்கும் கோவில் திருவிழாவின் </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">14 </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">ஆம் நாளன்று சாமி மலையேறும் நாள். அன்று இரவு மட்டும் ஊரின் அத்தனைக் கட்டுபாடுகளும் தளர்த்தப்பட்டு ஆண்கள் எல்லாரும் சாமிகளாகக் கருதப்படுகிறார்கள். குழந்தை இல்லாத பெண்கள் அந்த இரவில் எந்த ஒரு ஆணுடனும் சேரலாம். அதன் மூலம் கிடைக்கும் குழந்தைகள் </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">“</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">சாமி குழந்தை</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">யாக கருதப்படுகிறார்கள். பொன்னா இந்தத் திருவிழாவிற்குச் செல்கிறாள். தனக்கான </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">“</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">சாமி</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">யைத் தேர்ந்தெடுக்கவும்
செய்கிறாள். காளி அதை அறிந்து மனம் உடைந்து போகிறான். அந்த இரவின் மூலம்
பொன்னாவிற்கு வேண்டுமானால் சாமி குழந்தை கிடைக்கலாம்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">ஆனால் காளியுடன் அவள்
வாழ்ந்த அந்த பழைய மகிழ்ச்சியான வாழ்க்கையின் முடிவும் அந்த ஒரு இரவாகவே
இருக்கக்கூடும்! கதை முடிவதும் அந்த இரவோடு தான்! அதற்குப் பின் என்ன நடக்கும்
என்பதை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறார் பெருமாள் முருகன்.</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; margin: 4pt 0in;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">எனக்குப் பிடித்தவை:</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;"><o:p></o:p></span></div>
<span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">1. </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">ஒரு </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">பூவரச மரத்தின் அடியில் தொடங்கும் கதை</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அதே பூவரச மரத்தின் </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அடியிலே முடிகிறது.</span><br />
<span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">2. </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">திருச்செங்கோடு கிராமம்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அதன் சுற்றுப்புறம்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">மலைக் கோவில்கள்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அங்கு நடக்கும் திருவிழா</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">திருவிழாவிற்கு வண்டி கட்டிக்கொண்டு வரும் மக்கள்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">….</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">இவற்றைப் பற்றி மிகச்</span><br />
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; margin: 4pt 0in;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">சுவாரசியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. மலையின்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">உச்சி</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அங்கிருக்கும் பாறை அமைப்புகள்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">மலை மண்டபங்களில் விற்கப்படும் கெட்டித் தயிரில் கலந்த கம்மஞ்சோறு</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">….</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">இவற்றைப் பற்றியெல்லாம் படிக்கப் படிக்க</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அங்கே திருச்செங்கோட்டிற்கே நேரில் செல்லவேண்டுமென ஆர்வம் எழுகிறது.</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;"><o:p></o:p></span></div>
<span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">3. </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">ஊர்க்கிழவிகள் </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">எல்லாம் காளி </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">– </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">பொன்னா </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">தம்பதிக்கு குழந்தை பிறக்காததற்கான காரணங்களாக அவர்களது முன்னோர்கள் செய்த பாவத்தை </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">கதை கதையாகச் சொல்வது வேடிக்கை!</span><br />
<span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">4. </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">குழந்தையின்மை </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அல்லது மலட்டுத்தன்மையை ஒரு ஆணின் பார்வையில் நான் இதுவரை படித்ததோ கேட்டறிந்ததோ </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">இல்லை. மாதொருபாகன் முழுவதும் </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">“</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">காளி</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என்கிற கணவன் கதாபாத்திரத்தின் </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">புலம்பலும் உணர்ச்சி வெளிப்பாடுமே! மனைவி </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">“</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">பொன்னா</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">எந்த அளவு குழந்தை </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">பெறாததற்கு வசவும் கிண்டலும் எதிர்கொள்கிறாளோ</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அதே அளவு கணவனும்</span><br />
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; margin: 4pt 0in;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">எதிர்கொள்கிறான். </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">”</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">ஊர் வாயிலிருந்து என்னைக் காப்பாற்று</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என்று கடவுளிடம் மன்றாடும் ஒரு ஆண் கதாப்பாத்திரம் எனக்குப் புதிது. இப்படி ஒரு புதிய கோணத்தில் கதைச் சொல்லியிருக்கும் பெருமாள் முருகனுக்கு பாராட்டுக்கள்.</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;"><o:p></o:p></span></div>
<span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">5. ”</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">மலடி</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என்று குழந்தைப் பெறாத </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">பெண்களை குறிக்கும் இந்தச் சொல் நமது தமிழ் சமுதாயத்தில் மிகப் பிரசித்தம். இந்த </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">வார்த்தை வராத கதைகள் இல்லை</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">திரைப்படங்கள்</span><br />
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; margin: 4pt 0in;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">இல்லை</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">நிஜ வாழ்க்கையிலும் இந்த வார்த்தையை கேட்டுக் கேட்டு மனம் நொந்த பெண்கள் ஏராளம். ஆனால் குழந்தை பெற தகுதியற்ற ஆணுக்கான சொல் எதுவும் இருக்கிறதா</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">? </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">எனக்கு மாதொருபாகன் படிக்கும் வரை அது தெரியாது. </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">“</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">காளி</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">கதாபாத்திரம் </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">“</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">வறடன்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என்று ஊராரால் கேலி செய்யப்படுகிறான். தமிழ் அகராதியைப் பார்த்தபோது தான் தெரிந்தது</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அப்படி ஒரு வார்த்தை உண்மையிலேயே இருக்கிறதென்று. </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">“</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">வீரியமற்றவன்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என்று பொருள்.
அடப்பாவிகளா! இப்படி ஒரு வார்த்தை இருப்பதையே இருட்டடிப்பு செய்துவிட்டார்களே</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என்று தான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. மீண்டும் ஒரு துணிச்சலான வெளிப்பாட்டிற்கு பெருமாள் முருகனுக்கு நன்றி!</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;"><o:p></o:p></span></div>
<span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;"><br /></span>
<span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என்ன </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">சர்ச்சை</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">?</span><br />
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; margin: 4pt 0in;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">இந்தக் கதையில் என் அறிவுக்குப் புலப்பட்ட ஒரே ஒரு நெருடல்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">திருமணமான பெண் கணவன் அல்லாத வேறொரு ஆணுடன் உறவு கொள்வது. என்னதான் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக ஒரு பெண் அப்படி செய்தாலும் கூட</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அந்த ஊரில் அது வழக்கம் என்றாலும் கூட</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என்ன ஒரு முற்போக்குப் பார்வையில் இதனை அனுகினாலும் கூட</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">ஒரு கணவனின் பார்வையில் தன் மனைவி வேறொரு ஆணுடன் உறவு கொள்வது என்பது மிகப் பெரும் மன வேதனை தான்.</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; margin: 4pt 0in;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;"><br /></span></div>
<span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">கதையில் </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">காளிக்கும் அவனது மச்சினன் முத்துவுக்கும் இது பற்றி நடக்கும் உரையாடல் மிக</span><br />
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; margin: 4pt 0in;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">முக்கியமானது. </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">”</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">நீ உன் பெண்டாட்டியை யாரோ ஒருவனிடம் அனுப்புவியா</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என்று கேட்கும்
காளியிடம்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, ”</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">யாரோ ஒருவன் இல்லைடா</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">சாமிகிட்டதானே அனுப்புறோம்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அது தப்பு இல்லை</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என்கிறான் முத்து. அதற்கு காளி</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, “</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என்னடா சாமி</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">? </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">நீயும் நானும் கூட தான் வயசுப் பசங்களா இருக்கும்போது அந்த ராத்திரியில </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">“</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">சாமி</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">யா போயிருக்கோம். அப்ப நம்மளை சாமியாவா நினைச்சிகிட்டோம்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">? </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">எந்த அழகான பொண்ணு கிடைப்பான்னு தானே அலஞ்சிக்கிட்டு இருந்தோம்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">?” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">என்பான். காளியின் இந்த வார்த்தைகள் சாமியின் பெயரால் நடக்கும் அந்த ஊர் வழக்கத்தின் பின் உள்ள போலித்தனத்தையும்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">மூட நம்பிக்கையையும் கிழித்துத் தொங்கவிடுகிறது!</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; margin: 4pt 0in;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">ஒரு ஆபத்தான விளிம்பில் பெருமாள் முருகன் மிகக் கவனமாக நடந்திருக்கிறார். கொஞ்சம்
தவறினாலும் கதை விரசமாகியிருக்கும். பாராட்டுக்குறிய எழுத்துத் திறமை! கதையில் சில
கொச்சையான வார்த்தைகள் கூட</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">படிப்பதற்கு சற்று சங்கடமாக இருந்தாலும்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அவை
வட்டார வழக்கில் இருப்பவை தான். அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு நாள் தோறும் ஒரு
முறையாவது அந்த </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">“F” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">வார்த்தையை கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">இந்தக் கதையில் வரும் சொல்லாடல் பெரும் அதிர்ச்சியைத் தரவில்லை.</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; margin: 4pt 0in 0.0001pt;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">சில அறநெறி சார்ந்த நெருடல்கள் இந்தக் கதையில் இருக்கின்றனவே ஒழிய சாதி மதம் சார்ந்த சர்ச்சை எழுந்தது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. என்னைப்பொறுத்த வரையில்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">ஐம்பது</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">அறுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் வாழ்ந்த மக்களைப் பற்றிய வாழ்க்கையை எட்டிப் பார்க்கும் ஒரு சாளரம் தான் இந்த </span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">“</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">மாதொருபாகன்</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;">” </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9.5pt;">கதை!</span><span style="font-family: Helvetica, sans-serif; font-size: 9.5pt;"><o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9375592.post-79050899706676005432016-02-15T18:10:00.000-05:002016-02-15T19:43:21.998-05:00பாலாவின் தாரை தப்பட்டை - ஒரு பார்வை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga-neLYCGHf89d44eF7-yf_KoCW6OVMhcGwVRJhWXj1OGA3D9BaSEs2vzwzlrJydphKAc4ljY6kzbChyg98NBLAKNtca6VBtOM3bITHkL4B4Gj0WcWoaD5djLrXFRxaHiizQS9/s1600/tarai18.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="208" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga-neLYCGHf89d44eF7-yf_KoCW6OVMhcGwVRJhWXj1OGA3D9BaSEs2vzwzlrJydphKAc4ljY6kzbChyg98NBLAKNtca6VBtOM3bITHkL4B4Gj0WcWoaD5djLrXFRxaHiizQS9/s320/tarai18.jpg" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் போன்ற திரைப்படங்களைப் பார்த்தபின் அடுத்து வரும் பாலாவின் திரைப்படம் எப்படி இருக்கும் என்று எல்லோராலும் எளிதாக ஊகித்துவிட முடியும். அது விளிம்பு விலை மனிதர்களின் அவலமான வாழ்கை பற்றியதாக இருக்கும். முடிவு மிகக் கொடூரமானதாக இருக்கும். அடுத்தடுத்து அவரின் ஒரே மாதிரியான திரைப்படங்கள் அலுப்பாக இருந்தாலும், அவரின் லாப நோக்கற்ற, விடாப்பிடியான சமூக அக்கறை என்னை வியக்க வைக்கிறது. நலிவுற்ற கீழ்த்தட்டு மனிதர்களைப் பற்றி யாராவது நமக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் அவர்களை நாம் மறந்துவிடக்கூடும். அதற்கு பாலாவைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் தமிழ் சினிமாவில்?</div>
<div>
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<span class="im" style="color: #500050;">பாலாவின் திரைப்படங்களை நான் ஒரு பாடம் படிப்பது போல் தான் பார்க்கிறேன். பிச்சைக்கார்களைப் பார்திருக்கிறேன். அவர்கள் ஏந்திய தட்டில் காசு போட்டிருக்கிறேன். அவர்கள் வாழ்கைக்கு அருகே நான் வந்த அந்த அதிகபட்ச நெருக்கம் அது மட்டுமே. பாலாவின் "நான் கடவுள்"பார்த்தபின் தான் அந்த ஏந்திய தகடுகளுக்கும், அதில் சிதறிக் கிடக்கும் சில்லரைகளுக்கும் அப்பால் அவர்களின் உலகம் எப்படி இருக்குமென்று </span><span style="font-family: "verdana" , sans-serif;"> தெரிந்து கொண்டேன். </span><span style="color: #500050;">கரகாட்டக்காரர்களை கோவில் திருவிழாக்களில் பார்த்திருக்கிறேன். அந்த இசையோ நடனமோ என்னை</span><br />
<div class="gmail_default" style="display: inline; font-family: verdana, sans-serif;">
<span class="im" style="color: #500050;"> </span><span style="color: #500050; font-family: "arial" , sans-serif;">வெகுவாக ஈர்க்கவில்லை. தாரை தப்பட்டை பார்த்தபின் தான் தெரிகிறது, அந்தக் குட்டைப் பாவடைக்குப் பின் உள்ள நீளமான </span>சோகம்...</div>
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<span class="im" style="color: #500050;">"அனைவரும் பார்க்கவேண்டிய படம்" என்று நிறைய படங்களை நண்பர்களுக்குப் பரிந்துரைத்திருக்கிறேன். ஆனால் பாலாவின் படங்களை அப்படி பரிந்துரைக்க எனக்கு தயக்கம் உண்டு. அவர் படங்களைப் பார்க்க ஒரு துணிவு வேண்டும். தீவிர மன பாதிப்புக்கும், சில தூக்கமற்ற இரவுகளுக்கும் நம்மை நாமே காவு கொடுக்கவேண்டும். பாலாவின் திரைப்படங்களைப் பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு அல்ல...அது ஒரு </span><span style="font-family: "verdana" , sans-serif;"></span><br />
வலி! </div>
<div>
<br /></div>
<div>
இனி தாரை தப்பட்டை பற்றி...</div>
<div>
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<span class="im" style="color: #500050;">பாலாவையே தூக்கியடித்து புறந்தள்ளிய "சூராவளி" யாக வரலட்சுமி!! </span></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<span class="im" style="color: #500050;">ம</span><span style="font-family: "verdana" , sans-serif;">ணி</span><span style="color: #500050;">ரத்தினமோ, கவுதம் மேனனோ தம் கனவிலும் கற்பனை செய்திருக்க முடியாத அப்படி ஒரு கதாபாத்திரம்! குடிகாரி, குட்டைப் பாவாடை கட்டிய கெட்ட ஆட்டக்காரி...ஆனால் நல்ல மனசுக்காரி. தன் மாமனின் மேல் யார் கைவைத்தாலும் அவரை அடித்து துவம்சம் செய்வாள், ஆனால் அதே மாமன் தன்னை </span><span style="color: #500050; font-family: "verdana" , sans-serif;">வேறு </span><span style="color: #500050;">ஒருவனை திருமணம் செய்துகொள்ளச் சொல்லும் போது, அவனை தானே காலால் உதைத்து ஆற்றில் தள்ளி விடுவாள். முதல் பாதி முழுவதும் தன் அபாரமான நடிப்புத் திறமையால் வரலட்சுமியே நிறைந்து நிற்கிறார். வெளி நாட்டில் "பாலே" நடனம் பயின்ற ஒரு பெண் எப்படி தாரைக்கும் தப்பட்டைக்கும் இப்படி அதிரடியாக ஆடமுடியும் என்று வியக்க வைக்கிறார். முதல் பாதி கதையின் கருவுடன் ஒட்டி விறுவிறுப்பாக நகர்கிறது. பாலாவின் முந்தைய படங்கள் தந்த பயத்தால், அந்த கரகாட்டக் குழு அந்தமான் செல்ல கப்பல் ஏறும் போது பகீரென்று அடிவயிறு கலங்கியது...எங்கே அவர்கள் அந்தமானில் மாட்டிகொண்டு அடிமைகளாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப் படப்போகிறார்களோ என்று! </span><br />
<br />
<div class="gmail_default" style="display: inline; font-family: verdana, sans-serif;">
ஆ<span style="color: #500050; font-family: "arial" , sans-serif;">னால் நல்ல வேளை...சில பிரச்சினைகளுக்குப் பிறகு நல்லபடியாக ஊர் திரும்பிவிடுகிறார்கள். </span></div>
</div>
<div>
<br /></div>
<div>
இடைவேளைக்குப் பிறகு படம் மையக் கருத்திலிருந்து தடம் மாறி பாலாவின் வழக்கமான கொடூரங்களால் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு அருமையான திரைப்படமாக இருந்திருக்க வேண்டிய தாரை தப்பட்டையில், தேவையற்ற வன்முறைக் காட்சிகளை பொதித்து முகம் சுளிக்க வைத்திருக்கிறார் பாலா. பெண்கள் மார்பிலும் வயிற்றிலும் அடிவாங்குகிறார்கள், அவர்களின் கூந்தல் மழிக்கப்படுகிறது, வாடகைத் தாயாக விற்கப்படுகிறார்கள்...இத்தனை வன்முறைகளைக் காட்டித்தான் ஆகவேண்டுமா பாலா? </div>
<div>
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<span class="im" style="color: #500050;">முதல் பாதியில் கரகாட்டக்காரர்களின் உடை, உடல்மொழி, நடன அசைவுகள் மற்றும் உரையாடலில் உள்ள கொச்சைத்தனம் சற்று மிகைப்படுத்தப்பட்டிருந்ததாகத் தோன்றியது எனக்கு. ஆபாசத்திற்காக தன் படங்களில் சமரசம் செய்யக்கூடியவர் அல்ல பாலா. ஒரு வேளை படிப்பறிவில்லதவர்கள், கரகாட்டத்தைத் தவிர வேறு எதையும் சிறு வயதிலிருந்தே அறிந்திறாதவர்கள் அப்படித்தான் கொச்சையாகப் பேசுவார்கள் என்று பாலா சொல்கிறார் போல. நானும் கோவில் திருவிழாக்களில் கரகாட்டம் பார்த்திருக்கிறேன். கலைஞர்கள் இந்த அளவு குறைந்த உடைகள் </span><span style="color: #500050;">அ</span><span style="font-family: "verdana" , sans-serif;">ணி</span><span class="im" style="color: #500050;">ந்ததாக, எனக்கு நினைவில்லை. மனதில் பல கேள்விகள் எழுகிறது. ஒரு காலத்தில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்து இரசிக்கப்பட்ட கரகாட்டம் அல்லது தெருக்கூத்து இதுதானா? இல்லையென்றால் பாலா கண்பித்த இந்த கரகாட்டம் எந்த விதம்?</span><span style="color: #500050;"> </span></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<span class="im" style="color: #500050;">இளையராஜாவின் இசைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். அந்தமான் கோவில் திருவிழாவில் கரகாட்டக் குழு ஆடும் "வதன வதன வடிவேலா" பாடலி</span><span style="font-family: "verdana" , sans-serif;">ல்</span><span style="color: #500050;"> அடி தூள் கிளப்பிவிட்டார். அதே போல் "பாருருவாயா" பாடலில் நெஞ்சம் நெகிழவும் வைத்துவிட்டார். கதையின் களத்தோடு பின்னிப்</span></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<span class="im" style="color: #500050;">பி</span><span style="font-family: "verdana" , sans-serif;">ணை</span>ந்த இசை. </div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<br /></div>
<div style="background-color: white; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: #222222; font-family: "arial" , sans-serif;">ஆக</span><span style="color: #500050; font-family: "verdana" , sans-serif;"> </span><span class="im" style="color: #222222; font-family: "arial" , sans-serif;">மொத்தத்தில் இது அனைவரும் பார்க்கவேண்டிய படம் அல்ல. ஆனால் பார்த்தீர்களென்றால், சமுதாயத்தின் பிந்தங்கிய கலையின் மீதும் கலைஞர்களின் மீதும் ஒரு கனிவு பிறக்கும்...வசந்தபாலனின் "அங்காடித் தெரு" பார்த்தபின் துணிக்கடை தொழிலாளர்களின் மீது கனிவு ஏற்பட்டதைப் போல! </span><span style="color: #222222; font-family: "arial" , sans-serif;">. </span><br />
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
</div>
</div>
<span class="im" style="background-color: white; color: #500050; font-family: "arial" , sans-serif;"></span><span class="im" style="background-color: white; color: #500050; font-family: "arial" , sans-serif;"></span><span class="im" style="background-color: white; color: #500050; font-family: "arial" , sans-serif;"></span><br />
<div class="yj6qo ajU" style="background-color: white; color: #222222; cursor: pointer; font-family: arial, sans-serif; outline: none; padding: 10px 0px; width: 22px;">
<div aria-label="Show trimmed content" class="ajR" data-tooltip="Show trimmed content" id=":nr" role="button" style="background-color: #f1f1f1; border-image-outset: initial; border-image-repeat: initial; border-image-slice: initial; border-image-source: initial; border-image-width: initial; border: 1px solid rgb(221, 221, 221); clear: both; line-height: 6px; outline: none; position: relative; width: 20px;" tabindex="0">
<img class="ajT" src="https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif" style="background: url("//ssl.gstatic.com/ui/v1/icons/mail/ellipsis.png") no-repeat; height: 8px; opacity: 0.3; width: 20px;" /></div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9375592.post-4021894971371854962013-01-19T07:08:00.000-05:002013-01-19T07:30:34.920-05:00தமிழகப் பயணம் 2013 - மதுரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div>
மிக நீண்ட இடைவெளிக்குப் பின் சுறுசுறுப்பாக பதிவு எழுத வந்திருக்கிறேன். தற்போது திருச்சியில் இருக்கிறேன். இந்தத் தமிழகப் பயணத்தில் எனது அனுபவங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் முகநூலில் தினம் இரண்டு வரி குறுஞ்செய்தி இடுவதில் அதிக ஆர்வம் இருந்ததால் நீண்ட பதிவுகள் எழுத முடியவில்லை. என்னை மீண்டும் பதிவு எழுத வைத்தது மதுரை பயணம்! </div>
<div>
<br /></div>
<div>
திருச்சியில் ஒரு வாரம் எந்த வேலையுமின்றி சும்மா சாப்பிடுவதும் தூங்குவதுமாக பொழுதைக் கழித்துவிட்டு, கணவரின் குடும்பத்துடன் மதுரை சென்றேன். கோவிலும், கோவில் சார்ந்த நகரம் என்பதாலும், அது பொங்கல் சமையம் என்பதாலும், மதுரை ஆர்ப்பாட்டமும் கலகலப்புமாக இருந்தது. கோவில் சார்ந்த ஊரான சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு, மதுரை பழைய நினைவுகளை மீட்டுத் தந்தது.<span class="Apple-style-span" style="-webkit-composition-fill-color: rgba(175, 192, 227, 0.230469); -webkit-composition-frame-color: rgba(77, 128, 180, 0.230469); -webkit-tap-highlight-color: rgba(26, 26, 26, 0.296875);"> அலங்கநல்லூர் ஜல்லிகட்டு பார்ப்பதற்காகவே நிறைய வெளிநாட்டவர் வந்திருந்தனர். மூன்று வயது புகழ்மதியை பயணிக்கும் போது சமாளிக்க பல விதங்களில் திட்டமிட்டு, பல பொருட்களை வாங்கி, பல பைகளில் போட்டு, அவள் எந்த நேரத்தில் எதைக் கேட்பாளோ என்று நான் கவலைப்பட்டுக்கொண்டே மதுரை வீதிகளில் நடந்தபோது, ஒரு வெளிநாட்டுத் தம்பதியைப் பார்த்து அசந்து போனேன். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் - 4 முதல் பத்து வயது வரையில்! கணவனும் மனைவியும் ஆளுக்கொரு மிகப் பெரிய மூட்டையை முதுகில் சுமந்துகொண்டு நான்கு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் சென்றுகொண்டிருந்தார்கள். எனக்கு உண்மையில் மிக வியப்பாக இருந்தது! </span></div>
<div>
<br /></div>
<div>
நாங்கள் தங்கியிருந்தது மதுரை ரெசிடென்சி (Madurai Residency) என்கிற விடுதியில். மதுரைக்குச் செல்லுபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த விடுதியில் தங்கலாம். மிக அற்புதமான விடுதி அது. வரவேற்பு பகுதியில், பொங்கல் முன்னிட்டு பொங்கல் பானைகள், கரும்பு, மாடு பொம்மைகள், மாட்டு வண்டி என்று அலங்காரம் அபாரமாக இருந்தது. அமெரிக்காவில் ஒரு நல்ல விடுதியில் தங்கினால் ஒரு இரவுக்கு 100 டாலர்கள் வரும். இந்த விடுதி கிட்டத்தட்ட அமெரிக்கத் தரம் என்று சொல்லலாம். ஒரு இரவுக்கு 60 டாலர்கள் ஆனது. காலையில் "Complimentary breakfast " இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!</div>
<div>
<br /></div>
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் கூட்டம் அதிகப்படியாக இருந்ததால், கோவிலுக்குச் சற்று தொலைவிலேயே வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. கோவிலைச் சுற்றி இருந்த வீதிக்கு வந்தபோது, அங்கே கோலப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது! வீதியின் இரண்டு பக்கமும் பெண்கள் வண்ணமயமான ரங்கோலி கோலங்களை போட்டுக்கொண்டிருந்தார்கள். நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டியிருந்ததால், சிறு கொடை போன்ற தொப்பியை தலையில் அணிந்திருந்தார்கள். கோலங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கையில், புகழ்மதி திடீரென்று "அம்மா மிக்கி மவுஸ் பாரு" என்று குதூகலத்துடன் கத்தினாள். மதுரையில் எங்கே மிக்கி மவுஸ் வந்தது என்று பார்த்தால், அங்கே ஒரு பெண் மிக்கி மவுஸ் கோலம் போட்டிருந்தார்! எனக்கு அருகில் இருந்த பார்வையாளர் ஒருவர், "கோலத்தைப் போடச் சொன்னால், கார்ட்டூன் பொம்மையை வரைந்து வைத்திருக்கிறார்கள்" என்று அலுத்துக்கொண்டார். மற்றொரு பெண் "வின்னி த பூ" கோலம் போட்டிருந்தார். இந்த பெண்கள் எல்லாம் கல்லூரிப் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது.<br />
<div>
ஏன் இவர்கள் மற்றவர்கள் போல் பாரம்பரிய கோலங்களைப் போடவில்லை? இளம் வயதினர் புதுமையையும் மாற்றத்தையும் விரும்புவார்கள் என்பது தெரிந்ததே, ஆனால், மிக்கி மவுசுக்கும் புதுமைக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை.<br />
<br />
அந்தக் கோவிலைச் சுற்றி இருக்கும் வீதிகளில் தான் எத்தனை உயிரோட்டம்! அல்வா கடைகள், இட்லி கடைகள், பொம்மை கடைகள், துணிக்கடைகள்<span class="Apple-style-span">, இன்னும் பல! </span></div>
<div>
<br /></div>
<div>
கோவில் வாசலில் பாதுகாப்பு பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டோம். மீனாட்சி அம்மன் தரிசனத்திற்கு மிக நீண்ட வரிசை நின்றது. அந்தக் கூட்டத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு சமாளிப்பது சிரமம் என்பதால் கோவிலை ஒரு சுற்று நிதானமாக சுற்றி வந்து அங்கிருந்த குளத்தின் படிகட்டுகளில் அமர்ந்தோம். கோவில் கோவில் தான்! கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த பூசை மணிச் சத்தம், மந்திரம் ஓதுவது, விபூதி வாசனை, எரியும் நெய் விளக்குகள், கோபுரங்களின் கம்பீரம், எல்லாமே ஒரு பரவசத்தை ஏற்படுத்துகிறது! </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br />
<div>
<br /></div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9375592.post-81082970023548578742012-07-12T07:50:00.001-04:002012-07-12T07:50:18.950-04:00FeTNA 2012 வெள்ளி விழா: உள்ளே - வெளியே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வெள்ளி விழா முடிந்து பால்டிமோரில் இருந்து எங்கள் வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் ஆகின்றன. ஆனால் மனமும் நினைவும் மட்டும் இன்னும் பால்டிமோரிலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறது. மூன்று நாட்களாக எங்கு திரும்பினாலும் தமிழ் நண்பர்கள், உறவுகள், கலைஞர்கள், அறிஞர்கள் என்று இருந்துவிட்டு, இப்போது தனிமையாக உணர்கிறேன்.<br />
<br />
வெள்ளி விழா நிகழ்ச்சிகளைப் பற்றி எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். நான் எழுதப் போவது மேடையில் நிகழாத சில காட்சிகளைப் பற்றி மட்டுமே. இந்தக் காட்சிகள் என் கண்களில் பட்டதற்கு காரணம், என் மகள் புகழ்மதி. அவள் அரைமணி நேரத்திற்கு மேல் அரங்கில் உட்கார மறுத்ததால், நான் அவளை மேய்த்துக்கொண்டு பாதி நேரம் அரங்கின் வெளியில் தான் சுற்றிக்கொண்டிருந்தேன். அவ்வப்போது அரங்கினுள் எட்டிப் பார்த்து சில நிமிடங்கள் உள்ளே நடந்த நிகழ்ச்சிகளையும் காண முடிந்தது. <br />
<br />
உள்ளே - நடனங்கள், பாடல்கள், பட்டிமன்றம், விவாதம், உரை வீச்சு...<br />
<br />
வெளியே - உழைப்பு, வியர்வை, பதட்டம், பொறுப்பு, கவனம், கண்டிப்பு...<br />
<br />
அரங்கின் வாசலில் கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால் தகிக்கும் வெயிலில் வியர்வையை அவ்வப்போது துடைத்துக்கொண்டே ஒரு தன்னார்வலர் நின்று கொண்டிருந்தார். அரங்கிலிருந்து வெளியேறுபவர்களிடம் ஓடிச் சென்று "நீங்கள் விடுதிக்குச் செல்கிறீர்களா?" என்று கேட்டு அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் அவர்களை ஏற்றி அனுப்புவார். சில சமையம் விடுதியின் வாசலில் நின்று அங்கிருந்து அரங்கிற்கு வருபவர்களை பேருந்தில் ஏற்றி அனுப்பிக்கொண்டிருப்பார். ஆக இந்த மூன்று நாட்களுமே, பிற்பகல் 12 மணியாக இருந்தாலும் சரி, இரவு 12 மணியாக இருந்தாலும் சரி, இந்த போக்குவரத்துக் குழுவைச் சேர்ந்தவருக்கு வெள்ளி விழா என்பது அந்த வாசலிலேயே முடிந்துவிட்டது.<br />
<br />
வந்திருக்கும் பிரபலங்களை கவனிப்பதற்காக அரக்கப் பரக்க அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள் வரவேற்புக் குழுவினர். பிரபலங்கள் எங்கு போனாலும் அவர்கள் கூடவே போவது, காபி வாங்கிக்கொடுப்பது, சாப்பாடு தட்டில் போட்டு கொடுப்பது, அவர்கள் தொலைபேச விரும்பினால், தொலைபேசியில் எண்களைப் போட்டு அவர்கள் கையில் கொடுப்பது, அவர்களுக்குத் தேவைப்படக்கூடும் மருந்து மாத்திரைகளை தம் கைப்பைகளில் சுமந்து கொண்டு திரிந்தார்கள். . அவர்களில் பலர் முனைவர்கள் மற்றும் பொறியாளர்கள். ஆனால் அந்த மூன்று நாட்களுமே சுய கெளரவம் பார்க்காமல் கிட்டத்தட்ட பணிப்பெண்களாக மாறியிருந்தார்கள். நான் இரவு 12 மணிக்கு விடுதி அறைக்கு தூங்கச் செல்லும்போது, பின்னிரவு விமானத்தில் வந்திறங்கிய சின்னத்திரை சிவகார்த்திகேயனை வரவேற்க, கையில் பூங்கொத்துடனும், தூக்கம் விரட்டிய கண்களுடனும் விடுதி வாசலில் கால் கடுக்க நின்று கொண்டிருந்தார்கள் இந்த வரவேற்புக் குழுவினர்.<br />
<br />
சாரை சாரையாக விழாவிற்கு வந்திறங்கும் மக்கள் கூட்டம் நேராகச் சென்றது பதிவு மேசைக்குத்(Registration desk) தான். ஒவ்வொருவரின் பெயரையும், பதிவையும் கணிணியில் சரிபார்த்து அவர்களுக்குச் சேரவேண்டிய விழா மலர், அடையாள அட்டை மற்றும் இத்யாதிகளை அவர்களிடம் கொடுத்து அனுப்பிக்கொண்டே இருந்தார்கள் பதிவுக் குழுவினர். இரண்டாம் நாள் பிற்பகல் வரை இந்த மக்கள் கூட்டம் குறையவேயில்லை. மொத்தப் பதிவின் எண்ணிக்கை 2000, 2100, 2200 என்று கூடிக்கொண்டே வந்தது பரபரப்பாகவும், உற்சாகமாகவும் இருந்தது. <br />
<br />
சாப்பிடலாமென்று உணவுக்கொட்டகைக்குச் சென்றேன். மின் விசிறிகளையும் மீறி வெப்பம் முகத்தில் அறைந்தது. அதிலும், பட்டுப்புடவைக்கும், பட்டு வேட்டி-சட்டைக்கும் மேல் "apron" கட்டி, கையுறை அணிந்த உணவுக் குழு பெண்களும் ஆண்களும் பதட்டத்துடன் காணப்பட்டார்கள். உணவு வர தாமதமாகிறது...வெளியே வரிசையில் பசியுடன் உணவுக்காக காத்த்துக்கொண்டிர்ந்தவர்கள் பொறுமையிழந்துகொண்டிருந்தார்கள்...அவர்களை சமாளிக்கவேண்டும், வந்திறங்கும் உணவுவகைகளை ஆறு உணவு மேசைகளில் துரிதமாக அடுக்கி, உணவு பறிமாற வந்த தன்னார்வளர்களை வரிசையாக, தயாராக நிறுத்தி வைக்கவேண்டும். கதவைத் திறந்தவுடன் உள்ளே நுழையும் இரண்டாயிரம் பேரை ஒன்றரை மணி நேரத்திற்குள் சாப்பிட வைத்து அங்கிருந்து வெளியே அனுப்ப வேண்டும். அபரிமிதமான உழைப்பு அங்கே தேவைப்பட்டது. அங்கே நடந்த "team co-ordination" பார்த்து நான் அசந்து போனேன். ஒருவர் "சட்னி தீர்ந்துவிட்டது" என்று குரல் கொடுப்பார். உடனே மற்றொருவர் ஓடி வந்து சட்னி பாத்திரத்தை நிறைப்பார். ஒருவருக்கு வியர்வை ஊற்றினால் மற்றொருவர் துண்டை எடுத்து துடைத்துவிடுவார். எங்கிருந்தோ சில தன்னார்வத் தொண்டர்கள் வந்து "இங்கு யாராவது களைப்பாக இருந்தால் சொல்லுங்கள், உங்களிடத்தில் நாங்கள் பறிமாறுகிறோம்" என்பார்கள். வயதான பெண்மனி ஒருவர் இரண்டு நாட்களுமே அங்கே நின்று சாப்பிட வருபவர்களுக்கு தட்டு எடுத்து கொடுத்துக்கொண்டிருந்தார். அவரிடம் நான் தட்டு வாங்கும் போது கூனிக் குறுகிப் போனேன். என் வயதென்ன...அவர் வயதென்ன? நான் உட்கார்ந்து சாப்பிடுகிறேன்...அவர் கால் கடுக்க நின்று சேவை செய்துகொண்டிருக்கிறார்! எனக்கு சாப்பாடு தொண்டைக் குழியில் இறங்க மறுத்தது.<br />
<br />
சில குழுக்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் என் கண்களுக்குத் அந்த இரண்டு நாட்களுமே தென்படவில்லை. ஆனால் அந்த பிரமாண்டமான அரங்க மேடையின் திரைச் சீலைக்குப் பின் ஒரு சிறு உலகமே இயங்கிக்கொண்டிருந்ததை உணர முடிந்தது. நிகழ்ச்சிக்குழு, மேடை நிர்வாகக் குழு, மற்றும் அரங்க குழுவைச் சேர்ந்தவர்கள் அங்கே நிகழ்ச்சிகள் சரியான நேரத்திற்கு தொடக்கி சரியான நேரத்திற்கு முடித்து வைக்க அயராது உழைத்துக்கொண்டிருந்தார்கள். உணவுக் கொட்டகைக்கு கடைசியாக களைப்பாக சாப்பிட வருபவர்கள் இவர்கள் தான். அடுத்த நிகழ்ச்சி தொடங்குமுன் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு பின் மீண்டும் அந்த திரைச் சீலைக்கு பின் சென்று மறைந்துவிடுவார்கள் இவர்கள். <br />
<br />
இன்னும் பல குழுக்கள் இரவு பகல் பாராது இந்த பேரவை வெள்ளி விழாவிற்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள், ஆனால் என் கண்முன் தென்பட்ட காட்சிகளை மட்டுமே இங்கே என்னால் விவரிக்க முடிந்தது. தமிழ் சங்கம், தமிழ்ச் சங்கப் பேரவை என்றாலே தமிழர்களெல்லாம் ஒன்று கூடி கும்மி அடிக்கும் இடம் என்று நெஞ்சில் ஈரம் இல்லாமல் குறை கூறுபவர்களையெல்லாம் தாண்டிச் சென்றுவிட்டார்கள் இந்தச் தமிழ் சமூகத்தினர்.<br />
<br />
உள்ளே நடந்த பல்சுவை நிகழ்ச்சிகள் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் "புறம்" என்றால், வெளியே நடந்த இந்த நெகிழ்வான நிகழ்ச்சிகள் பேரவையின் "அகம்" என்று சொல்லலாம். <br />
<br />
அடுத்த ஆண்டு விழா - வேறொரு நகரில், வேறொரு அரங்கில், வேறு பல தன்னார்வலர்களால் நடத்தப்படும். ஆனால் நான் இங்கே விவரித்த காட்சிகள் மட்டும் மாறாது. அது ஒவ்வொரு ஆண்டும் தொடரும்.<br />
<br />
எந்த வேலையும் செய்யாமல், மகளின் பின் ஓடியே கால் வலித்து களைத்து போனேன் நான். ஆனால் ஒரு மிகப் பெரிய விழாவை நடத்தி முடித்துவிட்டு அமைதியாக அடுத்த நாள் வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் நம் தமிழ்க் குடும்பங்களை நினைத்தால் மிகப் பெருமையாக இருக்கிறது. <br />
<br />
நான் பார்த்து இரசித்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.<br />
<br />
<br />
<br />
<br /></div>Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9375592.post-4514628942543753212012-05-20T01:47:00.000-04:002012-05-20T09:20:53.831-04:00இறால் மொறுவல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
இறால் வறுவல் என்று தான் சொல்வார்கள். ஆனால் அது என்ன "மொறுவல்"? நல்ல மொறு மொறுப்பான இறால் கறி வேண்டுமென்றால் இதைச் செய்து பாருங்கள்.<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCJpb6k7Z9bcaLuPuAnOufIJ33emTsFG5nc52_zKVfG-zcarkhhA3O4yVtFz8wP_iT-NayEQns0P_oQ1ahVjXGHz4YqzI-xSrcfVRsS4NeSqWjG1PUC6aJDZjlKWMNp_k-f7z2/s1600/IMG_1879.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCJpb6k7Z9bcaLuPuAnOufIJ33emTsFG5nc52_zKVfG-zcarkhhA3O4yVtFz8wP_iT-NayEQns0P_oQ1ahVjXGHz4YqzI-xSrcfVRsS4NeSqWjG1PUC6aJDZjlKWMNp_k-f7z2/s200/IMG_1879.jpg" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தேவையான பொருட்கள்</td></tr>
</tbody></table>
<b><u><span class="Apple-style-span" style="font-size: large;">இறால் மொறுவல்</span></u></b><br />
<br />
<b><u>தேவையான பொருட்கள்:</u></b><br />
1. தோலுரித்த இறால் - 1/2 கிலோ<br />
2. ஒரு பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது)<br />
3. இரண்டு சிறிய தக்காளிகள்(சிறிய துண்டுகளாக நறுக்கியது)<br />
4. இரண்டு பச்சை மிளகாய் - நறுக்கியது<br />
5. இஞ்சி-பூண்டு விழுது - இரண்டு மேசைக் கரண்டி<br />
6. மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி<br />
7. கொத்தமல்லித் தூள் - மூன்று தேக்கரண்டி<br />
8. கருவேப்பிலை - ஒரு சிறிய கொத்து<br />
9. மஞ்சள் பொடி - இரண்டு தேக்கரண்டி<br />
10. உப்பு தேவையான அளவு<br />
<br />
<b><u>செய்முறை:</u></b><br />
<b><u><br /></u></b><br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiO1tyOLP8FEwHpzJmQ6fo5AU2oszXx6PX5hXmuq65wQIbddWIjzsctKgzOALRqyP1nb6KGG6wtDkoXFWlwqLwMZhLYIwnbrGA-2l7Zg18TRTnrUEMFPLhEhIOZtc_cHhGngBML/s1600/IMG_1877.JPG" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiO1tyOLP8FEwHpzJmQ6fo5AU2oszXx6PX5hXmuq65wQIbddWIjzsctKgzOALRqyP1nb6KGG6wtDkoXFWlwqLwMZhLYIwnbrGA-2l7Zg18TRTnrUEMFPLhEhIOZtc_cHhGngBML/s200/IMG_1877.JPG" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மஞ்சல் தூள் கலந்து வதங்கும் இறால்</td></tr>
</tbody></table>
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDZU4H89ETo7stG46anIodcClyXfEfQMf1KgHMuxRf_3BGbe7u7rx1Bw-0EclAYcQmXldcgPvpHqwe9gDHyP019WYFlIFQLsee6MT5U3SRq0BTU6XczAL78nWByHr8YtOtJgdE/s1600/IMG_1878.JPG" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDZU4H89ETo7stG46anIodcClyXfEfQMf1KgHMuxRf_3BGbe7u7rx1Bw-0EclAYcQmXldcgPvpHqwe9gDHyP019WYFlIFQLsee6MT5U3SRq0BTU6XczAL78nWByHr8YtOtJgdE/s200/IMG_1878.JPG" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தண்ணீர் வற்ற வதங்கிய இறால்</td></tr>
</tbody></table>
இறாலை சுத்தம் செய்து, மஞ்சள் தூள் கலந்து, எண்ணை விடாமல் வாணலியில் போட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். <br />
<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUvxZHhGxx770AEwYXh-XbKKIhc93_bG7g8aSWSkL13zaez0We0p8XkN-Ubtt5p5cLpiKXQuPxjI5G2KtLtXEohgk-WZWJh0P_SdnlLY1XTRRBtSRVKTbN55HA_eahhhBpp5oj/s1600/IMG_1881.JPG" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUvxZHhGxx770AEwYXh-XbKKIhc93_bG7g8aSWSkL13zaez0We0p8XkN-Ubtt5p5cLpiKXQuPxjI5G2KtLtXEohgk-WZWJh0P_SdnlLY1XTRRBtSRVKTbN55HA_eahhhBpp5oj/s200/IMG_1881.JPG" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தே.பொருட்களுடன் வதங்கும் இறால்</td></tr>
</tbody></table>
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXKuz6bcpVRwXv3QL2IarzhPdJslaGYhhY3mXpX65gTYXtckmzHRpmTrO2XluNFPcFghn_2khxrPkx63AlauNmEOxXsZH8DWpxQszYgHbGCObXJy3aArbSnMMfMIMuBQWfjPl-/s1600/IMG_1880.JPG" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXKuz6bcpVRwXv3QL2IarzhPdJslaGYhhY3mXpX65gTYXtckmzHRpmTrO2XluNFPcFghn_2khxrPkx63AlauNmEOxXsZH8DWpxQszYgHbGCObXJy3aArbSnMMfMIMuBQWfjPl-/s200/IMG_1880.JPG" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ஊறவைக்கப்பட்ட இறால்</td></tr>
</tbody></table>
<div>
வதங்கிய இறாலுடன், தேவையான பொருட்கள் அத்தனையையும்</div>
<div>
(2 to 10) கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணை விட்டு சூடானதும், இறால் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். </div>
<br />
<br />
எல்லா பொருட்களும் நன்றாக வதங்கி சேர்ந்து வரும். சற்று மசாலா போல் வேண்டுமென்றால் அந்தப் பதத்தில் அடுப்பை நிறுத்திவிடலாம். நன்றாக மொறு மொறுப்பாக வேண்டுமென்றால், இன்னும் கூடுதலாக வதக்கினால் மொறு மொறு பதம் வந்துவிடும்! இந்த இறால் வறுவலை, நேற்றைய பதிவில் செய்த சொதியுடன் சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும். <br />
<b><u><br /></u></b><br />
<b><u><br /></u></b><br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMJ0KkdZgXhWslk1VsBoG5mbcLndiIeEpD4WA9ysH_tdcx4LTKbBjAtAYcTsIdSeP40muwc32eh8CJoF9-AGd148Y8CxYh7upiyidR0rwE90PG3LDA9rmdmDM2vJH1aa6KI9Yl/s1600/IMG_1887.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMJ0KkdZgXhWslk1VsBoG5mbcLndiIeEpD4WA9ysH_tdcx4LTKbBjAtAYcTsIdSeP40muwc32eh8CJoF9-AGd148Y8CxYh7upiyidR0rwE90PG3LDA9rmdmDM2vJH1aa6KI9Yl/s320/IMG_1887.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">இறால் மொறுவல்</td></tr>
</tbody></table>
<br />
<br /></div>Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-9375592.post-56140618204011833592012-05-20T00:56:00.000-04:002012-05-20T03:44:57.203-04:00அவள் ஏன் சமூகவியலைத் தேர்ந்தெடுத்தாள்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சமூக சேவை பலர் பல வகையில் செய்கிறார்கள். சிலர் தொண்டு நிறுவனங்களுக்கோ, தனிப்பட்ட நபருக்கோ பணம் அனுப்புவார்கள். சிலர் ஒரு தொண்டு நிறுவனத்தில், சில மணி நேரங்கள் வேலை செய்வார்கள். சிலர் ஒரு சம்பவத்தின் போது அந்த இடத்திற்கே நேரில் சென்று அங்கே வேண்டிய உதவிகள் செய்வார்கள். ஆனால், இந்தச் சமூகச் சேவையையே முறையாகப் பயின்று, பட்டம் பெற்று வாழ்நாள் முழுவதும் சமூகச் சேவை செய்வதென்று ஒருவர் முடிவெடுப்பது என்பது என்னைப் பொறுத்தவரை பெரிய விசயம். உண்மையிலேயே சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உடையவர்கள் தான் இப்படி ஒரு எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.<br />
<br />
அப்படி ஒரு தேர்வை, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த என் அக்கா மகள் செய்தபோது, குடும்பத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. மற்ற இரு பிள்ளைகளைப் போல் மருத்துவம் படிக்காமல் சமூகவியலை படித்து என்ன செய்யப் போகிறாள்? காலம் பூராக குறைந்த சம்பளத்திற்குத் தானே வேலைக்குப் போகமுடியும்? என்றெல்லாம் குடும்பத்தினர் வருந்தினார்கள். ஆனால் அக்கா மகள் தன் முடிவில் திடமாக இருந்தாள். சமூகவியல் தான் தனக்குச் சரியான துறை என்று மனதிற்குத் தோன்றுகிறது என்றும், எனவே அந்தப் பாதையில் தான் செல்ல விரும்புகிறேன் என்றும் சொல்லிவிட்டாள். இப்போது சமூகவியலில் முதுகலைப் பட்டம் படித்து முடிக்கவும் போகிறாள். <br />
<br />
எனக்கு அவளை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. ஏன் அவள் காலம் பூராக சமூகப் பணி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்? அவளிடமே கேட்டு அதனை ஒரு பதிவாகப் போடலாம் என்று தோன்றியது. <br />
<br />
இதோ அவளிடம் ஒரு கேள்வி - பதில் அமர்வு.<br />
<br />
<b>கேள்வி: சிறு வயதிலிருந்தே இந்த சமூக சேவை உணர்வு உனக்கு இருந்ததா?</b><br />
<br />
<b>பதில்:</b> இருந்தது என்று தான் நினைக்கிறேன். சிறு வயதிலேயே மற்றவர்களின் உணர்வுகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பேன். பள்ளியில் என் நண்பர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், முதலில் என்னை நாடித் தான் வருவார்கள். அவர்கள் மனம் விட்டுப் பேசுவதை நான் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்பேன். அவர்களின் சிக்கலான சூழ்நிலைகளில் அவர்களுக்குத் தோள் கொடுப்பதில் என் பங்கை நான் என்றுமே பெருமையாக நினைப்பதுண்டு. என்னிடம் நிறைய அன்பு இருக்கிறது. அன்பிற்காக ஏங்கும் மற்றவர்களிடம் அதனை பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். <br />
<br />
<b>கேள்வி: சமூகத்தில் எந்தப் பிரிவினருக்காக நீ உதவ நினைக்கிறாய்?</b><br />
<br />
<b>பதில்:</b> எனது இளம் வயதில் என் மீது அன்பும் அக்கறையும் காட்ட எனக்கு ஒரு நல்ல குடும்பம் இருந்தது. ஆனால் பெற்றோர்களின் வழிநடத்தல் இன்றி, எந்தவிதமான இலக்கும் இன்றி அந்த முக்கியமான ஆனால் ஆபத்தான பருவ வயதை தனியாக கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள் பல இளம் வயதினர். அவர்கள் மிகத் தனிமையாகவும், இந்தச் சமூகத்திற்கு வேண்டப்படாதவர்களாகவும் உணர்கிறார்கள். யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சிறு அக்கறை காட்டினாலே, அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அவர்களை நல்லவழியில் நடத்திச் செல்ல, அவர்களுக்கென்று ஒரு எதிர்காலம் இருக்கிறது என்பதை விளக்க, அவர்களுடைய இலக்குகளும் கனவுகளும் கூட தகுதியுடையவை என்பதைக் புரியவைக்க நம்பிக்கையான ஒருவர் தேவை. இந்த பலவீனமான இளம் பருவத்தினருக்கு நான் ஆலோசகராக(counselor) இருக்க விரும்புகிறேன். <br />
<br />
<b>கேள்வி: சமூகப் பணியே உனது வாழ்க்கைத் தொழிலாக இருக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பது எந்த அளவு சிரமமாக இருந்தது?</b><br />
<br />
<b>பதில்:</b> அமெரிக்க இந்தியக் குடும்பங்களில் பிள்ளைகள் மருத்துவம் அல்லது பொறியியலையே மேற்படிப்பாக படிக்க வேண்டும் என்றே இன்னமும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்புகளை மீறி நான் விரும்பியதைப் படிக்கவேண்டும் என்பதை முடிவு செய்வது மிகக் கடினமாகத் தான் இருந்தது. பள்ளி இறுதி ஆண்டு மற்றும் இளங்கலை வருடங்களில், நான் மருத்துவக் கல்லூரிக்குத்தான் என்னை வலுகட்டாயமாக தயார் படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் அது எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அறிவியலில் எனக்குப் பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை. அறிவியல் கல்வியும் மக்களுக்குச் சேவை செய்ய உதவும் என்றாலும், நான் விரும்பியது நேரடியாக, உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதையே. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் எதிர்பார்ப்புகளைத் தாண்டி, என் மனதிற்குப் பிடித்ததை, எனக்கு சரி என்று பட்டதை செய்ய மிகுந்த மனோதிடமும் துணிவும் தேவைப்பட்டது. நான் இந்த முடிவை எடுத்ததால் சிலர் மனதை புன்படுத்தியிருக்கலாம், ஆனால் பலர் வாழ்க்கையில் என் முடிவு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.<br />
<br />
<b>கேள்வி: MSSW(Master of Science in Social Work) என்கிற பட்டம் வாங்கியவர்கள் எந்த மாதிரியான பணியில் ஈடுபடுவார்கள்?</b><br />
<b><br /></b><br />
<b>பதில்: </b>சமூகப் பணியாளர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று, நேரடிச் சேவைகளில்(Direct Services) ஈடுபடுபவர்கள். இவர்கள் தமது வாடிக்கையாளர்களின் அன்றாடப் பிரச்சினைகளை சந்திக்க உதவுகிறார்கள். அதாவது வேலை தேட, அரசு உதவிக்கு விண்ணப்பிக்க, அவர்களது நிதி நிலமையை சரிசெய்ய போன்றவற்றிற்கு ஒரு திட்டம் வகுத்து தருகிறார்கள். பின்னர் அந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் சரியாக கடைபிடிப்பதற்கும் தொடர்ந்து உதவுகிறார்கள்.<br />
<br />
மற்றொரு வகையான சமூகப் பணி, மருத்துவம் சார்ந்த சேவை(clinical services). இந்தத் துறையில் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்களுக்கு மனநலம் சம்மந்தப்பட்ட சிகிச்சை அளிக்கிறார்கள். இந்தச் சேவையை அவர்கள் ஒரு தனி நபருக்கோ, அல்லது ஒரு குடும்பத்திற்கோ செய்கிறார்கள். பலர் பள்ளிகளில் மனநல ஆலோசகர்களாகவும் பணிபுரிகிறார்கள்.<br />
<br />
<b>கேள்வி: குழந்தைகளின் நலனுக்காக எந்த வகையில் இந்தச் சமூகப் பணியாளர்கள் உதவ முடியும்?</b><br />
<br />
<b>பதில்:</b> வீட்டிலேயே வன்முறைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகளை பாதுகாக்கும் அரசு நிறுவனங்களில் நிறைய சமூகப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். சிக்கலான குடும்பச் சூழலில் வளரும் குழந்தைகளை இவர்கள் கண்கானித்து அந்தக் குடும்பத்தில் சிக்கலை ஆசோசனை மூலம் போக்கிவிடலாமா அல்லது அந்த குடும்பத்திலிருந்து குழந்தையைப் பிரித்து பாதுகாப்பில் வைக்கவேண்டுமா என்று அந்த அரசு நிறுவனத்திற்கு சிபாரிசு செய்வார்கள். இப்படி குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வளர்ப்புப் பெற்றோர்களை(foster parents) அடையாளம் கண்டு, அந்தப் பெற்றோர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள்.<br />
<br />
மேலும், ஒவ்வொரு பள்ளியிலும், குறைந்தபட்சம் ஒரு சமூகப் பணியாளர் குழந்தைகளுக்கான மனநல ஆலோசகராக வேலை செய்வார்.<br />
<br />
<b>கேள்வி: சமூகப் பணியாளர்கள் தம் பணியில் சந்திக்கக்கூடிய சவால்கள் என்ன? </b><br />
<br />
<b>பதில்: </b>சமூகப் பணிகளில் தேவைகள் மிக அதிகப்படியாக இருக்கும், ஆனால் அந்தப் பணிகளைச் செய்யும் ஆட்கள் குறைவாகத் தான் இருப்பார்கள். அதனால் பணி அழுத்தம் கூடுதலாக இருக்கும். மேலும், வாழ்க்கையில் பல வகையில் பாதிக்கப்பட்ட நபர்களுடன் வேலை செய்வதால், அது உணர்வு பூர்வமாகவும் ஒரு சவாலாக இருக்கும். தமது சொந்த வாழ்க்கையில் சிக்கல்கள் இருப்பவர்களுக்கு, இந்த சமூகப் பணியில் ஈடுபடுவது ஒரு மிகப் பெரிய சவால். இந்தத் துறையில் பணியில் இருப்பவர்களுக்கு ஊதியம் குறைவாகவே இருக்கும். உண்மையிலேயே சமூகச் சேவை செய்வதில் முழு உடன்பாடும் ஆர்வமும் இருப்பவர்களால் மட்டுமே இந்தப் பணிகளில் ஈடுபட முடியும்.<br />
<br />
<b>கேள்வி: ஒரு முழு நேர சமுகப் பணியாளராக மாற நீ தயாரா?</b><br />
<br />
<b>பதில்:</b> முழு மனதுடன் தயார். எப்படா படிப்பை முடித்துவிட்டு இந்தச் சமூகத்துடன் ஒன்றரக் கலக்கலாம் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் பூமியில் வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்டவர்கள். ஆனால் எல்லோரும் சமமாகவும் நியாயமாகவும் நடத்தப்படவேண்டியவர்கள். என்னுடைய பொறுமை, திறந்த மனப்பான்மை, புரிந்துணர்வு, சமூக அக்கறை போன்ற குணங்களெல்லாம், என்னை ஒரு சிறந்த சமூகப் பணியாளராக உருவாக்கும் என்று நம்புகிறேன்.<br />
--------------------------------------------------------------------------------<br />
<br />
நான் பார்த்து வளர்ந்த என் அக்கா மகள், இவ்வளவு பொறுப்பாகப் பேசுவதைக் கேட்டு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதிக ஊதியம் கிடைக்காது, விலை உயர்ந்த காரோ செல்பேசியோ வைத்துக்கொள்ள முடியாது, ஏசி அறையில் ஜம்மென்று அமர்ந்து வேலை செய்ய முடியாது...இதெல்லாம் தெரிந்தும், மக்களுக்கு சேவை செய்வதையே தன் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அவள், என் குடும்பத்தில் ஒருத்தி என்று சொல்லிக்கொள்ளவே எனக்குப் பெருமையாக இருக்கிறது. <br />
<br />
<br /></div>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9375592.post-88994802427958608302012-05-19T00:00:00.000-04:002012-05-19T00:00:31.304-04:00இருபது நிமிடத்தில் ஒரு குழம்பு - சொதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அமெரிக்கத் தொலைகாட்சியில் Food Network நிகழ்ச்சிகள் பார்ப்பது என்னுடைய இன்னொரு பொழுதுபோக்கு. Rachel Ray என்கிற சமையல் கலை நிபுணரின் "30 minute meals" என்கிற நிகழ்ச்சியில் 30 நிமிடத்திற்குள் விரைவாக செய்யக்கூடிய உணவு வகைகளை சுறுசுறுப்பாக அவர் செய்து காட்டுவது எனக்கு ஒரு மிகப் பெரிய உத்வேகமாக இருக்கும். <br />
<br />
அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், அன்று என்ன இரவு உணவு செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே வருவேன். சமையலில் எனக்கு ஆர்வம் இருந்தாலும், வார நாட்களில் அதிக நேரம் சமையலறையிலேயே இருப்பது அலுப்பாக இருக்கும். விரைவில் சமைத்து முடித்துவிட்டால் பின் மகளுடனும் கணவருடன் நேரம் செலவழிக்கலாமே. நம்ம ஊர் உணவு வகைகளில் விரைவாக செய்யக்கூடியவை என்று சிலவற்றை குறித்து வைத்திருக்கிறேன்.<br />
<br />
அப்படி விரைவாக, அதுவும் இருபது நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு குழம்பு வகை "சொதி". இது இலங்கையில் எல்லோர் வீட்டிலும் செய்வார்கள். கேரளாவிலும் பிரபலம். அம்மா, அண்ணி இவர்களெல்லாம் இலங்கையில் வளர்ந்தவர்கள் என்பதால் எங்கள் வீட்டில் அடிக்கடி சொதி உண்டு! இந்தப் பதிவை எழுதுவதற்காகவே நேற்று சொதி வீட்டில் செய்தேன். ஆனால் இந்தச் சொதியை நம்ம ஊரில் செய்வது போல் பாரம்பரிய முறையில் செய்தால் 20 நிமிடங்களில் முடிக்க முடியாது. நான் சொல்வது போல் செய்தால் தான் விரைவில் செய்து முடிக்கலாம். இதோ புகைப்படங்களுடன் செய்முறை...<br />
<br />
<u><b>தேங்காய் பால் சொதி</b></u><br />
<u><b><br /></b></u><br />
<u>தேவையான பொருட்கள்</u><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXoVVZ-vUwLJBcvv7Eq2E2MCEXw8WDNx2me2SdsALRh5Lmh29Ykbczw9Bk-5XZRu1nWRy4zWhN6JvEGqHS8yKkdlhN5p90nfq6ThdTcGcMCLNifv5ont6EQ55_d6r8HfYD6okv/s1600/IMG_1882.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXoVVZ-vUwLJBcvv7Eq2E2MCEXw8WDNx2me2SdsALRh5Lmh29Ykbczw9Bk-5XZRu1nWRy4zWhN6JvEGqHS8yKkdlhN5p90nfq6ThdTcGcMCLNifv5ont6EQ55_d6r8HfYD6okv/s200/IMG_1882.JPG" width="200" /></a></div>
<u><br /></u><br />
1. பெரிய வெங்காயம் - ஒன்று (சற்றி பெரிய துண்டுகளாக நறுக்கியது)<br />
<span class="Apple-style-span" style="color: red; font-size: x-small;">ஊரில் சின்ன வெங்காயம் உபயோகிப்பார்கள். அதை உரிக்க சில கூடுதல் நிமிடங்கள் தேவைப்படும்.</span><br />
2. தக்காளி சிறியது - இரண்டு<br />
3. பச்சை மிளகாய் - ஐந்து<br />
4. தேங்காய் பால் - ஒரு டப்பா (can)<br />
<span class="Apple-style-span" style="color: red; font-size: x-small;">ஊரில் தேங்காய் துருவி அரைத்து பால் எடுப்பார்கள். நமக்கு எங்கே அதுக்கெல்லாம் நேரம்? </span><br />
5. கருவேப்பிலை - ஒரு சிறிய கொத்து<br />
6. மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி<br />
7. உப்பு - தேவையான அளவு<br />
8 தாளிக்க வேண்டிய கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணை<br />
<br />
<b><u>செய்முறை</u></b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJDYJzi8kdXT4NRMVPDFK8Rro0U9AtiWHMCiYD6uoQ4iTAA57S0UdkUx2gMjqRIQf_uV5snepwmJzyKf6tRWRDbLliUyFcg4SKJ8t4qAUTxmXvCDpi7AGAux7ajtlW5mUfVgJi/s1600/IMG_1884.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJDYJzi8kdXT4NRMVPDFK8Rro0U9AtiWHMCiYD6uoQ4iTAA57S0UdkUx2gMjqRIQf_uV5snepwmJzyKf6tRWRDbLliUyFcg4SKJ8t4qAUTxmXvCDpi7AGAux7ajtlW5mUfVgJi/s200/IMG_1884.JPG" width="200" /></a></div>
<b><u><br /></u></b><br />
வானலியில் எண்ணை காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு மீண்டும் நன்றாக வதக்கவும். இப்போது ஒரு கேன் தேங்காய்ப் பாலுடன் அரை தம்ளர் தண்ணீர் கலந்து வாணலியில் ஊற்றவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிடவும். சுவையான சொதி தயார். இதனை சாதம், இடியாப்பம் போன்றவற்றுடன் சாப்பிடலாம்.<br />
<u><br /></u><br />
<div class="" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEmgHJN287XHnXba7hSGveHE3qEzq9I0zM7RDuRdVdAqYzW2paVYfL96hHAMlQajBcIkw8eNqAtoxr6IyRcAQmGrm5vQF208fC8WHMf-iBtbDGkAXlMJ8NZl-UnL5TOkLzObtO/s1600/IMG_1885.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEmgHJN287XHnXba7hSGveHE3qEzq9I0zM7RDuRdVdAqYzW2paVYfL96hHAMlQajBcIkw8eNqAtoxr6IyRcAQmGrm5vQF208fC8WHMf-iBtbDGkAXlMJ8NZl-UnL5TOkLzObtO/s200/IMG_1885.JPG" width="200" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf2qPAG_LzSc7vHBhyphenhyphenhq5js3iMHVplMq2bW5BbmR1RdGQtuBqxPrA-AjTDnD5xPTskTwIRVxwkiiO-UQ6ql_pMvxlCdM6lyEdZUBtGB-TCYu0YYRLuw8UcTkppcGEzkAV8LM4S/s1600/IMG_1886.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf2qPAG_LzSc7vHBhyphenhyphenhq5js3iMHVplMq2bW5BbmR1RdGQtuBqxPrA-AjTDnD5xPTskTwIRVxwkiiO-UQ6ql_pMvxlCdM6lyEdZUBtGB-TCYu0YYRLuw8UcTkppcGEzkAV8LM4S/s200/IMG_1886.jpg" width="150" /></a></div>
<br /></div>Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-9375592.post-42975975365784035262012-05-18T23:29:00.001-04:002012-05-18T23:30:15.996-04:00ஒரிகாமி - ஜப்பானிய காகிதக் கலை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
மழை நாட்களில் காகிதக் கப்பல் செய்து சாலையோரத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மிதக்க விடாத குழந்தைகளே இருக்க முடியாது. சட்டென்று நோட்டு புத்தகத்தில் ஒரு காகிதத்தை கிழித்து நொடியில் ஒரு கப்பல் செய்துவிடுவார்கள்! சிறுவர்களிடையே காகிதக் கப்பல் பிரபலம் என்பதைப் போல், கல்லூரியில் காகித "ராக்கெட்" மிகப் பிரபலம்! கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவிகள் பக்கம் காகித ராக்கெட் செய்து வீசிக்கொண்டிருப்பார்கள். சிலவற்றில் ஏதாவது செய்திகள் கூட எழுதியிருக்கும்...சில சமையம் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கும் வாத்தியார் மீது கூட இந்த ராக்கெட்டுகள் வந்து பாயும். <br />
<br />
விளையாட்டாக நாம் செய்யும் இந்த காகித உருவங்களுப்பின் "ஒரிகாமி(Origami)" என்கிற முறையான கலை இருக்கிறது. ஜப்பான் நாட்டில் தோன்றிய கலை இது. ஜப்பானிய மொழியில் "ஒரி" என்றால் "மடிப்பு" என்றும் "காமி" என்றால் "காகிதம்" என்றும் பொருள். ஒரு சதுர வடிவமான காகிதத்தை பல விதமாக மடித்து ஒரு உருவம் செய்வதே இந்த கலையின் இலக்கு. இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், காகிதங்களை கத்தரிக்கவோ, பசை கொண்டு ஒட்டவோ கூடாது! திறமையான மடிப்புகளின் மூலமாகவே வேண்டிய உருவங்களை செய்துவிடலாம். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-Dwh4wzZyn2R4uqS2B6U0ZzMPGTbtJolWLGkPW8x3_dmTiTTCP92Yd1dM1ye4yz2MTRCf0c5zxUOBW1RLmtfQO1J6c4ZAOigTAd5BI1escjmgqFxaPhYSSKBpmQt-gXVleFHU/s1600/photo-3.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-Dwh4wzZyn2R4uqS2B6U0ZzMPGTbtJolWLGkPW8x3_dmTiTTCP92Yd1dM1ye4yz2MTRCf0c5zxUOBW1RLmtfQO1J6c4ZAOigTAd5BI1escjmgqFxaPhYSSKBpmQt-gXVleFHU/s200/photo-3.jpg" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">இன்று நான் செய்த பூனை முகம்</td></tr>
</tbody></table>
<br />
<br />
இந்த ஒரிகாமிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? மீண்டும் அப்பாவை இங்கே குறிப்பிடவேண்டியிருக்கிறது. பள்ளி விடுமுறை நாட்களில் ஒரு முறை பொழுது போகவில்லை. என்ன செய்யலாம் என்று அப்பாவை நச்சரித்துக்கொண்டிருந்தேன். அப்பா ஒரு நாள் "ஒரிகாமி" பற்றிய புத்தகம் ஒன்றை நூலகத்தில் இருந்து எடுத்துக்கொண்டு வந்தார். இரண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து முழு புத்தகத்தையும் படித்தோம். காகிதத்தை கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பார்த்து பிரமித்துப் போனேன் நான். பின்னர் பல நாட்கள் அந்தப் புத்தகத்தை வைத்துக்கொண்டு, அதில் கொடுத்திருந்த படங்கள், பாடங்கள் இவற்றைப் பார்த்து பார்த்து, பல நோட்டு புத்தக காகிதங்களை விரயம் செய்து சில உருவங்களைச் செய்யக் கற்றுக்கொண்டேன். சில காகித மடிப்புகள் மிகச் சிக்கலானவை. படத்தைப் பார்த்து புரிந்துகொள்வது மிகக் கடினம். மண்டையை உடைத்துக்கொண்டு அதனை சவாலாக எடுத்துக்கொண்டு ஒரு உருவத்தை கொண்டு வருவதற்குள் பைத்தியமே பிடித்துவிடும். மாலை அப்பா அலுவலகத்திலிருந்து வந்ததும் நான் செய்த காகித உருவங்களை பெருமையாக அவரிடம் காட்டுவேன். நான் அந்த அளவு சிரத்தையாக ஒரிகாமி கலையைக் கற்றுகொள்வதில் மகிழ்ந்த அப்பா, எனக்கு ஒரிகாமி உருவங்கள் செய்வதற்கு வண்ணக் காகிதங்களை வாங்கித் தந்தார். வண்ணக் காகிதங்களில் நான் செய்த வீடு, தொப்பி, மீன், தவளை, பெட்டி, பூ போன்ற உருவங்கள் மேலும் அழகாக இருந்தன. சில வருடங்கள் ஒரிகாமி எனது விருப்பக் கலையாக இருந்தது. <br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh97-XSmZZFI0Jrjw2fKjX-tl1rc7ojP8qh6lU7JKgEi6sXhQyIPnKneR-8tQjjkz33JKJpfuU6FKOHSu8XodQ0iUW6cbbBCpxWLDjr-4ZiFtXq7cbD-2EPCB2XH8uUOCBP3k90/s1600/photo-2.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh97-XSmZZFI0Jrjw2fKjX-tl1rc7ojP8qh6lU7JKgEi6sXhQyIPnKneR-8tQjjkz33JKJpfuU6FKOHSu8XodQ0iUW6cbbBCpxWLDjr-4ZiFtXq7cbD-2EPCB2XH8uUOCBP3k90/s200/photo-2.jpg" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">நான் செய்த யானை முகம்</td></tr>
</tbody></table>
<br />
ஆனால் எப்படி என் புத்தக வாசிப்பு, பென்சில் சேகரிப்பு இவற்றின் மீதான ஆர்வத்தை நான் பல வருடங்கள் கிடப்பில் போட்டிருந்தேனோ, அதே போல் தான் இந்த ஒரிகாமி கலையையும் பள்ளிப் படிப்பு முடிந்தது கிடப்பில் போட்டுவிட்டேன். நடுநடுவே வீட்டிற்கு வரும் சிறு குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவதற்காக, காகிதத்தை எடுத்து ஏதாவது ஒரு உருவத்தை செய்து காட்டியதுண்டு. அதற்குப் பிறகு, இந்தப் பதிவு எழுதும் இந்தச் சமையத்தில், ஏதாவது புதிதாக ஒன்றைச் செய்து பார்க்கலாம் என்று இணையத்தைப் பார்த்து இந்த உருவங்களைச் செய்தேன். பள்ளி நாட்களில் எனக்குக் இருந்த அதே ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் மீண்டும் மீட்டெடுக்க முடிந்தது. <br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWWY548tmO7-WlclVDgkX4vA5t96r4RT1YDJYn4RnJP35e0xlRNrcYKvUMLTijnnDt2O5ksg1inBKOAjXYAeDCa4UmtgQqPefFCWwMUKFi-TjnvRfHieHkHVrD85fukf2GnqAA/s1600/photo-4.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWWY548tmO7-WlclVDgkX4vA5t96r4RT1YDJYn4RnJP35e0xlRNrcYKvUMLTijnnDt2O5ksg1inBKOAjXYAeDCa4UmtgQqPefFCWwMUKFi-TjnvRfHieHkHVrD85fukf2GnqAA/s200/photo-4.jpg" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">நான் செய்த வீடு</td></tr>
</tbody></table>
<br />
<br />
இப்பொழுது நிறைய இணையதளங்கள், யூ ட்யூப் வீடியோக்கள் எல்லாம் ஒரிகாமி பற்றி வந்துவிட்டன. இந்தக் கலையை இப்பொழுது கற்றுக்கொள்வது மிகவும் எளிது. குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க இது ஒரு நல்ல வழி. படத்தில் இருக்கும் உருவங்கள் எல்லாம் மிக எளிதாகச் செய்யக்கூடியவை தான். ஆனால், இவற்றை விட பல நிலைகள் கடினமான உருவங்களெல்லாம் கூட செய்யமுடியும். </div>Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-9375592.post-6113567265554324152012-05-18T02:03:00.000-04:002012-05-18T02:06:31.523-04:00நான் ஏன் FeTNA வெள்ளி விழாவுக்குப் போகிறேன்? - "டாப் டென்" காரணங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLPFffr3KBoQxazwJZIGLcpcEnaGLSd3rLbVZXtrl21WX-NUCVRxsxaUqmcznKppe9BRpU5BWOIwn7wB5rjxe3iw92oAtwvAyaflFWhRoWNkxGqLM8ZCzpevsAKcwa3DJGuQb6/s1600/New_FeTNA_Logo_FINAL.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLPFffr3KBoQxazwJZIGLcpcEnaGLSd3rLbVZXtrl21WX-NUCVRxsxaUqmcznKppe9BRpU5BWOIwn7wB5rjxe3iw92oAtwvAyaflFWhRoWNkxGqLM8ZCzpevsAKcwa3DJGuQb6/s200/New_FeTNA_Logo_FINAL.png" width="200" /></a></div>
<br />
<br />
2003 ஆம் ஆண்டில் இருந்து FeTNA என்கிற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் விழாக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சென்றுகொண்டிருந்தேன். கடந்த மூன்று வருடங்களாக சில தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை. நிறைய நல்ல அனுபவங்களை இழந்துவிட்டேன். அந்த இழப்பை ஈடு கட்டும் வகையில், இந்த வருடம் எங்கள் ஊருக்கு அருகிலேயே பேரவை விழா நடக்கவிருக்கிறது. அதுவும் வெள்ளி விழா!!! மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். <br />
<br />
என் ஆர்வத்திற்கான "டாப் டென்" காரணங்கள்!<br />
<br />
1. விழாவிற்கு நண்பர்கள் குடும்பங்களுடன் சேர்ந்து ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு, வழியில் சாலையோர விரைவு உணவகங்களில் சாப்பிட்டுக்கொண்டு காரில் பயணிப்பதே ஒரு மகிழ்ச்சியான உல்லாசப் பயணம் தான்! அங்கே சென்ற பின்னரும் அந்த வரவேற்பு, நாதஸ்வரம், பட்டுப்புடவைகள், வேட்டி சட்டைகள், விருந்துச் சாப்பாடு, நலன் விசாரிப்பு என்று ஒரு உறவிணரின் திருமணத்திற்கு சென்றது போன்ற அந்த உணர்வு...அதுவும் வெள்ளி விழா என்றால் ஏற்பாடுகள் எல்லாம் இன்னும் பலமாக இருக்கும்.<br />
<div>
<br /></div>
<div>
<div style="text-align: left;">
2. நமது வரலாற்றில் வீராங்கனை என்றால் "ஜான்சி ராணி" யைத் தான் தெரியும். அனால் "வேலு நாச்சியார்" என்று ஒரு தமிழ் வீராங்கனை இருந்தார் என்பதே இப்பத்தான் கேள்விபடுகிறேன். வேலு நாச்சியார் நாட்டிய நாடகத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
3. எழுத்தாளர்களைச் சந்திக்க எனக்கு மிகவும் ஆர்வம். 2004 ஆம் ஆண்டு பேரவை விழாவுக்கு பிரபஞ்சன் வந்திருந்தார். அவருடன் நிறைய பேச வாய்ப்பு கிடைத்தது. சிறுகதை எழுத நல்ல பல உத்திகளை எல்லாம் சொல்லிக்கொடுத்தார். அதற்கப்புறம் பிரபல எழுத்தாளர்கள் யாரும் வந்ததாகத் தெரியவில்லை. இந்த வருடம் வெள்ளி விழாவுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் வருகிறார். அவரின் துணையெழுத்து புத்தகத்தின் மிகப் பெரிய விசிறி நான்.<br />
<br /></div>
<div style="text-align: left;">
4. தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு பண்முகப் பரிமாணம் கொண்டவராகத் தெரிகிறார். ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறார், ஆனால் பண்டைய தமிழ் இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம் இரண்டிலுமே ஆர்முள்ளவராக இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கத்தமிழர்களின் எழுத்துக்கள் பற்றி ஆராய்ச்சி செய்கிறார், பரதநாட்டிய கலைஞராக இருந்தவர், நாடக நடிகை, கவிஞர்....நிறைய சுவாரசியமான விசயங்களை விழாவில் பகிர்ந்துகொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
5. சிவகார்திகேயன் - இவருடைய கலகலப்பும், கலாய்ப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். இவருக்கு நிறைய ரசிகர்கள், அதுவும் பெண் ரசிகர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் வருகிறாரா? என்கிற கேள்வி ஆங்காங்கே எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. சில நகைச்சுவையான மணித்துகளில் நனைய நான் தயார்! </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
6. தமிழன்-தமிழச்சி மாபெரும் போட்டி - இது ஒரு புதிய போட்டி முயற்சி! ஒவ்வொரு தமிழ்ச் சங்கமும் தம் ஊரில் இளைஞர்களைக்கொண்டு ஒரு போட்டி நடத்தும். இவர்கள் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையினர். தமிழ் இலக்கியம், வரலாறு, கலாசாரம் போன்றவற்றில் இளஞர்களுக்கு எந்த அளவு பொது அறிவு இருக்கிறது என்பதை சோதிக்கவே இந்தப் போட்டி. அந்தந்த ஊர் தமிழ்ச் சங்கத்தில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இளைஞர்கள், பெட்னா வெள்ளி விழாவில் நடக்கும் இறுதிச் சுற்றில் கலந்துகொள்வார்கள். பெரிய பரிசெல்லாம் உண்டு!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
7. ஈழத்தை யார் மறந்திருந்தாலும், தவறாகப் புரிந்துகொண்டிருந்தாலும், அந்த உணர்வுகள் பேரவை விழாவில் புதுப்பிக்கப்படும், மாற்றிஅமைக்கப்படும். கடந்த வருடங்களில் ஜெகத் காஸ்பர் ராஜ், எலைன் சாண்டர்ஸ் போன்றவர்களின் பேச்சு பலரை புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த முறையும் அப்படிப்பட்ட உரைவீச்சுக்கள் இருக்குமென்று நினைக்கிறேன்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
8. FeTNA என்றுமே நலிவுற்ற கலைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தவறியதில்லை. தப்பாட்டம், பறை, சிலம்பம் போன்ற நடனங்களை நான் தமிழகத்தில் கூட பார்த்ததில்லை. FeTNA விழாக்களில் தான் பார்த்திருக்கிறேன். இந்த வருடம் தெருக்கூத்து மற்றும் உடுக்கையடி பாடல்களைப் பற்றி ஆய்வு செய்து பல நூல்களை வெளியிட்ட முனைவர் Brenda Beck என்கிற கனடா நாட்டைச் சேர்ந்த பெண்மனியை FeTNA அழைத்து கெளரிவிக்கிறது. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
9. விழாவில் இறுதி நாள் இரவு நடக்கும் மாபெரும் திரை இசை நிகழ்ச்சி எப்போதுமே மிகப் பிரபலம். மொத்த அரங்கும் நிரம்பி இருக்கும் ஒரே நிகழ்ச்சி அதுவாகத் தான் இருக்கும்! மூன்று மணிநேரங்கள் இசை மழையில் நனைந்து, நடனமாடி, ஒன்ஸ் மோர் கேட்டு எல்லாரும் குதூகலமாக இருக்கும் நேரம் அது. பாடகி சித்ரா இந்த வருடம் வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.<br />
<br />
10. இது தவிர, முதல் நாள் நடக்கவிருக்கும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம், கவியரங்கம், குழந்தைகளுக்கான தமிழ்த் தேனி, மாவட்ட ஆட்சியர் சகாயம், மறைமலை இலக்குவனார் ஐயா இவர்களின் உரைகள், தமிழ் வலைப்பதிவர்கள் மன்றம் - இவை அனைத்திலும் சென்று தலைகாட்ட விருப்பம்.<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>Unknownnoreply@blogger.com18tag:blogger.com,1999:blog-9375592.post-12186566791655105802012-05-17T00:11:00.001-04:002012-05-17T00:16:46.461-04:00பென்சில் பெண்ணே நீயானால்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எனது சேகரிப்புக்கெல்லாம் அடுத்த வாரிசு என் மகள் புகழ்மதி தான். ஓராண்டு ஈராண்டு சேகரிப்பெல்லாம் இல்லை. பல ஆண்டுகளாக நான் சேகரித்து வருகிறேன். அப்பா தான் தேடித் தேடி எனக்காகச் சிரமமப்பட்டு சேர்த்தார். அதை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறேன். புகழ்மதி வியக்கும்படி அவளே எதிர்பார்க்காத வண்ணம் அவளிடம் அந்தச் சொத்தை ஒப்படைக்கப் போகிறேன் சில வருடங்கள் கழித்து!<br />
<br />
மீண்டும் தாய்மையின் சிறப்பைப் பற்றி தொடங்கிவிட்டீர்களா என்றும், ஏன் இந்த "பில்ட் அப்"? அப்படி என்ன சேகரித்து வைத்திருக்கிறீர்கள் என்றும் பலர் கேட்பது புரிகிறது. <br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0W9Tvj9xxfBuV-zWN9HV_bFG3xdqgX0R-kkzpxQkxnrAd0QXT6BcayL8QJBBhyphenhyphen3mWEMamaGeDpddWBb-iH7jg3d8oEL7k6OOjzNkD7tsxWA_mIoTkWPqEq8q6p9kSqsuHlPl0/s1600/IMG_1939.JPG" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0W9Tvj9xxfBuV-zWN9HV_bFG3xdqgX0R-kkzpxQkxnrAd0QXT6BcayL8QJBBhyphenhyphen3mWEMamaGeDpddWBb-iH7jg3d8oEL7k6OOjzNkD7tsxWA_mIoTkWPqEq8q6p9kSqsuHlPl0/s320/IMG_1939.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">என் பென்சில் சேகரிப்பில் ஒரு பகுதி</td></tr>
</tbody></table>
என் "பென்சில் சேகரிப்பு" பற்றித் தான் நான் குறிப்பிடுகிறேன்! மூன்று நாட்களாக தாய்மை, புத்தகங்கள், தொழிநுட்பம் என்று எழுதி சற்று அலுத்துவிட்டது. ஒரு மாற்றத்திற்காக என்னுடைய பள்ளி கால "hobby" ஆன பென்சில் சேகரிப்பை பற்றி எழுதலாமென்று தோன்றியது. "Hobby" என்பதற்கு தமிழில் வார்த்தை தேடியபோது, "மகிழ் பணி", "விருப்பக் கலை" என்ற இரு வார்த்தைகள் கிடைத்தன. இதில் "விருப்பக் கலை" எனக்குப் பிடித்திருக்கிறது. அதே போல் பென்சில் என்பதற்கு "கரிக்கோல்" என்ற தமிழ் வார்த்தையையும் கண்டறிந்தேன்.<br />
<br />
பொதுவாக அஞ்சல் தலைகள், நாணயங்கள் போன்ற சேகரிப்பே பிரபலமான விருப்பக் கலையாக இருந்தது. நான் ஏன் பென்சில்களை சேகரித்தேன் என்பதற்கு என்னிடம் சரியான காரணம் இல்லை.<br />
ஆறாவது, ஏழாவது படிக்கும்போதெல்லாம், அந்த மஞ்சல் நிற "நடராஜ்" பென்சில்களையே உபயோகித்து அலுத்துவிட்டது. அப்பா நிறைய பயணங்கள் செல்வார். போகும் இடத்தில் எல்லாம் ஏதாவது வித்தியாசமான பென்சில்களைப் பார்த்தால் எனக்காக வாங்கி வருவார். அப்படியே சேகரிக்கத் தொடங்கினேன். சும்மா பென்சில்களை வாங்கி வாங்கி பெட்டியில் குவித்து வைத்திருந்த எனக்கு, அப்பா தான் அவற்றை எப்படி பென்சில்களின் அளவு, பயன், வடிவம் போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தி, பிரித்து அடுக்கி வைப்பது என்று கற்றுக்கொடுத்தார். எப்படி இதைச் செய்தோம் என்பதக் காட்டுவதற்கு சில புகைப்படங்களை இங்கே செருகியிருக்கிறேன்.<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiFg74esvq2Ot0bGe-qatmRlGlj9EB1UHgeAnlMvi-BxO6i21u5cbxm2cIPiVzMAQQNLGgueBC5JM13yEd9x1kIneRkdo7q0AWq8Wvzl749-HDbdxFwmxLJnBkNEqaXdWlxHFt/s1600/IMG_1934.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiFg74esvq2Ot0bGe-qatmRlGlj9EB1UHgeAnlMvi-BxO6i21u5cbxm2cIPiVzMAQQNLGgueBC5JM13yEd9x1kIneRkdo7q0AWq8Wvzl749-HDbdxFwmxLJnBkNEqaXdWlxHFt/s320/IMG_1934.jpg" width="240" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தடிமனான பென்சில்கள்</td></tr>
</tbody></table>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFfsbCefdF8UVmtCWepZ0-_Wjm0-McnrirtU6vKUtgPGJfDtfAxaekD_xsbuxY3xRuPN1W0SBnsKMfCLHK1jg_sq539qAK40V4bemgnsilr4jXDKQ-KIrfOeB_xLgAPsxhvfct/s1600/IMG_1933.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFfsbCefdF8UVmtCWepZ0-_Wjm0-McnrirtU6vKUtgPGJfDtfAxaekD_xsbuxY3xRuPN1W0SBnsKMfCLHK1jg_sq539qAK40V4bemgnsilr4jXDKQ-KIrfOeB_xLgAPsxhvfct/s320/IMG_1933.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மெல்லிய பென்சில்கள்</td></tr>
</tbody></table>
<br />
<br />
<br />
<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia4GevGEGEUhqzOOP05mAPrutbt0e51is8198LfImcsS2eWG9B9_YmuAek7MuD6vqA1r8vdpFvKuqINQUK6rtBUsOZRrdWI8smdYqgHVLPj20N1qKiyHbWS1vFPzpAscrGp-__/s1600/IMG_1932.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia4GevGEGEUhqzOOP05mAPrutbt0e51is8198LfImcsS2eWG9B9_YmuAek7MuD6vqA1r8vdpFvKuqINQUK6rtBUsOZRrdWI8smdYqgHVLPj20N1qKiyHbWS1vFPzpAscrGp-__/s320/IMG_1932.jpg" width="240" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வளையும் பென்சில்கள் </td></tr>
</tbody></table>
<br />
<br />
<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-38NqfW74COnlkXjqXBRRELrR_Ip2dxZVkIercA7LOT6F_bQGWHJboFwP8ahHHJ9P9NAPLq_CqFNzxKxirbxdSbOe7h-TzpBXE7j5G4893oXpQSRaZJIS4zwMx6qAyl4Gxs5A/s1600/IMG_1931.JPG" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-38NqfW74COnlkXjqXBRRELrR_Ip2dxZVkIercA7LOT6F_bQGWHJboFwP8ahHHJ9P9NAPLq_CqFNzxKxirbxdSbOe7h-TzpBXE7j5G4893oXpQSRaZJIS4zwMx6qAyl4Gxs5A/s320/IMG_1931.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வளையும் பென்சில்கள்</td></tr>
</tbody></table>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwmDMNjGM6sxSveZhAjJVcMfY60jeVfJv0cnPmETSk-815zGXGCXgDtfqJ6hMbzoYcd5Bhks18o9-SkgqEcD82NsR46wI7XM7n0r6DBy-h__qWW9zdRKls5OD80oyZ0GJuM6Va/s1600/IMG_1937.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwmDMNjGM6sxSveZhAjJVcMfY60jeVfJv0cnPmETSk-815zGXGCXgDtfqJ6hMbzoYcd5Bhks18o9-SkgqEcD82NsR46wI7XM7n0r6DBy-h__qWW9zdRKls5OD80oyZ0GJuM6Va/s320/IMG_1937.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வட்டம், முக்கோணம், சதுரம், ஆறுகோணம், முட்டை வடிவ பென்சில்கள் </td></tr>
</tbody></table>
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYXDi54tsqfpnKVVznTMYN9mSoBf8Ce_pEhLH6qSbPFyDitsPKwsb7rKAMQfTj4CjX6T4zEAbwRnh0CVQ597y6Ufa7Tr2BkLdY2twUcDZt4mrAxGD8sDzPkUlgX8J0-wb6Z01d/s1600/IMG_1938.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYXDi54tsqfpnKVVznTMYN9mSoBf8Ce_pEhLH6qSbPFyDitsPKwsb7rKAMQfTj4CjX6T4zEAbwRnh0CVQ597y6Ufa7Tr2BkLdY2twUcDZt4mrAxGD8sDzPkUlgX8J0-wb6Z01d/s320/IMG_1938.jpg" width="240" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கல்வி சார்ந்த பென்சில்கள் - (மேலிருந்து கீழ் வரிசையாக) ABCD பென்சில், வாய்பாட்டு பென்சில், யோகா பென்சில், இராமாயணம் படக் கதை பென்சில், பன்னாட்டு தேசியக் கொடிகள் பென்சில்</td></tr>
</tbody></table>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyJpU5WNnh3aPhUE_qmUl6xiijXfBXUw34Qd9Vz-Fb7EBnvWP6jjDr_wo8NIOn-9IdYGFUFUaZr5984FV1v_HV29Y9-SwcuqgcSZcLAfGf2Y2sYiGRM_Um6sq7pV_hypYfZbXN/s1600/IMG_1940.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyJpU5WNnh3aPhUE_qmUl6xiijXfBXUw34Qd9Vz-Fb7EBnvWP6jjDr_wo8NIOn-9IdYGFUFUaZr5984FV1v_HV29Y9-SwcuqgcSZcLAfGf2Y2sYiGRM_Um6sq7pV_hypYfZbXN/s320/IMG_1940.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">பயன்/உபயோகத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட பென்சில்கள் - கணக்கர்கள் பயன்படுத்தும் பென்சில், சுறுக்கெழுத்து பென்சில்கள், வரை கலைஞர்கள் மற்றும் பொறியாளர்கள் பயன்படுத்தும் பென்சில்கள், ஸ்டெனோ பென்சில்கள்</td></tr>
</tbody></table>
<br />
சில சமையம் நான் பள்ளிக்கு உபயோகிக்கும் பென்சில்கள் தொலைந்துவிட்டால் என் சேகரிப்பில் இருந்து ஒரு பென்சிலை எடுத்து சீவிக்கொண்டுச் செல்வேன். அதனால் அவ்வப்போது என் சேகரிப்பில் பென்சில்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பதிலாக குறைந்தும் இருக்கிறது! அக்கா திருமணமாகி அமெரிக்கா சென்றபின் என் பென்சில் சேகரிப்பு, பன்னாட்டுச் சேகரிப்பாக மாறியது.<br />
<br />
சிறு வயதில் தொடங்கிய என் பென்சில் சேகரிப்பு, கல்லூரி இறுதி ஆண்டு வரை ஆர்வமாகத் தொடர்ந்தது. அதன் பின் நான் சேகரித்த எல்லா பென்சில்களையும் ஒரு பெட்டியில் போட்டு அலமாரியில் வைத்துவிட்டேன். கடைசியாக எண்ணிய போது கிட்டத்தட்ட 300 பென்சில்கள் இருந்தன. <br />
<br />
கல்லூரி இறுதுயாண்டிற்கு பின், மேற்படிப்பு, வேலை, திருமணம் என்று வாழ்க்கை ஓடியதால், பெட்டியில் போட்டு மூடிவைத்த பென்சில் சேகரிப்பு அப்படியே இருந்தது. இப்பொழுது கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து இந்தப் பதிவை எழுதுவதற்காக அந்தப் பெட்டியை தூசி தட்டி திறந்தபோது, அப்பாவின் நினைவால் கண்கள் கசிந்தன... எத்தனை நாட்கள் அந்தப் பென்சில்களை வைத்துக்கொண்டு நானும் அப்பாவும் சுவாரசியமாகப் பொழுது போக்கியிருக்கிறோம்?!<br />
<div>
<br /></div>
<div>
விருப்பக் கலைக்கெல்லாம் நேரமில்லை என்று பலர் அதைப் பற்றி பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் விருப்பக் கலையில் ஈடுபடுவது குடும்பத்துடன் தரமான நேரம் செலவிட ஒரு நல்ல வழி. எனக்கும் அப்பாவுக்கு உள்ள பாசப் பிணைப்பிற்கு இந்த பென்சில் சேகரிப்புக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. </div>
<div>
<br /></div>
<div>
ஒரு முறை என் அலுவலகத்தில் ஒரு விருந்து கூட்டத்தின் போது எல்லோரும் தங்களைப் பற்றி யாருக்கும் இதுவரை தெரியாத ஒரு சுவாரசியமான செய்தியை பறிமாறிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டோம். நான் என்னுடைய முறை வந்த போது, "நான் பென்சில்கள் சேகரிக்கிறேன்" என்று சொன்னேன். சிலர் "அப்படியா" என்று ஆச்சரியப்பட்டார்கள். இது முடிந்து பல நாட்கள் சென்றுவிட்டது. ஒரு நாள் காலை என் அலுவலக மேசையில் இரண்டு அழகான பென்சில்களும், அதனுடன் ஒரு சிறு குறிப்பில், "நீங்கள் பென்சில்கள் சேகரிக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். உங்கள் சேகரிப்பில் இவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று எழுதியிருந்தது. இன்று வரை அது யார் என்றே எனக்குத் தெரியாது!</div>
<div>
<br /></div>
<div>
நானும் அப்பாவும் உருவாக்கிய இந்த பென்சில் சேகரிப்பை மேலும் விரிவாக்கி, அதற்கு அடுத்த வாரிசாக புகழ்மதியை நியமிக்க வேண்டும். என் விருப்பக் கலையின் மீது நான் மறந்திருந்த ஆர்வத்தை மீட்டெடுக்க உதவிய தமிழ்மணத்திற்கு நன்றி!</div>
<div>
<br /></div>
<div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
</div>
<div>
<br /></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-9375592.post-90952288477011818842012-05-16T00:26:00.001-04:002012-05-16T00:42:42.300-04:00வாசிப்பும் வசதியும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="shortbottompad" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-style: inherit; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px; vertical-align: baseline;">
<div style="font-family: verdana; line-height: 1.4;">
<b>"I have always imagined that paradise will be a kind of library" - Jorge Luis Borges</b></div>
<div style="font-family: verdana; font-size: 12px; font-weight: inherit; line-height: 1.4;">
<br /></div>
<div>
<div style="font-family: verdana; font-weight: inherit; line-height: 1.4;">
<span class="Apple-style-span"> சொர்க்கம்(Paradise/Heaven) என்பது இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக அழகான மகிழ்ச்சிகரமான ஒரு பிரதேசம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. இவர் எந்த அளவு புத்தகங்களை நேசித்திருந்தால் அந்த மிக மகிழ்ச்சிகரமான பிரதேசம் ஒரு நூலகம் போல் இருக்கும் என்று கற்பனை செய்திருப்பார்?! </span>இதைப் படித்ததும் என் தலையில் நானே ஒரு குட்டுப் போட்டுக்கொண்டேன்!<span class="Apple-style-span"> இன்னமும் சிறுபிள்ளைத்தனமாக சொர்க்கம் என்றால் அழகிய சோலைவனம், நீர்வீழ்ச்சி, பறவைகள், தேவதைகள், அருசுவை உணவு - இவை தான் நினைவுக்கு வருகிறது! </span>ஒவ்வொருவருக்கும் எது அதிகமான மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதைப் பொறுத்து தான் சொர்க்கத்தைப் பற்றியதான அவர்களுடைய கற்பனை இருக்கும் என்று நினைக்கிறேன்.<br />
<br /></div>
<div style="font-family: verdana; font-weight: inherit; line-height: 1.4;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguhGCVTB2RH6LW0w5u0QHEXeAjRnRO8NwWxXZ5cqHTBzOnzfHNAVtcKTbnIfEjRQdfkybJ2rPd2oFRL3zLcRo3UQOLRbbLB20VyXru01sPFZRwYCPgoB25UK8iZaGFNsKUxPw3/s1600/book+read.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguhGCVTB2RH6LW0w5u0QHEXeAjRnRO8NwWxXZ5cqHTBzOnzfHNAVtcKTbnIfEjRQdfkybJ2rPd2oFRL3zLcRo3UQOLRbbLB20VyXru01sPFZRwYCPgoB25UK8iZaGFNsKUxPw3/s320/book+read.jpg" width="256" /></a></div>
<div style="font-family: verdana; font-weight: inherit; line-height: 1.4;">
பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் என் கைகளுக்காகவே படைக்கப்பட்ட ஒரு பொருள் புத்தகம் என்பது போல் எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடனே திரிந்துகொண்டிருப்பேன். அம்மா போடும் சூடான பக்கோடாவை சுவைத்துக்கொண்டு புத்தகங்களை மேய்வது, இரவு படுக்கையில் படுத்துக்கொண்டே சில நிமிடங்கள் புத்தகம் படித்துவிட்டு அப்படியே தூங்கிப்போவது, இரயிலில் செல்லும்போது சன்னலோரத்தில் உட்கார்ந்துகொண்டு புத்தகம் படிப்பது, படித்து முடித்த புத்தகத்தை தோழிகளிடம் கொடுத்து அவர்களிடம் வேறு புத்தகம் வாங்கிப் படிப்பது என்று சுகமான புத்தக அனுபவங்கள் நிறைய இருந்தது. எங்கள் வீட்டில் அப்பாவின் அறையிலும், முன்னறையிலும் பெரிய அலமாரிகளில் நிறைய புத்தகங்கள் இருக்கும். ஆனால் கடந்த பல வருடங்களாக எனது புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்து விட்டது.<br />
<br />
இப்பொழுதெல்லாம் எனக்கு வேண்டியதை இணையத்திலேயே படித்துவிடுகிறேன். பற்றாததற்கு, இப்போது மின் புத்தகங்கள், amazon kindle, Apple ipad போன்ற நவீன வாசிப்பு வசதிகள் பிரபலமாகிவிட்டன. அச்சு புத்தகங்களின் மீதான கவனம் குறையத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் ஒரு கிருத்துவத் திருமணத்தில், திருமணம் நடத்தி வைத்தப் பாதிரியாரின் கையில் பைபிளுக்குப் பதிலாக "ஐ பாட்" இருந்ததைப் பார்த்து நான் திகைத்துப் போனேன்! ஒரு புனித நூலுக்கே இப்படி ஒரு நிலமையிருக்கும் போது, எதிர்காலத்தில் அச்சு புத்தகங்களே இல்லாமல் போய்விடுமோ என்கிற பயம் தோன்றுகிறது.<br />
<br /></div>
<div style="font-family: verdana; font-weight: inherit; line-height: 1.4;">
என் இரண்டரை வயது மகள் புகழ்மதிக்கு புத்தகத்தின் கடைசி பக்கத்தைத் திருப்பினால் அது புத்தகத்தின் முடிவு என்று புரியவில்லை! கடைசி பக்கத்தைத் திருப்பிய பிறகும் "அடுத்த பக்கம் திருப்பு" என்று அடம் பிடிக்கும் அவளிடம், இன்னும் சில வருடங்களில், புத்தகப் பக்கங்களைத் திருப்பும் இந்தப் பிரச்சினையே உனக்கு இருக்காது என்று எப்படிச் சொல்வேன்?!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTVLK9_U9GkWg9VKscuML3SPBm95PSVeRwC6B2sauwRUpI1Jw5h6vMdejAmzsjQHfO4Jc5hr1bLeKXpctVOWGPneeYFYLIZY1RjltVJ7-caWqb4p5ksbYeoZtmKB7sN1hBGNU_/s1600/books.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTVLK9_U9GkWg9VKscuML3SPBm95PSVeRwC6B2sauwRUpI1Jw5h6vMdejAmzsjQHfO4Jc5hr1bLeKXpctVOWGPneeYFYLIZY1RjltVJ7-caWqb4p5ksbYeoZtmKB7sN1hBGNU_/s1600/books.jpg" /></a></div>
</div>
<div style="font-family: verdana; font-weight: inherit; line-height: 1.4;">
<br />
புதிய தொழில் நுட்பங்கள் நம்மைக் கவர்ந்திழுக்கும் போது, அதனுடன் மல்லுக்கு நிற்க முடியவில்லை. முன்பெல்லாம் எங்கேயாவது சில நிமிடங்கள் காத்திருக்க நேர்ந்தால், ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பது வழக்கம். இப்போது கைகள் தானாக ஐபேடை(ipad) தேடுகின்றது மின் அஞ்சல், முகப்புத்தகம் அல்லது மின் நூல்கள் படிக்க! புத்தகப் பக்கங்களைத் திருப்பும் அந்த உணர்வை கூட இழக்கவேண்டியதில்லை ஐபேடில்! அந்த மின் புத்தகப் பக்கங்களின் முனையை விரலால் தள்ளி பக்கங்களைத் திருப்பும் உணர்வை பெற முடிகிறது, திருப்பும் போது "சரக்" என்ற அந்த காகிதச் சத்தம் கூட வருகிறது. எப்படி இதற்கெல்லாம் அடிமை ஆகாமல் இருக்க முடியும்?!<br />
<br />
நாம தான் இப்படி ஆகிவிட்டோமென்றால் குழந்தைகளின் நிலை என்ன? சிறு வயதிலிருந்தே எனக்கும் புத்தகங்களுக்கும் இருந்த ஒரு பந்தம் என் மகளுக்கு இல்லாமல் போய்விடுமோ என்று ஒரு கேள்வி இருக்கிறது. அப்படி என்ன அவள் புத்தகங்கள் இல்லையென்றால் இழந்துவிடப் போகிறாள்? பெரிதாக ஒன்றும் இல்லை. அவள் அறிவு எந்த விதத்திலும் குறைந்துபோய்விடப்போவதில்லை. ஆனால் சில பாரம்பரியமான அனுபவங்களை இழப்பாள். அந்த ரோட்டோர பழைய புத்தகக் கடைகளை அவள் பார்க்கவே முடியாது...மடங்கிப் போன ஒரு காகிதத்தை நேர் படுத்த கணமான புத்தகங்களை அதன் மேல் வைத்து "வெயிட் போட" தெரியாது...புத்தகப் பக்கங்களின் நடுவே மயில் இறகையும், பூக்களையும் வைத்து மூடி வைக்கத் தெரியாது...அவள் வீட்டு முன்னறையை அலங்கரிக்க புத்தக அலமாரிகள் இருக்காது...ஒரு புத்தகத்தில் அவளுடைய கையெழுத்திட்டு பரிசு கொடுக்க முடியாது...<br />
<br />
இங்கே அமெரிக்காவில் நான் பார்க்கும், படிக்கும் விசயங்கள் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. இங்கே வீட்டிலும் பள்ளியிலும், குழந்தைகளுக்கு அச்சு புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்களும் ஆசிரியர்களும் வலியுறுத்தி வருகின்றனர். பெற்றோர்கள் என்னேரமும் ஐ பாட், ஐ போன் சகிதம் திரிந்துகொண்டிருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு தினம் இரவு நேரங்களில் நல்ல கதை புத்தகங்கள் படிக்கிறார்கள். அந்த அச்சு புத்தகங்களை தம் குழந்தைகள் தொட்டு, பக்கங்களைத் திருப்பும் போது, ஒரு புது உலகத்தைத் தொடும் உணர்வு அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படும் என்று நம்புகிறார்கள். வண்ணங்கள், வடிவங்கள், மிருங்கங்கள் போன்றவற்றை அச்சு புத்தகங்களை பார்த்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்கள்.<br />
<br /></div>
<div style="font-family: verdana; line-height: 1.4;">
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் நான் படித்த ஒரு கட்டுரையில், "படங்கள் நிறைந்த ஒரு அச்சுப் புத்தகத்தை மின் வடிவமாக மாற்றுவதில் என்ன இழப்பு இருக்க முடியும்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த Junko Yokota என்கிற சிகாகோவைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் சொன்ன பதில் - <b>"புத்தகத்தின் அளவும் வடிவமும் கூட அதனைப் படிக்கும் பொது உண்டாகும் உணர்வுபூர்வமான மற்றும் அறிவுபூர்வமான அனுபவத்தின் ஒரு பகுதியாகிறது. உதாரணத்திற்கு, அகலமான பக்கங்களை பரந்த நிலப் பரப்புகளை வர்ணிக்க பயன்படுத்தலாம். நீல வாக்கில் இருக்கும் பக்கங்களை உயரமான கட்டிடங்களைப் பற்றிய கதைகளுக்கு பயன்படுத்தலாம். </b><b>எல்லாவற்றையும் சுருக்கி ஒரு மின் வடிவத்திற்குள் சட்டென்று அடைத்துவிட்டால் அது அர்த்தமற்றதாகப் போய்விடும்"</b><br />
<b><br /></b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf8VJmJKiIpkcIUBuUqMAQBDZ__Um5a5jiRuZ_LKy1BSVA-WWQEjKkIlJh3VN6kz8eCd4yiqkkylhG2bj0iFBiFp501NWseaPVpJZjf_xjnHh7ZXvZPTVHUpyL_XtXOSB0WRmK/s1600/ipad+2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="230" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf8VJmJKiIpkcIUBuUqMAQBDZ__Um5a5jiRuZ_LKy1BSVA-WWQEjKkIlJh3VN6kz8eCd4yiqkkylhG2bj0iFBiFp501NWseaPVpJZjf_xjnHh7ZXvZPTVHUpyL_XtXOSB0WRmK/s320/ipad+2.jpg" width="320" /></a></div>
<b><br /></b></div>
<div style="font-family: verdana; line-height: 1.4;">
<b><br /></b></div>
<div style="font-family: verdana; line-height: 1.4;">
அச்சு புத்தகங்கள், மின் புத்தகங்கள் இரண்டுமே குழந்தைகளுக்கு முக்கியம் என்றும் பல நிபுணர்கள் கருதுகிறார்கள். "Raising a Reader" என்கிற நிறுவனத்தின் இயக்குனர் Gabrielle E.Miller என்கிற பெண்மணி, "ஒரு குழந்தை எப்போது ஒரு அச்சு புத்தகத்தை படித்து மகிழ வேண்டும் என்பதும், எப்போது ஒரு புதிய நவீன வாசிப்பு வசதியை பயன்படுத்த வேண்டும் என்பதும் பெற்றோர் கையில் தான் இருக்கிறது. உதாரணத்திற்கு, 15 அச்சு புத்தகங்களை ஒரு விடுமுறைக்கு செல்லும் போது பெட்டியில் வைத்து எடுத்துச் செல்ல முடியாது, ஆனால் Kindle ஒன்றை எடுத்துச் செல்லலாம். அதே சமையம், தண்ணீர் தொட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் kindle ஐ தூக்கிக் கொடுக்க முடியாது. ஆனால் வினைல்(vinyl) புத்தகத்தைக் கொடுக்கலாம். இப்படி இரண்டு புத்தக வடிவங்களுக்கும் பயன்பாடு இருக்கிறது" என்கிறார். </div>
<div style="font-family: verdana; line-height: 1.4;">
<br />
புத்தகங்களை இழக்க மனம் இல்லை, அதே சமையம் நவீன வாசிப்பு வசதிகளையும் புறக்கணிக்க முடியாது. பொறுமையாக யோசித்துப் பார்க்கையில், இரு தரப்பு கருத்துக்களுமே சரி என்று எனக்குப் படுகிறது. மறைந்து வரும் அச்சு புத்தக வாசிப்பின் பக்கம் மனம் சாய்ந்தாலும், தொழில் நுட்ப ரீதியாக அதி வேகமாக வளர்ந்து வரும் உலகத்தில் வாழ்ந்துகொண்டு, ஒரு நவீன வசதியை குழந்தைகளிடமிருந்து மறைப்பது சரியல்ல. குழந்தைகள் வாசிக்கிறார்கள் என்பதே முக்கியம். அச்சு புத்தகமா, மின் புத்தகமா என்று நாம் கட்சி பிரிக்கவேண்டிய அவசியம் இல்லை. கற்றலில் புதிய வழி முறைகள் இருப்பதும், அவற்றை குழந்தைகளுடன் சேர்ந்து பரிசோதனை செய்வதும்கூட ஒரு உற்சாகமான அனுபவம் தான்! மேலும், ஒரு புத்தகத்தின் உண்மையான மதிப்பு, அதன் உள்ளடக்கத்தில் இருக்கிறது.</div>
<div style="font-family: verdana; line-height: 1.4;">
<br />
மனம் சமாதானமாகிவிட்டாலும், எனக்கு ஒரே ஒரு வருத்தம் எஞ்சியிருக்கிறது. இன்னும் 50 வருடங்கள் சென்ற பின்னர், Jorge Luis Borges போல சொர்க்கம் என்பது நூலகம் பொல் இருக்கும் என்று சொல்லும் அளவு புத்தகங்களை நேசிப்பவர்கள் யாரேனும் இருப்பார்களா?! </div>
<div style="font-family: verdana; line-height: 1.4;">
<br /></div>
<div style="font-family: verdana; line-height: 1.4;">
<br /></div>
<span class="Apple-style-span" style="color: #333333; font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 12px; line-height: 14px;"><br /></span></span><br />
<div style="font-family: verdana; font-weight: inherit; line-height: 1.4;">
<br /></div>
<div style="font-family: verdana; font-weight: inherit; line-height: 1.4;">
<br /></div>
<div style="font-family: verdana; font-weight: inherit; line-height: 1.4;">
<br /></div>
<div style="font-family: verdana; font-weight: inherit; line-height: 1.4;">
<br /></div>
<div style="font-family: verdana; font-weight: inherit; line-height: 1.4;">
<br /></div>
</div>
<div style="font-family: verdana; font-weight: inherit; line-height: 1.4;">
<br />
<span class="Apple-style-span" style="font-family: Times; line-height: normal;"></span><br />
<div style="font-family: verdana; line-height: 1.4;">
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
</div>
<br />
<br />
<br />
<br /></div>
<div style="font-family: verdana; font-weight: inherit; line-height: 1.4;">
<br /></div>
<div style="font-family: verdana; font-weight: inherit; line-height: 1.4;">
<br /></div>
<div style="font-weight: inherit;">
<span class="Apple-style-span" style="font-family: 'Lucida Grande', Arial, helvetica, sans-serif; font-size: x-small;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 16px;"><br /></span></span></div>
</div>
</div>Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-9375592.post-38036362808801827782012-05-14T22:51:00.001-04:002012-05-14T22:51:46.981-04:00தாய்மை என்னும் விசித்திரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
அன்னையர் தின வாரத்தில், என் தாய்மை அனுபவங்களை எழுதாமல் இருப்பதா?!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuw1U1ByVKNtitSPWaIo5VS1moktvIjhyphenhyphen3bZQNHTSucGNLBo3JGQptHdLdj3RDdKv_g5QkAhA2DpgtCnoz0eD8-hMLUCd9lp-wUw_ukRkbjjUhw11fUhtG0iCqMWjHYVc6-50o/s1600/frock.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuw1U1ByVKNtitSPWaIo5VS1moktvIjhyphenhyphen3bZQNHTSucGNLBo3JGQptHdLdj3RDdKv_g5QkAhA2DpgtCnoz0eD8-hMLUCd9lp-wUw_ukRkbjjUhw11fUhtG0iCqMWjHYVc6-50o/s1600/frock.jpg" /></a></div>
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
எனக்குத் திருமணம் ஆகி பத்து வருடங்கள் கழித்தே என் மகள் பிறந்தாள். "குழந்தை பிறந்தபின் உன் உலகமே மாறிவிடும்" என்று எல்லோரும் சொன்னார்கள். அது தெரிந்த விசயம் தானே? என்று மனதிற்குள் அலுத்துக்கொண்டேன். உலகம் மாறிவிடும் என்று அவர்கள் சொன்னதற்கு நான் செய்து கொண்ட அர்த்தம்...பல இரவுகள் தூக்கம் தொலைக்க நேரிடும், எனக்கென்று நேரம் இருக்காது, முன்பு போல் ஜாலியாக வெளியே சுற்ற முடியாது, எந்த நேரமும் குழந்தையைப் பற்றியே சிந்தனை இருக்கும்....போன்றவைதான். ஆனால் எவ்வளவு சுலபமாகத் தாய்மையை எடைபோட்டுவிட்டேன் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை...உலகம் மாறும் என்று சொன்னவர்கள், எப்படியெல்லாம் மாறும் என்பதைச் சொல்லவில்லை. என் மூலமாக உலகத்திற்கு வரும் ஒரு குழந்தை, என் உலகத்தை எப்படி மாற்றமுடியும் என்று பார்த்துவிடுகிறேன் என்று பிறக்காத குழந்தையிடம் சவால் விட்டேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikxWNX0Ws07u8MezaxB9hjdlQnFJ4-aFpIHG2cI38xmQZmTAoB15-2PhIszDvSDuFWt8e-JDC-qMBEp5wWRvbCvrjSG1-dpoOLwTLTOsvscDlwe502KKOl64Z8iXuzXfHekrCX/s1600/shoes.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikxWNX0Ws07u8MezaxB9hjdlQnFJ4-aFpIHG2cI38xmQZmTAoB15-2PhIszDvSDuFWt8e-JDC-qMBEp5wWRvbCvrjSG1-dpoOLwTLTOsvscDlwe502KKOl64Z8iXuzXfHekrCX/s1600/shoes.jpg" /></a></div>
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
ஆனால் பிரசவத்தின் போது அந்த மருத்துவமனை கட்டிலில் வேறு ஏதோ ஒரு மர்மம் ஒவ்வொரு தாய்க்கும் நடக்கிறது என்று நினைக்கிறேன். திருமணம் ஆனபின் கூட ஒரு பெண் வலுகட்டாயமாக தன்னை மாற்றிக்கொள்கிறாள் அந்த புதிய வாழ்க்கைக்கு ஏற்றாற் போல. ஆனால் தாயாகும் போது அவள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை! தன்னை அறியாமலேயே தானாக மாறிவிடுகிறாள். சில மாதங்கள் சென்றபின் தான் அந்த மாற்றத்தையே உணரமுடிகிறது. நல்லவிதமான மாற்றங்களைப் பற்றி எழுத வேண்டியதில்லை. அது எல்லா தாய்மார்களுக்கும் தெரிந்ததே. ஆனால் நான் எதிர்பாராத எதிர்மறையான மாற்றங்கள் சில என்னுள் ஏற்பட்டது. எனக்கு பட்டியல் போடுவது மிகவும் பிடிக்கும்.</div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
அப்படி நான் உணர்ந்த சில விசித்திர/எதிர்மறை மாற்றங்கள் இதோ:</div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<ul style="text-align: left;">
<li>முதலில் நான் உணர்ந்த மாற்றம் - எனது சிந்தனைகளில். தாய்மை என் சிந்தனைகளை முடமாக்கவில்லை, ஆனால் அதன் திசையை மாற்றிவிட்டது. இப்பொழுதெல்லாம், குழந்தைகள், அவர்களின் சாப்பாடு, விளையாட்டுப் பொருட்கள் - இவற்றைப் பற்றியே நான் அதிகம் சிந்திக்கிறேன். இந்த வார நட்சத்திர பதிவுகளை எழுத உட்கார்ந்தபோது கூட, எனக்கு தாய்மை, குழந்தை வளர்ப்பு போன்ற தலைப்புகளில் எழுதுவதற்குத் தான் சரளமாக கருத்துக்கள் வந்து விழுந்தன.</li>
</ul>
</div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<ul style="text-align: left;">
<li>என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகள் எங்கே ஓடிப் போய் ஒளிந்துகொண்டன என்றே தெரியவில்லை! எனக்குப் பிடித்த உணவுவகைகள், என்னுடைய சுகமான எழுதும் அனுபவம், நிதானமாக காப்பி குடித்துக்கொண்டே இணையத்தில் மேயும் நேரம், என் அலங்கார கைப்பை...என்று இவை எல்லாமே பின் தள்ளப்பட்டுவிட்டன...என் இலக்குகளும், முன்னுரிமைகளும் என்னை கேட்காமலேயே தானாக மாற்றி வரிசைபடுத்தப்பட்டன...ஆனால் என்ன ஆச்சரியம்...இதனால் எனக்கு துளி அளவும் வருத்தம் ஏற்படவில்லை! </li>
</ul>
</div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<ul style="text-align: left;">
<li>சற்று சுயநலக்காரியாகவும் மாறினேன். பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் சற்றே மறந்திருந்த உறவுகளின் பால் மீண்டும் கவனம் திரும்பியது. என் மகளுக்கு தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, அக்கா, அண்ணன் என்று எல்லா உறவுகளின் அன்பும் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அதிக நேரம் உறவுகளுடன் இருக்கவேண்டும் என்று நினைக்கத் தொடங்கினேன்.</li>
</ul>
</div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<ul style="text-align: left;">
<li> என் மொழி உணர்வைத் தாண்டி மகள் "mommy" என்று என்னை அழைப்பதைக் கேட்டு இரசித்தேன்! அவள் ஆசையாக அப்படி அழைக்கும் பொழுது, அம்மா என்று அழைக்கச் சொல்லி திருத்த மனம் வரவிட்டாலும், அதன் அவசியத்தை மறக்கவில்லை. </li>
</ul>
</div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<ul style="text-align: left;">
<li>என்னுள் இருந்த பெண்ணியமும் இறந்தது. குழந்தைப் பிறப்பைப் போல் வேறு ஒரு அற்புதம் ஒரு பெண்ணிற்கு நிகழவே முடியாது என்று ஆழமாக நம்புகிறேன். தினம் மகளுக்காக பிசைந்த சாதத்தை ஒரு பருக்கை விடாமல் அவளுக்கு ஊட்டி முடிப்பதையும், அவளுடைய உடைகளை துவைத்து, மடித்து அழகாக வரிசைப் படுத்துவதையுமே எனது மிகப் பெரிய சாதனைகளாக நினைக்கிறேன்!</li>
</ul>
</div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<ul style="text-align: left;">
<li>கூடுதலாக ஒரு தாய்-தந்தை அற்ற குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற என் பல வருடக் கொள்கை இடிந்தது. என் மகளை நேசிப்பது போல மற்றொரு குழந்தையை என்னால் நேசிக்க முடியுமா என்கிற ஐயம் மனதில் வந்துவிட்டது. இதை மிகுந்த குற்ற உணர்வோடுச் சொல்கிறேன்.</li>
</ul>
<ul style="text-align: left;">
<li> சில தோல்விகள் என்னை பயமுறுத்துகின்றன...என் மகள் குழந்தைகள் காப்பகத்திலிருந்து வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும்போது, அவளை என் கணவரிடம் விட்டுவிட்டு நான் வெளியில் செல்லும் நேரங்களில், "அம்மா எங்கே?" என்று அவள் கேட்காதபோது, என் சொல் பேச்சை மதிக்காதபோது, ஒரு தாயாக நான் தோல்வியடைகிறேன்...</li>
</ul>
<ul style="text-align: left;">
<li>எப்பொழுதுமே அன்றைய தினத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் நான், இப்பொழுது என் வயோதிகத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன். எனக்கு எழுபது வயதாகி , உடல் நொடிந்து போகும்போது, மகளுக்கு அப்போது திருமணம் ஆகி, கணவர், குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள் என்ற யதார்தத்தைத் தாண்டி, அவளை என்னால் பார்த்துக்கொள்ள முடியாதே என்று அர்த்தமற்று கவலைப்படுகிறேன். </li>
</ul>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBcPP5HGbadJWyWpxjbQwZzgsOfCH-CdRXDYAH5JlEByRGSf68KGLAfPJ0Z9NTk6PjX4uOVrwQ6ocFWuLU8kHJIpluPozYRaw8S8hXOSouhvu0rRoH6rpFPgC6lSDQUG9nOQ2G/s1600/hair+band.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBcPP5HGbadJWyWpxjbQwZzgsOfCH-CdRXDYAH5JlEByRGSf68KGLAfPJ0Z9NTk6PjX4uOVrwQ6ocFWuLU8kHJIpluPozYRaw8S8hXOSouhvu0rRoH6rpFPgC6lSDQUG9nOQ2G/s1600/hair+band.jpg" /></a></div>
<div>
<br /></div>
எத்தனை தோல்விகள், பயங்கள், வருத்தங்கள் இருந்தால் என்ன? முப்பது பேருக்கு மத்தியில், அவள் என்னைத் தேடி, ஒவ்வொருவராக அன்னாந்துப் பார்த்து, அது நான் இல்லை என்று தெரிந்ததும் முகம் வாடி, கடைசியாக என்னைப் பார்ததும் முகம் பளிச்சிட ஓடி வந்து கட்டிக்கொள்கையில், வாழ்க்கையில் அத்தனை வெற்றிகளும் எனக்குக் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன். <br />
<br />
தாய்மை வெல்க!<br />
<br />
பி.கு:<br />
<br />
எனது பிரசவ அனுபவத்தைப் பற்றி நான் முன்பு எழுதிய பதிவுகளின் சுட்டிகள் இதோ:<br />
<a href="http://siragugal.blogspot.com/2010_04_01_archive.html" target="_blank">என் பிரசவ அறையில் - 1</a><br />
<a href="http://siragugal.blogspot.com/2010_05_01_archive.html" target="_blank">என் பிரசவ அறையில் - 2</a><br />
<br />
<br />
<br />
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
</div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<span class="Apple-style-span" style="color: #181818; font-family: georgia, serif;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 18px;"><br /></span></span></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
</div>
</div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<br /></div>
</div>Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-9375592.post-55606753559789151752012-05-14T08:16:00.000-04:002012-05-14T08:16:23.147-04:00முகப்புத்தகத்தில் பெண்களின் "டாப் டென்" நடவடிக்கைகள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi33-lj0viyWjZuXW_j3CqcTn7LcwS2i3728bUmSUcDFH0swW2VkJDO2mlVifTloelJLWq7myY-CImAMj5YWhFc32BKSWN6tXSs-_Notr8bOGMqIK5bPfDuU41yL2r4j9qdxAxB/s1600/fb2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi33-lj0viyWjZuXW_j3CqcTn7LcwS2i3728bUmSUcDFH0swW2VkJDO2mlVifTloelJLWq7myY-CImAMj5YWhFc32BKSWN6tXSs-_Notr8bOGMqIK5bPfDuU41yL2r4j9qdxAxB/s1600/fb2.jpg" /></a></div>
<br />
<br />
முகத்தைப் பார்த்துக்கொள்ளாமலேயே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஊடகத்திற்கு "முகப்புத்தகம்"(facebook) என்று பெயரிட்டது சற்று விந்தையாக இருக்கிறது. ஆனால் இந்த ஊடகம் எந்த அளவு நம்மிடையே பிரபலாமாகிவிட்டது! முகப்புத்தகத்திற்கு எவ்வளவோ ஆக்கபூர்வமான பயன் கள் இருக்கின்றன. வியாபாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கும் பலர் இந்த ஊடகத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நான் உட்பட, நம்ம ஊர் பெண்கள் முகப்புத்தகத்தை ஒரு பொழுது போக்குத் தளமாகவே பயன்படுத்துகிறோம். எனது முகப்புத்தகத்தில் இருக்கும் பெண்கள் பெரும்பாலானோர் நடுத்தர வயதினர். குடும்பத் தலைவிகள், அல்லது வேலைக்குச் செல்லும் தாய்மார்கள். இவர்களுடன் தினமும் முகப்புத்தகத்தில் தொடர்பில் இருப்பது ஒரு சுவையான அனுபவமாக இருக்கிறது. <br />
<br />
வீட்டு வேலையெல்லாம் முடித்த பிறகு, குழந்தைகள் தூங்கிய பிறகு ஒரு ஐந்து நிமிடம் முகப்புத்தகத்தினுள் நுழைந்து, யார் என்ன புதிதாக செய்தி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்து, ஒரு "likes" போட்டுவிட்டு பின் தூங்கப் போவது பல பெண்களின் வழக்கமாக இருக்கிறது. சிலர் காலை எழுந்தவுடன் சட்டென்று ஒரு எட்டு பார்த்துவிடுகிறார்கள். கொஞ்சம் "tech savvy" ஆன பெண்கள், வெளியில் இருக்கும்போதே, தன் செல்பேசி மூலமாகவே முகப்புத்தகத்தைப் பார்த்து செய்திகளையும் போட்டுவிடுகிறார்கள். நீண்ட நாட்கள் சந்திக்காதவர்கள் சந்தித்துக்கொண்டால் கூட முகப்புத்தகத்தில் அவர்கள் இட்ட செய்தியைக் குறிப்பிட்டு "நீங்க வீடு வாங்கிட்டதா முகப்புத்தகத்தில் போட்டிருந்தீங்க, வாழ்த்துக்கள்" என்கிற ரீதியில் அவர்களின் உரையாடலுக்கு உந்துகோலாக முகப்புத்தகம் இருக்கிறது. <br />
<br />
இவர்கள்(நான் உட்பட) முகப் புத்தகத்தில் என்னதான் செய்கிறார்கள்? இதோ ஒரு "டாப் டென்" பட்டியல்!<br />
<ol style="text-align: left;">
<li>நிறைய பெண்கள் தம் குழந்தைகளின் புகைப்படங்களை முகப்புத்தகத்தில் இடுவதை விரும்புகிறார்கள். அடிக்கடி பார்த்துக்கொள்ளாவிட்டாலும், ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளின் வளர்ச்சியை நாம் தெரிந்துகொள்வதற்கு இது வசதியாக இருக்கிறது. </li>
<li>80 களிலும் 90 களிலும் வந்த திரைப்படப் பாடல்களின் யூ ட்யூப் வீடியோக்களைப் போட்டு பழைய கல்லூரி நினைவுகளைக் கிளப்பிவிடுகிறார்கள்.</li>
<li>எங்காவது ஒரு அழகான ஆடம்பர விடுமுறைக்குச் சென்றுவிட்டு அந்த புகைப்படங்களைப் போட்டு, பல குடும்பங்களில் அடுத்த விடுமுறைக்கான கேள்வியையும், சச்சரவையும் உண்டாக்கிவிடுகிறார்கள்.</li>
<li>பிறந்தநாட்கள், வருடப்பிறப்பு போன்ற விசேசங்களுக்கு முகப்புத்தகத்திலேயே வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு தொலைபேசாமல் தப்பித்துக்கொள்கிறார்கள்.</li>
<li>அன்று வீட்டில் செய்த ஒரு உணவு வகையை புகைப்படம் எடுத்துப் போட்டு, வீட்டில் கணவர் பாராட்டாவிட்டாலும், முகப்புத்தக நண்பர்களெல்லாம் "ஆகா பார்க்கவே அருமையாக இருக்கிறதே" என்றும் "எச்சில் ஊறுகிறதே" என்றும் பின்னூட்டம் இடுகையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். </li>
<li>வீட்டில் ஒரு சோக நிகழ்ச்சி நடந்தால், அதனை முகப்புத்தகத்தில் பகிர்ந்து, நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகளிலும், பிரார்த்தனைகளிலும் சற்று மனம் சமாதானமடைகிறார்கள். </li>
<li>மின் அஞ்சல்களை விட முகப்புத்தகத்தில் பிரைவெட் மெசேஜ் அனுப்புவதையே அதிகம் விரும்புகிறார்கள்.</li>
<li>பழைய கல்லூரி நண்பர்களின் முதிர்ந்த தோற்றத்தைப் பார்த்து "ஐயோ இப்படி வயசாகி போய்விட்டதே" என்று மனதிற்குள் வருத்தப்படுகிறார்கள். நமது புகைப்படத்தைப் பார்த்து அந்த பக்கத்திலும் அப்படியே நினைப்பார்கள் என்பது மறந்து போயிருக்கும். </li>
<li>ஒரு பாட்டுப் போட்டி, நாடகம் போன்றவற்றில் கலந்துகொண்ட சிறு சாதனைகளை பெருமிதத்துடன் அறிவித்து, நண்பர்களின் பாராட்டுக்களை சேகரித்து மகிழ்கிறார்கள்.</li>
<li> பள்ளியின் முதல் நாள், சைக்கிள் ஓட்டிய முதல் நாள், காது குத்திய நாள் என்று குழந்தைகள் கடந்த மைல்கற்களை பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள். </li>
</ol>
<div>
இதில் எதையுமே செய்யாமல், முகப்புத்தக கணக்கு மட்டும் வைத்துக்கொண்டு கமுக்கமாக இருக்கும் பெண்களும் உண்டு. நான் இந்தப் பட்டியலில் இருப்பவற்றை ஒன்று விடாமல் செய்துகொண்டு தான் இருக்கிறேன். இந்த வாரம் எனது நட்சத்திரப் பதிவுகள் அனைத்தையும் கூட என் முகப்புத்தகத்திலும் இடுவதாகத் திட்டம்! 200 மில்லியன் நபர்கள் கொண்ட இந்த ஊடகத்தில் பிரபலமாக இருப்பது முக்கியம், இல்லையா?</div>
<br />
<br />
<br /></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 12px; line-height: 19px;">
</span><br />
<div>
</div>
<span class="Apple-style-span" style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 12px; line-height: 19px;">
</span></div>
</div>Unknownnoreply@blogger.com16tag:blogger.com,1999:blog-9375592.post-6025172735099774572012-05-13T22:09:00.000-04:002012-05-14T12:50:29.365-04:00தாய்மை எனப்படுவது யாதெனில்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
நேற்று மே மாதம் 13 ஆம் தெதி...தாய்மையைக் கொண்டாடும் "அன்னையர் தினம்"! அனைத்து தாய்மார்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! <br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5j5AT5LmdPDR5RDGcPsCniaq3OJ3fYvhnDy3v5XnyRiZ5DDnBncfAev91MtgmlV54_U2GZsPbj0nRzjSax1xsignDeCamEmMhSdIzONLYOE8IbvryUzDmLaeT4LXoxBUUA7B2/s1600/Motherhood+5.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5j5AT5LmdPDR5RDGcPsCniaq3OJ3fYvhnDy3v5XnyRiZ5DDnBncfAev91MtgmlV54_U2GZsPbj0nRzjSax1xsignDeCamEmMhSdIzONLYOE8IbvryUzDmLaeT4LXoxBUUA7B2/s320/Motherhood+5.jpg" width="204" /></a>என் மகள் புகழ்மதி பிறந்தபின், இரண்டு அன்னையர் தினங்களை நான் கடந்துவிட்டேன். பரிசு பொருட்கள், பூக்கள், வாழ்த்துக்கள், விருந்து என்று கொண்டாடியாகிவிட்டது. தாய்மை கொண்டாடப்பட வேண்டிய ஒன்று தான் என்றாலும், மனதின் ஓரத்தில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. நான் ஒரு சராசரித் தாய்...பெரிதாக சவால்கள் எதுவும் எனக்கு இல்லை. தாய்மையின் அத்தனை சிறப்பையும், மகிழ்ச்சியையும் ஒவ்வொரு நாளும் இரசித்து, அனுபவித்து வருகிறேன், எனக்கு நேரமும், வாய்ப்பும் இருப்பதனால். ஆனால்...<br />
<br />
நான் புகழ்மதியை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்லும் அதே நேரம், எங்கோ ஒரு தாய் தன் குழந்தைக்கு அடுத்த வேளை உணவு தேடி அலைகிறாள். நான் புகழ்மதியை அணைத்துக்கொண்டு பஞ்சு மெத்தையில் படுத்திருக்கையில், எங்கோ ஒரு தாய் ஒரு இடிந்த சுவற்றிற்குப் பின்னால் தன் குழந்தையை பாதுகாப்பாக ஒரு இரவேனும் தூங்கவைக்க முயல்கிறாள்.<br />
<br />
துன்பகரமான சூழல்களில், ஆபத்தான சூழல்களில், கடும் ஏழ்மையில் கூட தம் குழந்தைகளுக்கு ஒரு விடியலைக் காட்டவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தாய்மார்களை இந்த அன்னையர் தினத்தில் நினைவு கூற விரும்புகிறேன்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaB90PTGPApmoQJeey1eTOOPB7WZ3pDz-TGd8nDfJnpwznqFvKNinmnWTH22DpwSUVo7spBle_1mOJmYZXPFzL4NDdMRj4hxsDssPFh1iP0WW32lek-9ATN6u4XnTovP2qfoGV/s1600/Motherhood+6.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaB90PTGPApmoQJeey1eTOOPB7WZ3pDz-TGd8nDfJnpwznqFvKNinmnWTH22DpwSUVo7spBle_1mOJmYZXPFzL4NDdMRj4hxsDssPFh1iP0WW32lek-9ATN6u4XnTovP2qfoGV/s320/Motherhood+6.jpg" width="155" /></a>புகழ்மதி வயிற்றில் இருந்தபோது, நான் இணையத்தில் படித்த ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது. CARE என்கிற ஒரு பன்னாட்டு மனிதாபிமான அமைப்பைச் சேர்ந்த Melanie Brooks என்கிற பெண்மணி, 2009 வருடம் அன்னையர் தினத்தன்று, இலங்கையில் வவுனியாவில் உள்ள அகதிகள் முகாமில் இருந்த தாய்மார்களுடன் அன்று முழுக்க இருந்து பேசிக்கொண்டிருந்தாராம். அந்தத் தாய்மார்கள் பல மாதங்களாக கால் நடையாக குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராக ஓடி ஒளிந்து தப்பித்து கடைசியில் அந்த அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்தவர்கள். அவர்களுடைய இலக்கு ஒன்று தான். தம் குழந்தைகளுக்கு அடுத்த வேளை சாப்பாடும் பாதுகாப்பும். அந்த சுட்டெரிக்கும் வெயிலில், தன் 6 மாதக் குழந்தைக்கு விசிறிக்கொண்டிருந்த ஒரு தாய், கழுத்தளவு தண்ணீரில் அந்தக் குழந்தையை தலைக்குமேல் தூக்கிக்கொண்டு, போர் வளாகத்தில் இருந்து தப்பி ஓடி வந்தவராம்! என்னால் அந்த சூழ்நிலையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. <br />
<br />
அந்த ஈழத் தாய்மார்களை நான் நேரில் பார்த்ததில்லை. அவர்களுடைய துயரத்தை நான் வேறு எதனுடனும் ஒப்பிட விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவில் கத்ரீனா என்கிற சூறாவளி ஒரு ஊரையே அழித்த போது, வீடு வாசல் இழந்தவர்களுக்கு உதவ, ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பாக ஒரு முகாமில் நான் சில வாரங்கள் வேலை செய்தேன். அப்போது அங்கே அந்த தொண்டு நிறுவனம் வழங்கும் உதவிக் காசோலையையும் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு சுட்டெரிக்கும் வெயிலில் கைக்குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு கால் கடுக்க நிற்கும் தாய்மார்களைப் பார்த்திருக்கிறேன். <br />
<br />
இவர்கள் மட்டுமன்றி, உலகத்தில் வாழும் அத்தனை விதவைத் தாய்மார்கள், விவாகரத்தான "single mothers" என்று அழைக்கப்படும் ஒற்றைத் தாய்மார்கள், தம் வீட்டிலேயே வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட தாய்மார்கள்...இவர்களுக்கெல்லாம் வாழ்க்கையில் கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கை இருப்பதற்கே அவர்களின் குழந்தைகள் தான் காரணமாக இருப்பார்கள். <br />
<br />
ஓரு ஆங்கிலக் கவிதை என் மனதைப் பிழிந்து போட்டது...<br />
<br />
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="color: #181818; font-family: georgia, serif; font-size: 14px; line-height: 18px;"><b>“my mother, poor fish,<br />wanting to be happy, beaten two or three times a<br />week, telling me to be happy: "Henry, smile!<br />why don't you ever smile?"<br /><br />and then she would smile, to show me how, and it was the<br />saddest smile I ever saw”</b><br />― <a href="http://www.goodreads.com/author/show/13275.Charles_Bukowski" style="color: #666600; text-decoration: none;">Charles Bukowski</a></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5ldxnsnYP2xghOmwj-a1iTslBUdoG6aH_9wuWGMwUyAjXzK6eg4Rp7KKPOrwXHXDGF0_s6S5A2yQUmbKTb4QSKsDgkYxNgSKxyUXp2MSkFYV3K_2D1vqOzDYtbsqxvkgfYfGa/s1600/Motherhood+2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5ldxnsnYP2xghOmwj-a1iTslBUdoG6aH_9wuWGMwUyAjXzK6eg4Rp7KKPOrwXHXDGF0_s6S5A2yQUmbKTb4QSKsDgkYxNgSKxyUXp2MSkFYV3K_2D1vqOzDYtbsqxvkgfYfGa/s320/Motherhood+2.jpg" width="253" /></a></div>
<br />
<br />
என்னுடன் பணி புரியும் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் என்னிடம் தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி மனம் விட்டு பேசிக்கொண்டிருந்த போது, தனது 10 ஆவது வயதில் ஒரு நாள் அவளுடைய தந்தை ஏதோ ஒரு விவாதத்தின் போது, கொதிக்கும் நீரை தன் தாய் மீது கொட்டியதாகச் சொன்னாள். அந்தத் தாய் அத்தனை வேதனையிலும், தன் மகள்களை அந்த மனிதாபிமானமற்ற மனிதரிடம் விட்டு செல்லக்கூடாதென்று, அவர்களையும் இழுத்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஓடினாராம்! </div>
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px;">
நான் அமெரிக்கா வந்த புதிதில் K-Mart என்கிற அங்காடியில் பகுதி நேர வேலை செய்தேன். அங்கே காலை 8 மணியிலிருந்து 4 மணி வரை வேலை செய்துவிட்டு, அதன் பின் இரவு 10 மணி வரை மற்றொரு உணவகத்தில் வேலை செய்த ஒரு பெண்மணியிடன், "ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள்?" என்று கேட்டபோது, "என் மகனும் அவனது பள்ளித் தோழர்கள் போலவே $100 ஷூக்கள் எப்போது அணிவது?" என்று கேட்டார். அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை. அதனால் அந்தப் பெண்மணி சொன்னது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றியது. இப்பொழுது தான் புரிகிறது, அன்று தாய்மையை அதன் மிகச் சிறந்த வடிவில் நான் பார்த்திருக்கிறேன் என்று!<br />
<br />
இந்தச் சூழலுக்கு மிகப் பொருத்தமான ஒரு திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது...<br />
<br />
<b>கள்ளிக் காட்டில் பிறந்த தாயே</b><br />
<b>என்னக் கல்லுடைத்து வளர்த்த நீயே</b><br />
<strong>முள்ளுக்காட்டில் முளைத்த தாயே</strong><br />
<strong>என்ன முள்ளு தைக்க விடல நீயே</strong><br />
<b><br /></b><br />
சும்மாவா தூக்கி தேசிய விருது கொடுத்தார்கள் இந்த வரிகளை எழுதிய வைரமுத்துவுக்கு?!<br />
<br />
சரி! தாய்மையின் சிறப்பைப் பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. இப்பொழுது ஒரு சிறிய போட்டி, இந்த வலைப்பதிவிற்கு வந்தவர்களுக்கு!<br />
<br />
<b><span class="Apple-style-span" style="font-size: large;">தாய்மை எனப்படுவது யாதெனில்...</span></b><br />
<br />
என்கிற வாக்கியத்தை அழகான அர்த்தமுள்ள வார்த்தைகளால் நிறைவு செய்யவும். அதிகபட்சம் நான்கு வார்த்தைகள் உபயோகிக்கலாம். முயற்சி செய்து பாருங்கள். தாய்மை என்பது பற்றி மற்றவர்களின் வரையறை என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXQRCCRCWky8M4Uj2UgAUxCWCFlUtOigA8M61T2KCMeCxJYTWxBsb_yPW_Z0H8ahbCdvrxsiBc-3OnceyghGKNkL1jDncX9CM88FY_9Htk6LHtu9vp8Tj_zCNA_MSYqVNyBvQx/s1600/Motherhood+4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXQRCCRCWky8M4Uj2UgAUxCWCFlUtOigA8M61T2KCMeCxJYTWxBsb_yPW_Z0H8ahbCdvrxsiBc-3OnceyghGKNkL1jDncX9CM88FY_9Htk6LHtu9vp8Tj_zCNA_MSYqVNyBvQx/s320/Motherhood+4.jpg" width="256" /></a></div>
<br />
<br />
<br />
<br /></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<span class="Apple-style-span" style="color: #333333; font-family: Georgia, "Times New Roman", Times, serif; font-size: x-small;"><span class="Apple-style-span" style="line-height: 22px;"><br /></span></span><br />
<span class="Apple-style-span" style="color: #333333; font-family: Georgia, "Times New Roman", Times, serif; font-size: x-small;"><span class="Apple-style-span" style="line-height: 22px;"><br /></span></span><br />
<span class="Apple-style-span" style="color: #333333; font-family: Georgia, "Times New Roman", Times, serif; font-size: 13px; line-height: 22px;"></span><br />
<div class="sharedaddy sd-like-enabled sd-sharing-enabled" style="border-bottom-left-radius: 0px 0px; border-bottom-right-radius: 0px 0px; border-top-left-radius: 0px 0px; border-top-right-radius: 0px 0px; clear: both; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 12px; zoom: 1;">
<div class="robots-nocontent sd-block sd-social sd-social-icon-text sd-sharing" style="border-bottom-left-radius: 0px 0px; border-bottom-right-radius: 0px 0px; border-top-left-radius: 0px 0px; border-top-right-radius: 0px 0px; border-top: 1px solid; margin: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 10px; width: 600px; zoom: 1;">
</div>
</div>
<span class="Apple-style-span" style="color: #333333; font-family: Georgia, "Times New Roman", Times, serif; font-size: 13px; line-height: 22px;"></span></div>Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-9375592.post-62299133327520791252011-11-08T23:47:00.001-05:002011-11-08T23:49:37.031-05:00வாசிங்டனில் செய்தி ஊடக அருங்காட்சியகம் - பாகம் 3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">செய்தி ஊடகத் துறையில் எப்படி பெண்கள் நுழந்தார்கள், பின் எப்படியெல்லாம் முன்னேறி வந்தார்கள் என்பதைப் பற்றி சுவையான செய்திகளை தெரிந்துகொண்டேன்.<br />
<div><br />
</div><div>Anna Cox Marie என்கிற பெண் எழுத்தாளர், தனது வலைப்பதிவில் அமெரிக்க அரசியல் கிசுகிசுக்களை எழுதி மிகப் பிரபலமானாராம்! தனது பதிவை வைத்து பல மில்லியன் டாலர்கள் சம்பாதித்தாராம்! ஹம்ம்ம்ம்...நானும் தான் பல வருடங்களாக பதிவு எழுதுகிறேன். தினம் ஒரு 10 பேர் படித்தாலே அதிசயமாக இருக்கிறது. இந்தச் செய்தியை பார்த்தது முதல் எனது பதிவை அடுத்த நிலைக்கு எப்படி எடுத்துச் செல்வதென்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். </div><div><br />
</div><div>பல வருடங்களுக்கு முன், ஆண் நிருபர்கள் மட்டுமே செய்தித் துறையில் இருந்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் பெண்கள் நுழையத் தொடங்கிய போது அது சமூகத்தால் எளிதில் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. ஆனால் பெண்கள் விடவில்லை! </div><div><br />
</div><div>Melissa ludtke என்கிற பெண், விளையாட்டுச் செய்திகள் பிரிவில் (sports) நிருபராக பணிபுரிந்தார். ஒரு முறை ஆண் விளையாட்டு வீரர்களின் லாக்கர் அறைக்குச் சென்று பேட்டி எடுக்க அனுமதி மறுக்கப்பட்டார். ஆனால் அதற்காக அவர் வழக்குத் தொடர்ந்து, அதில் வெற்றி பெற்று ஆண் நிருபர்களுடனான சம உரிமையைப் பெற்றார்! பெருமைக்குரிய சாதனை! </div><div><br />
</div><div>நிருபர்கள் பல சூழ்நிலையில் காவல் துறை தடையினைத் தாண்டிச் செல்லவேண்டியிருப்பது தெரிந்ததே. அதற்கான அனுமதிச் சீட்டில், "Please pass him in the police line" என்கிற வரிகளே பல வருடங்களாக இருந்ததாம். முதல் முறையாக Rita Good என்கிற பெண் நிருபருக்காக "him" என்பதை "her" என்று கையால் அடித்து மாற்றினார்களாம்!</div><div><br />
</div><div>இப்படி இந்த அருங்காட்சியகத்தில் கொட்டிக் கிடக்கும் செய்திகளைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் நேரில் சென்று ஒரு மூழு தினத்தை அங்கே செலவிட்டால் அது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். வாசிங்டன் டிசி பகுதியில் இருப்பவர்களும், வாசிங்டன் டிசிக்கு வருபவர்களும் இந்த அருங்காட்சியகத்தைக் காணத் தவறாதீர்கள். </div></div>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9375592.post-26661810679601460352011-11-06T23:05:00.001-05:002011-11-06T23:07:29.629-05:00செய்தி ஊடக அருங்காட்சியகம் - பாகம் 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்களுக்கான பகுதிக்குச் சென்றபோது, அங்கே ஒரு திரையில் அந்த விருது பெற்ற சில புகைப்பட நிபுணர்களின் பேட்டி ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு நிபுணர் கூறுகிறார் <b>"It's a honor to be a journalist, because if you care about something, you can make half a million people care about it" </b>என்று. எவ்வளவு உண்மை! கொசோவாவில் நடந்த இனப் போராட்டத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது அங்கே இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் வரை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmipYFxpu7ne5Yj13a1UFrz5ppf_d9kktYCi3QMPpIJBGv7oMXxf4sh6EXfihg6998fsNbHQzEqOgih_lOuZ5KFoIV_T-E_S76bqV15mWcOX6C90icBryUzwXIDE4sWc7K30oe/s1600/photo-5.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmipYFxpu7ne5Yj13a1UFrz5ppf_d9kktYCi3QMPpIJBGv7oMXxf4sh6EXfihg6998fsNbHQzEqOgih_lOuZ5KFoIV_T-E_S76bqV15mWcOX6C90icBryUzwXIDE4sWc7K30oe/s320/photo-5.JPG" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: left;">கொசோவாவில் உள்ள ஒரு அகதிகள் முகாமில், இரும்புக் கம்பிகளின் இருபுறம் உள்ள உறவிணர்கள் இந்தக் இரண்டு வயது குழந்தையை முத்தம் கொடுப்பதற்காக கம்பிகளின் வழியாக கைமாற்றம் செய்துகொள்கிறார்கள். </div><div class="separator" style="clear: both; text-align: left;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7xfnUzSGZ2mHFTuPS7m9PI7IiX8gtvaUmds6JHnx0plu8oNuT9phnm4hTWyNPWxoqZRXFsdPjAsXmf4WsC9itCPj_TlzyQh-6MsUGAhSIu9Z6myEoVbC6oOma4PxxxRP2qrJb/s1600/photo-6.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7xfnUzSGZ2mHFTuPS7m9PI7IiX8gtvaUmds6JHnx0plu8oNuT9phnm4hTWyNPWxoqZRXFsdPjAsXmf4WsC9itCPj_TlzyQh-6MsUGAhSIu9Z6myEoVbC6oOma4PxxxRP2qrJb/s320/photo-6.JPG" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: left;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: left;">தன் உடலில் போதை மருந்தை செலுத்துக்கொள்ளும் ஒரு தாய்! பின்னால் துவண்டு தூங்கிக்கொண்டிருக்கும் அவளது குழந்தை! </div><div class="separator" style="clear: both; text-align: left;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEio9r2Q1UB_4YLiWEJ1aM6WtvUgdu1iOEpH5CQ4sqUKfYOmTyDUgZo_FvRNf1wtC3zkxJW1Q4CwiOOe0HjQ5FQKqWpo7Fc2dokpQLfgWsiS8-Qa8iBIuLLlIJMkkAx7-lpROTrL/s1600/photo-7.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEio9r2Q1UB_4YLiWEJ1aM6WtvUgdu1iOEpH5CQ4sqUKfYOmTyDUgZo_FvRNf1wtC3zkxJW1Q4CwiOOe0HjQ5FQKqWpo7Fc2dokpQLfgWsiS8-Qa8iBIuLLlIJMkkAx7-lpROTrL/s320/photo-7.JPG" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: left;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: left;">கொடிய தீ விபத்தில் சிக்கி எரிந்த தன் குழந்தையை அள்ளிக்கொள்ளும் தந்தை! </div><div class="separator" style="clear: both; text-align: left;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: left;">இப்படி வாழ்க்கையின் கொடூரங்களை அந்த தருணங்களை அப்படியே தத்ரூபமாக பிரதிபலிக்கும் இந்த புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்களைப் பார்க்கும் போது இதயம் கனத்தது. </div><div class="separator" style="clear: both; text-align: left;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: left;">அதே சமையம். இதைவிட பல மடங்கு கொடூர நிகழ்வுகள் ஈழத்தில் நடந்திருந்தும், அவற்றைப் பற்றின எந்தப் பதிவுகளும் புகைப்படங்களும் அந்த அருங்காட்சியகத்தில் இல்லாதது வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. ஈழத்தமிழர்கள் இலங்கை முகாம்களில் கிடந்து அவதிப்படும் பல நெஞ்சை உருக்கும் புகைப்படங்களை நான் இணையத்தில் பார்த்திருக்கிறேன். அவற்றில் ஒன்றாவது இந்த அருங்காட்சியகத்தில் இருந்திருந்தால், அது தினம் நூற்றுக்கணக்கான இதயங்களை பாதித்திருக்குமே?! </div><div class="separator" style="clear: both; text-align: left;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: left;">அடுத்தப் பதிவில் ஊடங்களில் பெண்களைப் பற்றி சில சுவையான தகவல்கள்...</div></div>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9375592.post-11780452717799051862011-10-17T23:34:00.005-04:002011-10-18T14:58:44.788-04:00வாசிங்டன் நகரில் செய்தி ஊடகங்களுக்கான அருங்காட்சியகம் - பாகம் ஒன்று<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுவதற்கு ஒரு உருப்படியான விசயம் கிடைத்தது. <br />
<br />
வாசிங்டன் மாநகரம் என்பது அருங்காட்சியகங்களின் குவியல் என்று அனைவரும் அறிந்ததே. பல வருடங்களாக வாசிங்டன் டிசி பகுதியில் நான் வசித்தாலும், ஒரு அருங்காட்சியகத்தைக்கூட முழுமையாகப் பார்க்கவில்லை. ஒரு மணி நேரத்திற்குப் பின் சலிப்புத் தட்டி விடுகிறது. ஆனால் ஒரு நாள் முழுவதும் இருந்தும் நேரமே பற்றவில்லை ஒரு அருங்காட்சியகத்தில் மட்டும். 2007 ஆம் ஆண்டு "Newseum" என்றொரு அருங்காட்சியகம் தொட ங்ககப்பட்டது. அதாவது ஊடகச் செய்திகளுக்கான பிரத்தியேகமான ஒரு அருங்காட்சியகம். இத்தனை ஆண்டுகளாக அதனைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், போய் பார்க்கும் சந்தர்ப்பம் சென்ற வாரம் தான் கிடைத்தது. கட்டிட அமைப்பு, காட்சிப் பொருட்களின் வடிவமைப்பு, விவரங்கள், ஆங்காங்கே பெரிய தொலைக்காட்சித் திரைகளில் சிறப்புப் பேட்டிகள், குறும்படங்கள், என்று பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது இந்த அருங்காட்சியக அனுபவம்.<br />
<br />
குறைந்தது 5 மணி நேரங்கள் ஆகும் சாவகாசமாக 6 தளங்களையும் பார்த்து முடிக்க. பத்திரிக்கை/ஊடகம் போன்ற துறை களில் ஈடுபாடு உடையவர்கள் அங்கேயே இரவு ஓரமாகத் தூங்கிவிடலாம். அவ்வளவு விசயங்கள் இருக்கின்றன படித்தும் பார்த்தும் தெரிந்துகொள்ள. அதில் சிலவற்றை பற்றி மட்டும் இங்கே எழுதுகிறேன்.<br />
<br />
நேரில் காணக் கிடைக்காத, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு அரிய காட்சிப் பொருட்களை அங்கே கண்டேன். <br />
<br />
1. <b><u>பெர்லின் சுவற்றின்(Berlin Wall) சில பகுதிகள்:</u></b> <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhj-gg-5AUxvXrMmj25cXaev6bgzRuAjVnJMw7Js1koca1wSIs2acANGLNK64tH21L4POntec_9aQXzxy9t05VVQ9YUWjrpzMfPY48LSiTutuY9dyQBS4mrLGKv0ounwWVY2ElX/s1600/photo-1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhj-gg-5AUxvXrMmj25cXaev6bgzRuAjVnJMw7Js1koca1wSIs2acANGLNK64tH21L4POntec_9aQXzxy9t05VVQ9YUWjrpzMfPY48LSiTutuY9dyQBS4mrLGKv0ounwWVY2ElX/s320/photo-1.JPG" width="320" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvp361MVcffjYnJT-bflHqSjb_QwZKl12vX7iSETLQEPkP8l3lDPSMOTD1Lf-oFDVHP-iQ5oldDntseiuI42rBdVKpDZdSPiPaTv5e2wAaW7kx2sOK8PTUZfkG0aRHQ8xAMNbu/s1600/photo.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvp361MVcffjYnJT-bflHqSjb_QwZKl12vX7iSETLQEPkP8l3lDPSMOTD1Lf-oFDVHP-iQ5oldDntseiuI42rBdVKpDZdSPiPaTv5e2wAaW7kx2sOK8PTUZfkG0aRHQ8xAMNbu/s320/photo.JPG" width="320" /></a></div>ஆம்! உண்மையான இடிக்கப்பட்ட பெர்லின் சுவற்றிலிருந்து சில பகுதிகளைக் கொண்டு வந்து இங்கே காட்சியாக வைத்திருக்கிறார்கள். காரணம், செய்தி ஊடகங்களுக்கு பெர்லின் சுவர் கட்டப்பட்ட காலகட்டம் மிக முக்கியமான ஒன்று. கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில் ஊடகங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதைத்தான் நிருபர்கள் பத்திரிகைகளில் எழுத முடிந்தது. ஜனநாயக மேற்கு ஜெர்மனியில் ஊடகங்களுக்குக் சுதந்திரம் இருந்தது. யாரும் எளிதில் கடந்து செல்ல முடியாத இந்த கொடிய சுவற்றைத் தாண்டி தகவல்கள் கடந்து சென்றதில் செய்தி ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. பெர்லினுக்குச் சென்று இந்தச் சுவற்றைப் பார்க்கவா முடியும்? ஒரு நாட்டை இரண்டு கருத்தியல்கள் கொண்ட இரு பகுதிகளாக 28 வருடங்களாகப் பிரித்து வைத்திருந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவற்றை இப்படி தொட்டு விடும் தூரத்தில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது.<br />
<br />
2. <b><u>நியூயார்க் உலக வர்த்தக கோபுரத்தின் உச்சியில் இருந்த "antena" வின் உடைந்த பகுதி: </u></b><br />
<b><u><br />
</u></b><br />
செப்டம்பர் 11, 2001 அன்று நியூயார்க் உலக வர்த்தக கோபுரங்களின் மீதான பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதலின் போது உடைந்து விழுந்த இந்த antenna வினால் பல தொலைகாட்சி மற்றும் வானொலி ஒளிபரப்புகள் தடைபட்டன. செய்தித் துறையைச் சேர்ந்த பல நிருபர்கள், புகைப்பட நிபுணர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பயங்கரவாத நிகழ்வைப் பதிவு செய்தார்கள் என்பதை நாம் அறிவோம். மேலும் கோபுரங்களிம் மீது மோதிய ஒரு விமானத்தில் உள்ள சில கருவிகள், பயணிகளின் செல் தொலைபேசிகள் போன்றவற்றையும் காட்சிப் பொருளாகப் பார்த்தபோது மனதிற்குச் சங்கடமாக இருந்தது. 9-11 நிகழ்வைப் பற்றிய ஒரு குறும்படம் ஒரு சின்ன அறையில் ஓடிக்கொண்டிருந்தது. கோபுரங்கள் இடிந்து விழுவது, பொது மக்கள் பயந்து ஓடுவது, இறந்தவர்களின் உறவிணர் பேட்டி போன்றவை திரையில் ஓடிக்கொண்டிருன்தது. பார்வையாளர்கள் பக்கமிருந்து ஒன்றிரண்டு விசும்பல் சத்தம் காதில் கேட்டது.<br />
<br />
3. <b><u>ஒரு குற்றவாளியின் மிரட்டல் கடிதம்:</u></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYiMdbToRL-NU-4aYeRCBS9NR36ndRcH7Eq2nsRnu9Fjm4xj6mbNCjoil84p7SHQHVr5u4UxrxwWt9ReXIq-GsB6O54qSlpX3eDY8QmXavdF18NTHiCei4fdnGOYKWMlGGIlp9/s1600/photo-4.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYiMdbToRL-NU-4aYeRCBS9NR36ndRcH7Eq2nsRnu9Fjm4xj6mbNCjoil84p7SHQHVr5u4UxrxwWt9ReXIq-GsB6O54qSlpX3eDY8QmXavdF18NTHiCei4fdnGOYKWMlGGIlp9/s320/photo-4.JPG" width="240" /></a></div><b><u></u></b> FBI க்கென்று தனியாக ஒரு பகுதி இருக்கிறது. FBI நிறுவனம் கொடுத்து வைத்த ஒன்று. அமெரிக்கச் செய்தி ஊடகங்களின் மொத்த ஆதரவும் அதற்கு இருந்தது. தேசத்தை தீய சக்திகளிடமிருந்து காக்க வந்த காவல் தெய்வங்களாக FBI அதிகாரிகளை ஊடகங்கள் கொண்டாடின. ஹாலிவுட் திரைப்படங்களில் கறுப்பு கோட் சூட், கறுப்புக் கண்ணாடி சகிதம் கம்பீரமாக வந்து, மிகச் சாதுர்யமாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் இந்த FBI அதிகாரிகளின் மீது எனக்கும் ஒரு தனி ஈர்ப்பு உண்டு. FBI கையாண்ட பல முக்கியமான வழக்குகளின் செய்திக் குறிப்புகள் இங்கே உள்ளன. என்னை மிகவும் கவர்ந்த ஒரு காட்சிப்பொருள், ஒரு குற்றவாளி பணம் கேட்டு மிரட்டி எழுதிய ஒரு கடிதம்!!! கதைகளிலும் திரைப்படங்களிலுமே இதுவரை நான் இப்படிப்பட்ட கடிதங்களை பார்த்திருக்கிறேன். ஒரு குற்றவாளி பெண்ணைக் கடத்தி வைத்துக்கொண்டு, தன் சகாக்களை சிறையிலிருந்து விடுதலை செய்யவில்லையேன்றால் அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுவேன் என்று தன் கைப்பட எழுதிய அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் எனக்கு உடல் சில்லிட்டது!!!<br />
<br />
அடுத்து நான் பார்த்தது புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்கள் பகுதி. Eddie Adams என்ற புலிட்சர் விருது பெற்ற ஒரு பத்திரிக்கையாளர், <b>"If it makes you laugh, if it makes you cry, if it rips out your heart , that's a good picture" </b>என்று சொல்லியிருக்கிறார். உண்மைதான்! அங்கிருக்கும் சில புகைப்படங்கள் என் மனதைக் குத்திக் கிழித்தன. அந்தப் புகப்படங்கள் பற்றி அடுத்தப் பதிவில்.<br />
<br />
தொடரும்...<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
</div>Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9375592.post-51758011139909541552011-08-24T10:45:00.002-04:002011-08-24T10:47:42.037-04:00முப்பது வினாடி திகில்! - நேற்று நடந்தது...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">திகிலான ஆங்கிலத் திரைப்படங்கள் எனக்குப் பிடிக்கும். அதிலும், இயற்கை பேரழிவு பற்றிய "Volcano", "Earthquake", "Airport", "Day After Tomorrow" போன்ற படங்கள் ரொம்பவே பிடிக்கும். இதுவரை திரையில் பார்த்து அனுபவித்த அந்த "திகில்" உணர்வை நேற்று நேரிலேயே அனுபவித்து விட்டேன்!!!<br />
<br />
என்ன நடந்தது?<br />
<br />
நீண்ட நாட்களாக எதுவும் வலைப்பதிவில் எழுதவில்லை. ஏதாவது எழுதலாம் என்று தினமும் நினைப்பேன், ஆனால் எழுதுவதற்கான உந்துதலோ ஊக்கமோ ஏற்பட்டல்தானே?!. என்னுடைய ஒன்றரை வயது மகளைத் தாண்டி எதுவுமே என்னால் யோசிக்க முடியவில்லை.<br />
<br />
இயற்கைக்கே எனது இந்த தேக்க நிலை பொறுக்கவில்லை போலும்! ஒரு நில நடுக்கத்தின் மூலம் என்னை அசைத்துப் பார்த்துவிட்டது! அதனால் தான் இந்தப் பதிவை இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.<br />
<br />
நேற்று மதியம் இரண்டு மணியளவில் மதிய உணவு முடிந்து பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தேன். லேசாக தரை அதிர்வது போல் இருந்தது. ஏதோ ஒரு பெரிய வாகனம் வேகமாக வீட்டை தாண்டிப் போகிறது என்று நினைத்துக்கொண்டிருந்த போதே, வீட்டின் கூரை மேலே திடு திடு என்று யாரோ ஓடுவது போல் ஓசை கேட்டது. அதே சமையத்தில் வீடு பலமாக அதிர்ந்தது! அப்போது தான் அது நில நடுக்கம் என்று எனக்கு உரைத்தது. அடுத்து என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை. என் மகள் இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல் பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளை முதலில் தூக்கிக்கொண்டேன். பிறகு மாடிக்குச் சென்று பணம், லைசன்ஸ், பாஸ்போர்ட் போன்ற முக்கியமானவற்றை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஒடிவிடலாம் என்று தோன்றியது. வீடு இடிந்துவிட்டால் என்ன செய்வது? ஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போல் பூமி பிளந்து பாதாளத்தில் விழுந்துவிடுவோமோ? என்று மனதில் பல காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் எதுவுமே செய்யாமல் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தேன். முப்பதே வினாடிகள் தான் இந்தக் கூத்து. நில நடுக்கம் நின்று விட்டது!!! அதற்குபின் நான் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர சில நிமிடங்கள் பிடித்தது! என்னால் நம்பவே முடியவில்லை ஒரு நில நடுக்கத்தை என் வாழ்நாளில் சந்தித்தேன் என்பதை!<br />
<br />
தொலைகாட்சியிலும், இணையத்திலும் "5.8 magnitude earth quake rocks Virginia, Washington DC area" என்று உடனே போடுவிட்டார்கள். அதைப் பார்த்துவிட்டு உறவிணர்கள், நண்பர்களெல்லாம் தொலைபேசியில் அழைத்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒவ்வொருவரிடமும் என் அனுபவத்தைச் சொல்லி சொல்லி நான் சோர்ந்துவிட்டேன்.<br />
<br />
5.8 என்பது மிகப் பெரிய நில நடுக்கம் இல்லை என்றாலும் கூட, முதல் அனுபவம் என்பதால் எங்களை மிகவும் பயமுறுத்திவிட்டது. மேலும் இதன் "after shock" வேறு எந்த நேரத்திலும் மீண்டும் வரலாம் என்கிறார்கள். இப்போதும் மனம் திக் திக் என்று திகிலாகவே இருக்கிறது.<br />
<br />
இனிமேல் வாழ்க்கையில் இந்த இயற்கை பேரழிவு படங்களைப் பார்க்கவே கூடாது!</div>Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-9375592.post-79006547951664420672011-03-25T10:09:00.002-04:002011-03-25T11:59:17.778-04:00அப்பாவின் கனவுக் கன்னி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpT1Cd3MN3f6g0IGWeMrBOAiLGfq0xj-ErlT5CPjAf3dVDJb4NNniHf6lrvAnUrOfWmn51Mhr2wBWPyRtl337h4rG1lxLnatYIt2Orn1hvkI63qX6tl_ctyAfS5fg1pfOUcxpg/s1600/elizabeth_taylor_gallery_40.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpT1Cd3MN3f6g0IGWeMrBOAiLGfq0xj-ErlT5CPjAf3dVDJb4NNniHf6lrvAnUrOfWmn51Mhr2wBWPyRtl337h4rG1lxLnatYIt2Orn1hvkI63qX6tl_ctyAfS5fg1pfOUcxpg/s320/elizabeth_taylor_gallery_40.jpg" width="255" /></a></div><br />
நேற்று முன் தினம், பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் மறைவுச் செய்தி படித்தேன். அப்பா இருந்திருந்தால் மிகவும் வருந்தப்பட்டிருப்பார். ஏனென்றால் எலிசபெத் டெய்லர் அப்பாவின் கனவுக் கன்னி! <br />
<br />
இவரின் திரைப்படங்களை அப்பா அந்த காலங்களில் மிகுந்த ஆர்வத்துடன் பார்ப்பார். அந்தத் திரைப்படங்களை எங்களிடம் அப்படியே சுவையாக விவரிப்பார். நேரில் பார்த்தது போலவே இருக்கும். முக்கியமாக, 60 களில் எலிசபெத் நடித்துக் கலக்கிய 'க்ளியோபாட்ரா' என்ற திரைப்படத்தைப் பற்றி அப்பா மிகவும் சிலாகித்துப் பேசியது நினைவில் இருக்கிறது. அப்போதே ஒரு மில்லியன் டாலர் சம்பளம் கேட்டாராம் எலிசபெத் டெய்லர்!!! நான் சமீபத்தில் தான் அந்தப் படத்தைப் பார்த்தேன். அப்பா மட்டுமல்ல, எலிசபெத் அந்தக் காலக் கட்டங்களில் பல ஆண்களின் கனவுக் கன்னியாக இருதிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. <br />
<br />
அப்பா இறந்துபோவதற்கு முன் அமெரிக்கா வந்திருந்த போது அவரை 'லாஸ் வேகாஸ்' அழைத்துச் சென்றிருந்தோம். அங்கிருந்த 'wax museum' சென்ற போது, அங்கே எலிசபெத் டெய்லரின் மெழுகுச் சிலை இருந்தது. அப்பா ஆர்வத்துடன் அந்தச் சிலையின் அருகே நின்றுகொண்டு தன்னை புகைப்படம் எடுக்கச் சொன்னார். "உங்கள் கனவுக் கன்னி அல்லவா அவர்? சும்மா தோளில் கைப்போட்டு போஸ் கொடுங்கள்" என்று நான் சொன்னேன். "சே சே அதெல்லாம் வேண்டாம்" என்று சொல்லி கூச்சத்துடன் எலிசபெத் டெய்லரின் சிலைக்கருகே நின்று போஸ் கொடுத்தார் அப்பா. <br />
<br />
எலிசபெத் டெய்லரின் மறைவு, அப்பாவைப் பற்றிய இனிய நினைவுகளை கிளறிவிட்டது...<br />
<br />
<br />
<br />
</div>Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9375592.post-12621260881339929962011-02-02T12:03:00.001-05:002011-02-02T12:11:25.626-05:00ஒரு சாலை வழிப் பயணம்(நந்தலாலா), ஒரு காட்டு வழிப் பயணம்(மைனா)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
சமீபத்தில் என் மனதை பாதித்த இரண்டு திரைப்படங்கள் - நந்தலாலா மற்றும் மைனா. இந்த இரு திரைப்படங்களின் கதை களமும் ஒன்றுதான் - நெடுந்தூரப் பயணம். <br />
<br />
ஒரு பயணத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். கதாநாயகனும் கதாநாயகியும் சந்தர்ப்ப சூழ்நிலையால் வேண்டா வெறுப்பாக சேர்ந்து பயணிக்க நேரிடுவது, பின் அது காதலில் முடிவது போன்ற திரைப்படங்களை பார்த்து அலுத்துவிட்டது. 'டைடானிக்' (கப்பல் பயணம்), மெட்ராஸ் டு பாண்டிச்சேரி (பேருந்து பயணம்), An Affair to Remember (கப்பல் பயணம்) - இது போன்ற திரைப் பயணங்கள் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தன.<br />
<br />
ஆனால் ஒரு சிறுவன், ஒரு மனநோயாளி மற்றும் ஒரு விலைமாது (நந்தலாலா) சேர்ந்து செல்லும் ஒரு பயணத்தில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்? அந்த மூவரையும் எப்படி இணைக்க முடியும்? அதேபோல் மைனாவில் ஒரு குற்றவாளி, அவனது காதலி, இரண்டு காவல் துறை அதிகாரிகள் சேர்ந்து மலையடிப் பாதைகளில் நடந்து செல்கிறார்கள். இந்தப் பயணம் எப்படி சுவையானதாக இருக்கமுடியும்? <br />
<br />
இருந்தது! அந்தப் பயணங்கள் சுவையானதாக மட்டுமல்லாமல், என் மனதை நெருடி கண்களில் கண்ணீரையும் வரவழைத்தன.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5H3fHgAMFHKNrsUVI_kTWoHUDTdRN76zB6Echg_dMpsvzroJ6l74sjh-KcE7WJsNBxddcNSnh_kUoVB36EZqOy3nV5oXudqzdi-vxzRV-e-uIJm_8G4vMsr0GDrXEtXItnH-_/s1600/nandalala-movie-stills-26.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="199" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5H3fHgAMFHKNrsUVI_kTWoHUDTdRN76zB6Echg_dMpsvzroJ6l74sjh-KcE7WJsNBxddcNSnh_kUoVB36EZqOy3nV5oXudqzdi-vxzRV-e-uIJm_8G4vMsr0GDrXEtXItnH-_/s320/nandalala-movie-stills-26.jpg" width="320" /></a></div><br />
<span class="Apple-style-span" style="font-size: large;"><b><u>நந்தலாலா:</u></b></span> அகிலேஷ் என்கிற சிறுவனும் பாஸ்கர் மணி என்கிற மனநோயாளியும் எதிர்பாராத விதமாக சேர்ந்து பயணம் செல்ல நேர்கிறது. பயணிக்கும் திசை ஒன்றாக இருக்கிறது...நோக்கம் கூட ஒன்றுதான்...இருவருமே தத்தம் தாயைச் சந்திக்கச் செல்கிறார்கள். ஆனால் சந்தித்த பின் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதில் வேறுபடுகிறார்கள். அகிலேஷ் தன் தாயின் கண்ணத்தில் முத்தமிட விரும்புகிறான். பாஸ்கர் மணி தன் தாயின் கண்ணத்தில் அறைய விரும்புகிறான். ஆனால் அந்தப் பயணத்தின் முடிவில் நடந்ததோ வேறு. பாஸ்கர் அகிலேஷின் தாயின் கண்ணத்தில் அறைகிறான். அகிலேஷோ ஒரு விலைமாதுவை தாயாக ஏற்று அவள் கண்ணத்தில் முத்தமிடுகிறான். ஏன் என்று குழப்பமாக இருக்கிறது இல்லையா? விடையை வெள்ளித் திரையில் காண்க!<br />
<br />
நாம எல்லாருமே அன்புக்காக ஏங்குகிறோம். நாம் எதிர்பார்க்கும் இடத்தில் அன்பு கிடைக்கவில்லையென்றால், அது கிடைக்கும் இடத்தில் இருந்து ஏன் நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது? அல்லது அன்புக்காக ஏங்கும் மற்றொருவரின் மேல் நாம் ஏன் அன்பு செலுத்தக்கூடாது? இது சிறுவன் அகிலேஷ் கற்றுக்கொண்டு, நமக்கும் கற்றுக்கொடுக்கும் பாடம். தன் தாய் தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டாள் என்பதை உணர்ந்தபின், போக்கிடம் இல்லாமல், வேறு பிழைப்பு இல்லாமல் தன் பயணத்தில் தன்னுடன் இணைந்த விலை மாதுவை தன் தாயாக ஏற்கிறான். கொஞ்சம் இது 'ஓவர் டிராமா' போல் இருந்தாலும், ஒரு சிறுவனுக்குள்ள உயர்ந்த எண்ணத்தை, பரந்த மனப்பாண்மையை படம் பிடித்துக் காட்டிய இயக்குனர் மிஷ்கின்னை பாராட்டியே ஆகவேண்டும்.<br />
<br />
"ஒன்னுக் கொன்னு துணையிருக்கும் உலகத்தில...<br />
அன்பு ஒன்னு தான் அனாதையா...<br />
யாரு இத கண்டுகொள்வார்...<br />
கைகளிலே ஏந்திக்கொள்வார்...<br />
சொந்தம் சொல்ல யார் வருவார்...<br />
அன்புக்கு யார் அன்பு செய்வார்..."<br />
<br />
என்னமாய் பாடிவிட்டர் ஜேசுதாஸ்?<br />
<br />
பாடல் வரிகள் மனதைத் தொடுகின்றன. அன்பு கிடைக்காமல் இருப்பவர்களைத் தான் அனாதை என்கிறோம். ஆனால் அன்பே அனாதையா இருக்கிறதென்று சொல்லும் போது, அதன் பின்னணயில் இருக்கும் வலியும் கொடூரமும் புலப்படுகிறது. <br />
<br />
எனக்குத் தோன்றிய சில குறைகள்: 1. மிஷ்கின் அதிவேகமாகப் பேசுவதால், அவரது வசனங்கள் சரியாகப் புரியவில்லை 2. அடிக்கடி மிஷ்கின்னும், அகிலேஷும் தலையத் தொங்கப் போட்டுக்கொண்டு சாலையில் நிற்பது பார்க்க அலுப்பாக இருக்கிறது. 3 விலைமாதுவாக வருபவர் ஏன் மற்ற இருவருடன் இணைந்து பயணிக்கிறார் என்பதற்கு வலுவான ஒரு காரணம் எனக்குப் புலப்படவில்லை. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZvhpl_9Pyv8a-21a5Sz7K29vIJdWlj87JnuKo91xLJPHd-ud9PmEEgX5lZrKp_Mfz9FxzumnME0xai2M5AkmMFXeOQKJ7cEv3vmwVreAUhGr06w3Y-uxdymaJhrOMxBWZO8BE/s1600/mainaa35113017.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZvhpl_9Pyv8a-21a5Sz7K29vIJdWlj87JnuKo91xLJPHd-ud9PmEEgX5lZrKp_Mfz9FxzumnME0xai2M5AkmMFXeOQKJ7cEv3vmwVreAUhGr06w3Y-uxdymaJhrOMxBWZO8BE/s320/mainaa35113017.jpg" width="320" /></a></div><br />
<span class="Apple-style-span" style="font-size: large;"><b><u>மைனா:</u></b></span> நந்தலாலா கன்னியாகுமரி மாவட்டத்தின் நீண்ட நெடுஞ்சாலைகளில் பயணிக்கிறதென்றால் மைனா தேணி, முன்னார் அருகில் உள்ள மலைப்பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் பயணிக்கிறது. <br />
<br />
தீபாவளியன்று நடக்கும் கதை என்பதால், பின்னணியில் வெடிச் சத்தம், குழந்தைகள் இனிப்பு எடுத்துச் செல்வது போன்றவை யதார்த்தமாக இருந்தது. மசாலா படங்களில் மிடுக்காக சைரன் வைத்த ஜீப்புகளில் செல்லும் காவல் அதிகார்களையே பார்த்துப் பழகிவிட்டோம் நாம். இயல்பாக சைக்கிளிலும் ஆட்டோவிலும் செல்லும் சிறைக் காவல் அதிகார்களைப் பார்க்க நன்றாக இருக்கிறது. அதிகாரி ராமய்யா நடிப்பில் அசத்திவிட்டார். அவருடை மனைவி செல் பேசியில் அழைக்கும் போது, "மாமோய்...நீ எங்க இருக்க?" என்று அலறும் அவருடைய ரிங் டோன் சூப்பர்! வடிவேலும், விவேக்கும் ரூம் போட்டு யோசித்துச் செய்யும் காமெடியை ராமய்யா மிக இயல்பாக இரசிக்கும்படியாகச் செய்துவிட்டார். <br />
<br />
படத்தின் தொடக்கத்தில் தங்கையின் மேல் அன்பைப் பொழிந்து, பாஸ்கர் என்கிற சிறைக் காவல் அதிகாரியான மச்சானின் மேல் சற்று காண்டாக இருக்கும் அந்த மூன்று முரட்டு அண்ணன்களைப் பார்த்தாலே வயிற்றில் புலியைக் கரைத்தது. ஏன் தொடக்கத்தில் அந்த அண்ணன் தங்கை தொசைபேசி உரையாடலை அவ்வளவு விலாவரியாகக் காட்டுகிறார்கள் என்று நான் யோசித்தேன். ஆனால் படத்தின் முடிவில் நம் நெஞ்சை பதைக்க வைக்கும் ஒரு பாதகச் செயலுடன் அந்த ஆரம்ப நிகழ்ச்சிகளை அருமையாக இணைத்திருக்கிறார் இயக்குனர்.<br />
<br />
ஒரு பக்கம் அந்த அமைதியான சிறைக்காவல் அதிகாரி பாஸ்கர், அவருடைய திமிர் பிடித்த மனைவி, அவளுடைய முரட்டு அண்ணன்மார். இவர்களுக்குத் தொடர்பே இல்லாமல் சற்றுத் தள்ளி ஒரு மலை கிராமத்தில் உயிருக்குயிராக நேசிக்கும் சுருளியும் மைனாவும். சிறு வயதிலிருந்தே தன் காதலி மைனாவுக்கு வீடு கொடுத்து, வசதி கொடுத்து, படிக்க வைத்து, அவளை வளர்க்க அவளது தாய்க்குச் சமமாக எல்லாவற்றையும் செய்கிறான் சுருளி. அவளைத் திருமணம் செய்துகொண்டு அவளுடன் தன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பதே அவனது கனவு. அப்படி அவன் கண்ணும் கருத்துமாக பல ஆபத்துகளில் இருந்து காத்து வளர்த்த மைனாவை யாரோ அவர்களுக்குச் சம்மந்தமே இல்லாத மூன்று நபர்கள் (அந்த முரட்டு அண்ணன்கள்) அனியாயமாகக் கொன்று விடுகிறார்கள். அதைத் தாங்கமுடியாமல் சுருளி ஓடும் இரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறான். <br />
<br />
ஏன் அந்த மூன்று அண்ணன்களும் மைனாவை கொலை செய்கிறார்கள் என்பதை வெள்ளித் திரையில் காண்க! இன்னேரம் கண்டிருப்பீர்கள் :-) <br />
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
சுருளி வாழும் அந்த மலைக் கிராமத்திற்குச் சென்று சிறை அதிகாரிகள் பாஸ்கரும் ராமைய்யாவும் சுருளியை பிடித்துக்கொண்டு வரும்போது, மைனாவும் அவனுடன் வருகிறாள். அவர்கள் நால்வரும் தேணிக்கு திரும்பி வரும் பயணத்தின் போது அவர்கள் ஒவ்வொருவரின் மனநிலையும் அழகான திரைக் கதையாக விரிகிறது. மைனாவும் சுருளியும் ஒரு ஆப்பக் கடை வைத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக முன்னேறிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். அந்தச் சிறை அதிகாரிகளோ, தீபாவளி அன்று தம் குடுமபத்தாருடன் இருக்க முடியவில்லையே என்று அவர்கள் மீது கடுப்பாக இருக்கிறார்கள். ஊருக்குப் போனவுடன் அவனை கஞ்சா வழக்கில் வெளியே வரமுடியாதபடி சிறையில் தள்ள திட்டமிடுகிறார்கள். இப்படி, அடுத்த என்ன நேரப் போகிறதோ, என்று நம் மனமும் அவர்களை படபடப்புடன் பின் தொடர்கிறது. இறுதியில் எதிர்பாராத ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது. <br />
<br />
இன்னும் இறந்து போன மைனாவை நினைத்தால் மனசு கஷ்டமா இருக்கு. அதுவும், அவளை துன்புறுத்திக் கொல்லும் போது, அவள் அந்த அண்ணன்களின் காலைப் பிடித்து ஏதோ சொல்லத் துடிப்பாளே, அய்யோ....என்ன கொடுமை?! வழக்கமாக சுருளி தானே அந்த வில்லன்களைப் பழிவாங்க வேண்டும்? ஆனால் அவன் தற்கொலை செய்துகொள்ள, சிறை அதிகாரி பாஸ்க ரே தன் மச்சான்களையும் மனைவியையும் வெட்டிச் சாய்க்கிறார். நன்றாக வேண்டும் என்று என் மனமும் குரூரமாகச் சந்தோசப்பட்டது!!!<br />
<br />
<br />
<br />
<br />
</div></div>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9375592.post-2373849013889020412011-01-24T14:04:00.001-05:002011-01-24T17:12:42.666-05:00ஒரு கல கல கோலப் போட்டி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல் எல்லாம் வந்து வந்து போகிறது. யார் வீட்டிலாவது போய் விருந்து சாப்பிட்டுவிட்டு அரட்டை அடித்து விட்டு வருவதைத் தவிர வேறு எதுவும் உருப்படியாகச் செய்வதில்லையே என்று என் மனதில் எபோதும் ஒரு குற்ற உணர்ச்சி உண்டு. சிறு வயதில் "பொங்கலுக்கு ஊருக்குப் போகிறோம்" என்று ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே வாய் ஓயாமல் சொல்லி மகிழ்ந்து, பள்ளி விடுமுறை விட்டதும் தாத்தா, அம்மாயி இருந்த கிராமத்திற்கு எல்லாரும் சென்றுவிடுவோம். அடுத்த நான்கு நாட்களும், நிற்க நேரமில்லாமல் பரபரப்பாகச் செல்லும். அடுப்பாங்கரையில், அப்போதுதான் பொங்கி வைத்த வெண்பொங்கலையும் சக்கரைப்பொங்கலையும் சுவைப்பதும் பின் வாசலுக்கு ஓடிச்சென்று அக்கம்பக்கத்துப் பெண்கள் போட்டிப் போட்டுக்கொண்டு போடும் கோலங்களைப் பார்ப்பதுமாக குதூகலமாக ஓடிக்கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது. அடுத்த நாளோ பரபரப்பிற்கு கேட்கவே வேண்டாம். வாசலில் போய் நின்றாலே போதும். மாடுகளுக்கு கொம்பில் வண்ணம் பூசி, கழுத்தில் மாலை போட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து தெருக்களில் ஓட்டிக்கொண்டு வருவார்கள். அரிசி இடிக்கும் உருளையை குறுக்கே போட்டுத் தாண்டச் சொல்லுவார்கள். பின்னே ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு ஏரிக்கரையில் ஜல்லிகட்டு நடக்கும். ஆனால் மாடு என்னை வந்து முட்டிவிடும் என்கிற பயத்தில் நான் ஜல்லிகட்டு பக்கம் சென்றதே இல்லை.<br />
<br />
ஆனால் இப்போது? நான் மேலே சொன்ன அத்தனையும் ஒரு சினிமா நட்சத்திரம் செய்கிறார். நாம் அதை தொலைக்காட்சியில் பார்க்கிறோம்! ஆம்! இந்த வருடம் பொங்கல் நிகழ்சிகள் பற்றி ஒரு மாதமாகவே விஜய் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் காட்டிக்கொண்டிருந்தார்கள். வடிவேலு தன் ஊரில் பொங்கல் கொண்டாடுவது, சின்னத் திரை கலைஞர்கள் ஒரு கிரமத்திற்குச் சென்று பொங்கல் கொண்டாடுவது, தனுஷ் கொண்டாடுவது....என்று அடுத்தவர்கள் கொண்டாடுவதையே ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு எப்படித்தான் மணிக்கணக்காக பார்த்துக்கொண்டிருப்பது?! <br />
<br />
இங்கே அமெரிக்காவில் நாங்கள் தொலைக்காட்சி அவ்வளவாகப் பார்ப்பதில்லை. யார் வீட்டிலாவது விருந்துக்கு கூப்பிடுவார்கள். போய்வருவோம். தெரிந்தவர்களை எல்லாம் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் சாப்பிடுவதையும் அரட்டை அடிப்பதையுமே செய்துவிட்டு வருவோம். <br />
<br />
இந்த வருடமும் பொங்கலுக்கு ஒரு நண்பர் வீட்டிலிருந்து விருந்துக்கு அழைப்பு வந்தது. இந்த முறை ஏதாவது உருப்படியாக செய்தே ஆகவேண்டும் என்று யோசித்தேன். சிறு வயதில் வாசலில் தெருவெல்லாம் அடைத்து அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் போட்ட கோலங்கள் ஞாபகம் வர, ஒரு கோலப் போட்டி வைக்கலாமே என்று தோன்றியது. உடனே தோழிகளுக்கெல்லாம் மின்னஞ்சல் அனுப்பினேன். காகிதத்தில் அனைவரும் ஒரு கோலம் வரைய வேண்டும் என்றும், மிக அழகிய கோலத்திற்கு பரிசு உண்டு என்றும், விருந்துக்கு அழைத்தவரே இந்தப் போட்டிக்கு நடுவராக இருப்பார் என்றும் மின்னஞ்சலில் எழுதியிருந்தேன். விருந்துக்கு நான்கு நாட்களே இருந்தது. எல்லாருமே வேலைக்குச் செல்லும் தாய்மார்கள். இந்த நான்கு நாட்களுக்குள் ஒரு கோலத்தைக் கற்றுக்கொண்டு வருவார்களா என்று எனக்குச் சந்தேகமாகவே இருந்தது. நானும் விருந்துக்கு முதல் நாளன்று தான் இணையத்தில் 'கூகிள்' ஆண்டவரிடம் சென்று 'கோலம்' என்று கேட்டேன். ஒரு அருமையான இணையதளம் கிடைத்தது. அதில் உள்ள ஒரு பொங்கல் பானை கோலத்தை ஆராய்ந்து ஓரளவு வரையக் கற்றுக்கொண்டேன். போட்டிக்குத் தயாரானேன்!! இதுதான் நான் போட்டியில் வரைந்த கோலம். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBLnj0lkQ6a2fpw8YO059fY_HXM_0hkpKUflUUIMKDE5HA_histPGPe1kCebrQwuftbOJtZR38yt-8xSTOiaGsdTegExA5EFOTq4Y8vcwvsaiy9JWm74L_ACcSulg3AfM7V3bx/s1600/kolam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="313" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBLnj0lkQ6a2fpw8YO059fY_HXM_0hkpKUflUUIMKDE5HA_histPGPe1kCebrQwuftbOJtZR38yt-8xSTOiaGsdTegExA5EFOTq4Y8vcwvsaiy9JWm74L_ACcSulg3AfM7V3bx/s320/kolam.jpg" width="320" /></a></div><br />
<br />
சரியாக பொங்கலன்றே(சனவரி 15) அந்த விருந்து அமைந்திருந்தது. தோழிகளெல்லாம் என்னைப் பார்த்தவுடன் கோலப்போட்டியைப் பற்றி ஆர்வமாக கேட்பார்கள் என்று நினத்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது! எல்லாரும் அலவலாவிக்கொண்டும் பொறுமையாக உணவு அருந்திக்கொண்டும் இருந்தார்கள். நான் நம்பிக்கை இழந்துகொண்டிருந்த தருவாயில், ஒரு தோழி "கோலப் போட்டியைப் பற்றிய உங்கள் மின் அஞ்சல் கிடைத்தது, ஆனால் எனக்கு நேரமே இருக்கவில்லை ஒரு கோலத்தை கற்றுக்கொண்டுவர" என்றார். ஆரம்பமே இப்படி இருக்கிறதே என்று நான் யோசிக்கையில் மற்றொரு தோழி, "என்ன கோலப் போட்டி? எனக்கு மின்னஞ்சல் எதுவும் வரவில்லையே?" என்று சொன்னார். சுத்தம்! பேசாமல் சக்கரைப் பொங்கலை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போகவேண்டியது தான் என்று முடிவு செய்தேன். <br />
<br />
சாப்பிட்டுவிட்டு கை கழுவுகையில், "என்ன, கோலப் போட்டியைத் தொடங்கலாமா?" என்று ஒரு தோழி கேட்டார். நான் சந்தேகமாக, "நீங்கள் தயாராக வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "என்ன இப்படி கேட்டுட்டீங்க? நான் இதுக்காக எங்க ஊரில் உறவிணர்களை skype மூலம் தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்கு காகிதத்தில் கோலம் வரைந்து காமிராவில் காட்டினார்கள்" என்றார். எனக்குப் புல்லரித்து! இப்படிப்பட்ட சின்சியர் சிகாமணிக்களும் இருக்கிறார்களே என்று. மற்றொரு தோழி, "நானெல்லாம் கற்றுக்கொள்ளவே தேவையில்லை. எத்தனை புள்ளி கோலம் வேண்டுமானாலும் வரைவேன்" என்றார். மற்றொருவர் கலர் பென்சில்கள் சகிதம் "நான் ரெடி" என்றார். ஆண்கள் பக்கத்திலிருந்து "ஏன் நாங்களெல்லாம் கோலம் வரையமாட்டோமா?" என்று ஒரு குரல் எழுந்தது. "கோலம் போடத்தெரியும் என்றால் நீங்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்" என்றேன் நான். அதற்கு அவர் "ஆண்களை குறைவாக எடை போடாதீர்கள். சிறு வயதில் என் அக்கா எனக்கு கோலம் போடக் கற்றுக்கொடுத்திருக்கிறார். 10 புள்ளி, 20 புள்ளி, 50 புள்ளி, ஏன் 100 புள்ளி கூட நான் வைப்பேன்" என்றார். "அப்படியா?" என்று நான் ஆச்சரியப்பட, அவர் சற்று குரலை தாழ்த்திக்கொண்டு, "ஆனால் அந்தப் புள்ளிகளை சேர்க்கத்தான் தெரியாது" என்று சொல்ல, அவரது தைரியத்தைப் பாராட்டி அவரை போட்டியில் சேர்த்துக்கொள்ள பெண்கள் முடிவு சேய்தார்கள். <br />
<br />
விருந்துக்கு எங்களை அழைத்த, நான் அன்பாக ஆண்ட்டி என்று அழைக்கும் பெண்மணி தான் போட்டியின் நடுவர் என்று முன்பே முடிவெடுக்கப்பட்டிருந்தது. பாவம் அவர். அன்று முழுவதும் எங்களுக்கு விருந்து சமைத்து ஏற்கனவே களைத்து காணப்பட்டார். சாப்பாட்டுக் கடை முடியவே இரவு 10 மணி ஆகிவிட்டது. இதற்கப்பறம் கோலப் போட்டியா என்று மனதிற்குள் இருந்திருக்கும் அயர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் உற்சாகமாக கோலப் போட்டியை தொடங்கி வைக்க "டைமர்" சகிதம் வந்தார். கிட்டத் தட்ட 15 பெண்கள் இருந்தார்கள். முன் அறையில் உள்ள ஒரு நீளமான மேஜையில் எங்களையெல்லாம் உட்காரச் சொன்னார். அனைவருக்கும் கோலம் வரைய வெள்ளை காகிதம் மற்றும் பென்சில்கள் கொடுத்தார். உற்சாக மிகுதியால் ஆளுக்கொரு விதி முறையை ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். "15 நிமிடங்கள் தான் போட்டிக்கான நேரம்" என்று ஒருவர் சொல்ல, "அய்யோ! நான் புள்ளி வைத்து முடிக்கவே 15 நிமிடம் ஆகிவிடுமே" என்று ஒருவர் பதைபதைக்க, "கொடுத்த நேரத்தில் எத்தனைக் கோலங்கள் வேண்டுமானாலும் போடலாம்" என்று ஒருவர் குழப்ப, "கோலத்தை அழித்து திருத்துவதெல்லாம் கூடாது" என்று ஒருவர் கண்டிக்க...கோலாகலமாக கோலப் போட்டி தொடங்கியது. புள்ளி வைக்கத் தொடங்கியபோது, சல சலவென்று பின்னால் ஒரே சத்தம்! பளிச் பளிச் என்று காமிரா ப்ளாஷ் வெளிச்சம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. கணவன்மார்கள் அனைவரும் பின்னால் நின்று தம் அருமை மனைவிகளின் கைத்திறனை பதிவு செய்துகொண்டிருந்தார்கள்!! கூடவே ரன்னிங் கமெண்ட்ரி வேறு! "வெகு வேகமாக மாலதி 20 புள்ளி 9 வரிசை கோலத்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறார்" என்கிற கமெண்ட்ரியை கேட்டதும் எனக்கு பகீரென்றது. நான் அப்போது தான் புள்ளிகள் வைத்து முடித்திருந்தேன். நான் பயின்ற கோலத்தில் நான்கு பொங்கல் பானைகள் இருந்தன. அதில் மூன்று பானைகளை சரியாகப் போட்டுவிட்டேன். நான்காவது பானை போடும்போது ஒரு தவறான கோட்டை இழுத்துவிட்டேன். அதான் கோடுகளை அழித்து திருத்தக்கூடாது என்று சொல்லிவிட்டார்களே?! அதனால் எனது கோலம் சற்று சொதப்பலாகி விட்டது. <br />
<br />
சரியாக 15 நிமிடங்கள் ஆனதும் டைமர் ஒலிக்க, அனைவரும் கோலம் வரைந்த காகிதத்தில் தத்தம் பெயர்களை எழுதி நடுவரிடம் கொடுத்தார்கள். "யாராவது கோலம் சரியா போடலைன்னா வேறு யாருடைய பெயரையாவது எழுதிக் கொடுத்துவிடுங்கள்" என்று ஆண்கள் பக்கத்திலிருந்து அற்வுபூர்வமான யோசனை வந்தது! நடுவர் ஒவ்வொரு கோலமாக எடுத்து எல்லோருக்கும் காட்டினார். ஒரு சிலர் கோலத்தில் புலிகள் போல. பெரிய சிக்கல் கோலமெல்லாம் போட்டிருந்தார்கள். சிலர் சின்ன சின்னதாக நிறைய கோலங்கள் போட்டிருந்தார்கள். என்னைப் போலவே சிலர் முடிக்க முடியாமல் பாதியில் விட்டிருந்தார்கள். சிலர் புள்ளி வைத்து போடத்தெரியாமல் படமாக வரைந்திருந்தார்கள். யாருக்கு பரிசு கிடைக்கப்போகிறது என்று நாங்களெல்லாம் ஆர்வமாக காத்திருந்தோம். நடுவர் பங்குபெற்ற அத்தனைப் பெண்களுக்கும் பரிசு கொடுத்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். <br />
<br />
போட்டி முடிந்த பின்னரும் அதைப் பற்றிய குதூகலப் பேச்சும், கிண்டல்களும் தொடர...நான் கண்கள் மூடி அந்த சத்தங்களை உள்வாங்கினேன். சல்லென்று விமானத்தில் நேராக என் அம்மாயி வீட்டுக்குச் சென்று இறங்கி, அடுப்பாங்கரைக்கு ஓடிப்போய் அவர் செய்த சக்கரை பொங்கலைச் சாப்பிட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு. கோலம் போட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன என்றும், கோலம் போட்டதே இல்லை என்றும் சொன்ன பெண்களை சுற்றி உட்கார வைத்து கோலம் போட வைத்தது இந்தப் பொங்கல் திருநாளின் சிறப்பாக அமைந்தது. அதற்காக ஆர்வமாக பங்கெடுத்த அனைத்துப் பெண்களுக்கும், ஆண்களுக்கும், விருந்து பரிசும் அளித்த எங்கள் அன்பு ஆண்ட்டிக்கும் நன்றிகள் பல! எல்லாருக்கும் மேல் ஒருவருக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். இத்தனை கூச்சலுக்கும் கலாட்டாவுக்கும் இடையே முழித்துக்கொள்ளாமல் சமர்த்தாகத் தூங்கிக்கொண்டிருந்த எனது ஒரு வயது மகளுக்கு ஒரு பெரிய நன்றி. அவள் மட்டும் நடுவில் முழித்துவிட்டிருந்தால், ஒரு பொங்கல் பானையுடன் எனது கோலம் நின்றிருக்கும்!!<br />
<br />
இந்த வருடப் பொங்கல் தின கொண்டாட்டம் கொடுத்த ஊக்கத்தில், அடுத்த பொங்கல் தினத்திற்கான போட்டியையும் இப்போதே முடிவு செய்துவிட்டேன். "Painting the Pongal Pot" என்பதே அந்தப் போட்டியின் பெயர். பெயரிலிருந்தே அந்த போட்டி விபரங்கள் ஓரளவு புரியும்படி இருக்கிறதென்று நினைக்கிறேன்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
</div>Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9375592.post-55123757530658891702010-12-29T12:13:00.000-05:002010-12-29T12:13:30.262-05:00ரொம்ப நாள் ஆச்சு!பதிவு எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் "warm up" செய்து கொண்டு 2011 ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் முழு மூச்சாக எழுதத் தொடங்கலாம் என்று திட்டம்.<br />
<br />
நவம்பர் இறுதியில் "தாங்ஸ் கிவிங்' முதல் இன்று வரை விருந்து, சாப்பாடு என்று சுவையாக, அதே சமையம் சற்று மந்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை. சென்ற வாரம் சில நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த நேரத்தில் 'மன்மதன் அம்பு' வெளியாக, எல்லாரும் கும்பலாகச் சென்றோம். என்னால் அரை மணி நேரம் கூட உட்கார முடியவில்லை! படம் முழுக்க த்ரிஷாவையும், சங்கீதாவையும் பின் தொடர்ந்து, செல் போன் மூலம் மாதவனுக்கு செய்தி சொல்லுகிறார் கமல்....அறுத்துக் கொட்டிவிட்டார்.<br />
<br />
சமீபத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தோம். தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மணமகள் இல்வாழ்க்கைத் தொடர்பான திருக்குறள்களைத் தமிழில் படிக்க, அமெரிக்க மணமகன் அந்தக் குறள்களை ஆங்கிலத்தில் படித்தது வித்தியாசமான முயற்சியாக இருந்தது. திருமண வரவேற்பு மேசையில், சரம் சரமாக மல்லிகை பூக்களைப் பார்த்து வியப்பாக இருந்தது. மதுரையில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்தார்களாம்!!<br />
<br />
வேறு ஒன்றும் இப்போதைக்கு செய்தி இல்லை. கூடிய விரைவில் ஒரு சுவையான பதிவில் சந்திக்கிறேன். <br />
<br />
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9375592.post-20921774117483042172010-09-14T15:37:00.002-04:002010-09-14T16:10:21.242-04:00அப்பாவின் இறுதிப் பயணம்அப்பா இறந்து போய் மூன்று மாதங்கள் ஆகிறது! அவர் புற்று நோயினால் அவதிபட்டது, அதற்காக சிகிச்சைகள் எடுத்துக்கொண்டது, நான் அவரைச் சென்று பார்த்தது பற்றியெல்லாம் முன்பு பதிவுகள் எழுதியிருக்கிறேன். முகம் தெரியாத பல வாசகர்கள் என் அப்பாவுக்காக பிரார்தனை செய்வதாகச் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்! <div><br /></div><div>அப்பா இல்லாத ஒரு வாழ்க்கையை வாழக் கற்றுக்கொண்டிருக்கிறேன். சிரமமாக இருக்கிறது. </div><div><br /></div><div>அவர் இன்னமும் திருச்சியில் அவர் வீட்டில் இருப்பது போலவே உணர்கிறேன். இன்னமும் சில மின் அஞ்சல்களில் அவரது முகவரியையும் என்னை அறியாமல் சேர்த்துவிடுகிறேன். வார இறுதி வந்தால் திருச்சிக்கு தொலைபேச வேண்டும் என்கிற பழக்கத்தை மறக்கமுடியவில்லை. </div><div><br /></div><div>என் மகளைப் பார்க்கும் போதெல்லாம் ஆதங்கமாக இருக்கிறது. அவளைத் தூக்கி வளர்க்க, கதைகள் சொல்ல, விளையாட என் அப்பா போல் வேறு ஒருவர் கிடைப்பாரா? அவரை இனி புகைப்படத்தில் மட்டும் தானே அவளுக்குக் காட்ட முடியும்?!</div><div><br /></div><div>இதுவரை நான் சாதாரணமாகப் பழகிய சித்தப்பாவின்(அப்பாவின் தம்பி) மேல் இப்போது எனக்குப் பாசம் அதிகரித்திருக்கிறது...அவர் அப்பாவின் எஞ்சியிருக்கும் உயிர் அல்லவா?</div><div><br /></div><div>சிறு வயதில் அப்பா பயணம் சென்றாரென்றால் எனக்கு ஒரே சந்தோசமாக இருக்கும். ஏனென்றால் திரும்பி வரும்போது எனக்கு நிறைய உடைகள், விளையாட்டுப் பொருட்களெல்லாம் வாங்கிவருவார். எப்போது அடுத்தப் பயணம் போவார் என்று நான் ஆவலாகக் காத்திருப்பேன். </div><div><br /></div><div>ஆனால் இப்போது அவரது பயணங்கள் முடிவடைந்துவிட்டன. அவர் மிகவும் நேசித்த திருச்சி வீட்டை விட்டு, எங்களையெல்லாம் விட்டு அருகில் உள்ள மின் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு அவர் எடுத்துச்செல்லப்பட்டதே அவரது இறுதிப் பயணம்! </div><div><br /></div><div>இனி வரும் நாட்களில் அவரது நினைவுகளிலும், ஆசீர்வாதத்தோடும் எனது வாழ்க்கைத் தொடரும்...</div><div><br /></div><div><br /></div><div><br /></div>Unknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-9375592.post-78944035974515502392010-05-02T16:28:00.004-04:002010-05-02T19:43:13.465-04:00என் பிரசவ அறையில் - 2<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-CRW93PYJjvgFYulJvKwVs9KkMGfmQepsx4OOkMb8l58KnBtCjYXMuJv42gG0TAxmZopw_vGlkwz6Grsu3w3WiGmjvdHiGSOqLcs__0V78Ks7Gfl97cSw1UnvITu5SBm3ONF9/s1600/mother-baby-motherchild74.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 263px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-CRW93PYJjvgFYulJvKwVs9KkMGfmQepsx4OOkMb8l58KnBtCjYXMuJv42gG0TAxmZopw_vGlkwz6Grsu3w3WiGmjvdHiGSOqLcs__0V78Ks7Gfl97cSw1UnvITu5SBm3ONF9/s320/mother-baby-motherchild74.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5466821901229624434" /></a><br />சென்ற பதிவின் தொடர்ச்சி...<div><br /></div><div>என் மகள் பிறந்தவுடன் அவளை தாதிப் பெண்கள் அதே அறையின் மற்றொரு பக்கம் எடுத்துச் சென்று சில பரிசோதனைகள் செய்துகொண்டிருந்தார்கள். என் கணவர் அருகே நின்று பார்த்துக்கொண்டிருந்தார். என் மனம் முழுக்க ஒரே படபடப்பு! குழந்தைக்கு எல்லா பரிசோதனைகளும் நல்ல விதமாக முடியவேண்டுமே என்று. என் கணவர் அங்கிருந்து சைகை மூலம் "குழந்தை நன்றாக இருக்கிறாள்" என்று சொன்னார். பின்னரே என் மனம் அமைதியடைந்தது. </div><div><br /></div><div>மாலை மணி 6 அகியது. டெபி தன் வேலை நேரம் முடிந்து வீட்டுக்குக் கிளம்புகிறேன் என்றாள். அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு என்னென்னவோ சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அசதி மிகுதியால் வெறும் "நன்றி" என்று மட்டுமே சொல்ல முடிந்தது. நான் குழந்தையை நல்லபடியாகப் பெற்றெடுக்க உறுதுணையாக இருந்தவள் அல்லவா அவள்?! டெபி எனக்கு வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.இனி அவளை நான் பார்க்கப்போவதில்லை. ஆனால் அவளை நான் என்றென்றும் மறவேன். </div><div><br /></div><div>காலையிலிருந்து தண்ணீர் குடிக்காததால் எனக்கு தொண்டை மிகவும் வரண்டிருந்தது. "கொஞ்சம் தண்ணீர் கொடுங்களேன்" என்று தாதிப் பெண்களிடம் கேட்டேன். தண்ணீரென்ன, பழரசமே இனி நீ குடிக்கலாம். என்ன பழரசம் வேண்டும்?" என்று கேட்டார்கள். நான் பொறுமையிழந்து "ஏதாவது கொடுங்கள்" என்றேன். ஆப்பிள் பழரசம் கொடுத்தார்கள். எனக்குப் பொதுவாக ஆப்பிள் பழரசம் பிடிக்காது. ஆனால் அன்று அரக்கப் பரக்க அந்தப் பழரசத்தை ஒரு வினாடியில் குடித்துவிட்டு, "இன்னும் வேண்டும்" என்றேன். அடுத்த பத்து வினாடிகளுக்குள் மேலும் இரண்டு தம்ப்ளர் ஆப்பிள் பழரசத்தைக் குடித்த பின்னரே எனக்கு தாகம் சற்று அடங்கியது. </div><div><br /></div><div>பழரசம் உள்ளே சென்றபின் சற்று தெம்பு வந்தது. நான் படுத்திருந்த இடத்தில் ஒரே குறுதி மயம். என் உடல் முழுக்க ஈரமாக உணர்ந்தேன். எப்போது குளித்து உடைமாற்றி சுத்தமாகப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, தாதிப்பெண் உருவில் "ஜீனா"(Gina) என்று மற்றொரு தேவதை வந்தாள். "I am going to clean you up" என்றாள். சத்தியமாகச் சொல்கிறேன். என் தாய் கூட என்னை இந்த அளவு சிரத்தை எடுத்து அறுவெறுப்பு பார்க்காமல் சுத்தம் செய்திருக்க மாட்டார். </div><div><br /></div><div>அடுத்த அரைமணி நேரத்தில் நான் சுத்தமாக, வெறு புதிய உடை அணிந்து படுக்கையில் படுத்திருந்தேன். அதற்குள் குழந்தையையும் சுத்தம் செய்து கம்பளியில் பொட்டலம் போல் சுற்றி என் கணவரிடம் கொடுத்திருந்தார்கள். என் கணவர் அந்தப் பொட்டலத்தை என்னிடம் கொடுத்தார். "Little Bundle of Joy" என்பது அதுதானோ?! </div><div><br /></div><div>அவள் முகம் மட்டும் தான் கம்பளிக்கு வெளியே தெரிந்தது. கண்களை விழித்து என்னைப் பார்த்தாள். நான் அவளைப் பார்த்தேன். அந்த கணத்தில் எனக்குத் தாய்ப்பாசம் பொங்கி வரவில்லை...அவளைக் கட்டி அணைத்து உச்சிமுகரத் தோன்றவில்லை...ஒரு வித பயம் தான் என் மனதில் தோன்றியது. திடீரென்று ஒரு புத்தம் புதிய உயிரைத் தூக்கி கையில் கொடுத்துவிட்டார்களே...எப்படி பார்த்துக்கொள்து? எப்படி வளர்ப்பது? என்று மனம் அடித்துக்கொண்டது. அந்த பயமெல்லாம் மாறி ஒரு பொறுப்பான தாயாக மாற எனக்கு சில நாட்கள் ஆனது.</div><div><br /></div><div>இந்தப் பதிவை எழுதிமுடிக்கும் போது என் மகள் 5 மாதக் குழந்தை. சென்ற வருடம் இதே சமையம் எனக்கு முதல் ultra sound scan செய்து பார்த்தபோது அந்தத் திரையில் ஒரு சிறிய கரும்புள்ளி போல் தெரிந்த இவள், இன்று கை கால்களை ஆட்டிக்கொண்டு பொக்கை வாய் திறந்து என்னைப் பார்த்துச் சிரிப்பதைப் பார்த்தாள் பிரமிப்பாக இருக்கிறது. </div><div><br /></div><div>பெண்மை வெல்க! தாய்மை வாழ்க! </div><div><br /></div><div>வரும் மே 9ஆம் தேதி அன்னையர் தினம். அனைத்துத் தாய்மார்களுக்கும், தாய்குலத்திற்கும் எனது வாழ்த்துக்கள்! </div><div><br /></div>Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-9375592.post-14736040980404017142010-04-19T13:45:00.001-04:002010-04-19T13:46:58.927-04:00என் பிரசவ அறையில்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOuY-I-uM2CIRig_cNsLh6d6J1mcgS3ETAyxwphJ3Aut9Y5aXucaoA_yWlBC3A3ukt3b9CJaMKothhv-ry1_mZxsaLt8L8vU-404mRyOKCz4sdsSYCQfPu9H9liGFniPRyojNJ/s1600/baby-feet.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOuY-I-uM2CIRig_cNsLh6d6J1mcgS3ETAyxwphJ3Aut9Y5aXucaoA_yWlBC3A3ukt3b9CJaMKothhv-ry1_mZxsaLt8L8vU-404mRyOKCz4sdsSYCQfPu9H9liGFniPRyojNJ/s320/baby-feet.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5461906401572912514" /></a><br /><div>எல்லார் வீட்டிலும் தான் குழந்தைப் பிறக்கிறது. இதைப் பற்றி புதிதாக எழுத ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் பிரசவம் ஒரு தனித்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் "Birth Stories" என்று நிறைய பெண்கள் எழுதுவார்கள். அதுபோல் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் படிக்கவில்லையென்றாலும் கூட, எனது நினைவுகளைப் பதியவைக்கும் ஒரு வாய்ப்பாக இது இருக்கட்டுமே!</div><div><br /></div>டிசம்பர் 7 ஆம் தேதி (2009) எனது பிரசவ நாளாக குறிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒரு வாரம் முன்பே எனது இரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருந்தது. எனவே எனது மகப்பேறு மருத்துவர், "இனி நீங்கள் கார் ஓட்டக்கூடாது. வீட்டில் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்" என்றார். அன்றே அலுவலகத்தில் மேலாளரிடம் 3 மாதங்கள் மகப்பேறு விடுமுறைக்கு எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அப்பாடா! ஒரு வாரம் வீட்டில் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்...நல்ல புத்தகங்கள் படிக்கவேண்டும்...நல்ல திரைப்படங்கள் பார்க்கவேண்டும், குழந்தைக்கான அந்தச் சின்ன அறையை ஒழுங்குபடுத்தி, நன்றாக அலங்கரிக்க வேண்டும்,என்று மனதிற்குள் பல திட்டங்கள் உருவானது.<div><br /></div><div>ஆனால் நான் நினைத்ததற்கு எதிர்மாறாக இருந்தது அந்த ஒரு வாரம்! புத்தகத்தில் கவனம் பதியவில்லை...தொலைக்காட்சி பார்க்க பிடிக்கவில்லை...படுத்தால் தூக்கம் வரவில்லை...மனம் இருப்புக்கொள்ளாமல் மிக அழுத்தமாக இருந்தது. கெட்ட நினைவுகள் வந்து அலைக்கழித்தன. எந்த நேரமும் பிரசவ வலி வரலாம் என்று ஒருவித திகிலான எதிர்பார்ப்புடனே நாட்கள் சென்றன. பிரசவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு எனக்கு உதவுவதற்காக அக்கா வந்தாள். அதற்குப் பிறகு தான் சற்று நிம்மதியாக இருந்தது. பிரசவதிற்கு முன் தினம் இரவு ஒரு இந்திய உணவகத்திற்கு நான், கணவர், அக்கா மூவரும் சென்றோம். மறுநாள் குழந்தை எப்போது பிறக்கப்போகிறதோ தெரியவில்லை. குழந்தைப் பிறக்கும் வரை சாப்பாடு கொடுக்கமாட்டார்களாம்! அதனால் அடுத்த நாளுக்கும் சேர்த்து நன்றாக வளைத்துக்கட்டினேன்! அன்று வாசிங்டன் டிசியில் சறுக்குப்பணி வேறு. என் கையைப் பிடித்து சாக்கிரதையாக அழைத்துவந்த அக்கா, "இருந்தாலும் உனக்கு தைரியம் அதிகம்" என்று கடிந்துகொண்டாள்.</div><div><br /></div><div>பிரசவ நாளும் வந்தது...டிசம்பர் 7, 2009!!!</div><div><br /></div><div>காலை 7 மணி...</div><div>பிரசவ நாள் வரை எனக்கு வலி ஏற்படவில்லை என்பதால் அன்று காலை மருத்துவமனைக்கு வந்து சேரச்சொல்லிட்டார் மருத்துவர். காலை ஏழு மணிக்கு நான், கணவர், அக்கா மூவரும் மருத்துவமணைக்குச் சென்றோம். எனக்கான பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அது ஒரு விடுதி அறை போல் அழகாக வசதியாக இருந்தது. இங்கேயா குழந்தைப் பிறக்கப் போகிறது? அதற்கான அறிகுறியே இல்லையே? என்று சந்தேகத்துடன் சுற்றி முற்றிப் பார்த்துக்கொண்டிருந்த போது என் கையில் ஒரு அங்கியைக் கொடுத்த அதனை போட்டுக்கொள்ளச் சொன்னாள் தாதிப் பெண். குளியலறைக்குச் சென்று என் உடைகளை மாற்றி, அந்த மருத்துவமனை அங்கியை அனிந்துகொண்டு வெளியே வந்தேன். என்ன ஆச்சரியம்!! அதற்குள் அந்த விடுதி அறை பிரசவ அறையாக மாறியிருந்தது! அந்த சொகுசுக் கட்டிலும் படுக்கையும் மடக்கி கீழிறக்கப்பட்டு, மருத்துமனைக் கட்டில் அங்கே இருந்தது. பக்கவாட்டில் ஏகப்பட்ட இயந்திரங்கள், ஒயர்கள் எல்லாம் இருந்தன. எனக்கு லேசாக வயிற்றைக் கலக்கியது. கட்டிலில் சென்று படுத்தேன். அங்கிருக்கும் சோபாவில் கணவரும் அக்காவும் உட்கார்ந்து என்னை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.</div><div><br /></div><div>எனக்கு அன்று உதவிய தாதிப் பெண்ணின் பெயர் "டெபி"(Debbie). அவளை என் வாழ்க்கையில் மறக்கவேமுடியாது. சிரித்த முகம், அன்பான பேச்சு. கலவரமாகிப் போயிருந்த எனக்கு "எல்லாம் நன்றாக நடக்கும், உனக்கு உதவ நான் கூடவே இருக்கிறேன்" என்று சொல்லி தைரியமூட்டினாள். அவளுக்கு ஐந்து குழந்தைகளாம்!</div><div><br /></div><div>மூன்று வகையான மானிட்டர்கள் என் உடலில் பொருத்தப்பட்டன. ஒன்று எனது இரத்த அழுத்தத்தை 15 நிமிடங்களுக்கொருமுறை அளவிடும் மானிட்டர். இரண்டாவது குழந்தையின் இதயத்துடிப்பைக் காட்டும் மானிட்டர். மூன்றாவது எனது கருப்பையின் அதிர்வுகளை (uterine contractions) வரைபடமாகக் (graph) காட்டும் மானிட்டர். அந்த இரத்த அழுத்த மானிட்டர் தானாகவே 15 நிமிடங்களுக்கு ஒரு முறை என் கையைப் பிடித்து இறுக்கி இரத்த அழுத்தத்தை கணக்கிட்டது. ஒவ்வொரு முறையும் இரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. தாதிப் பெண் டெபி யின் முகத்தில் கவலைத் தோன்றியது. "மனதை இலேசாக வைத்துக்கொள். உனது இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது குழந்தைக்கு நல்லதல்ல" என்றாள்.</div><div><br /></div><div>சிரமப்பட்டு என்னை அசுவாசப்படுத்திக்கொண்டேன். சில நிமிடங்கள் அறையில் அமைதி நிலவியது. குழந்தையின் இதயத்துடிப்பு சீராக இருந்தது. எனது இரத்த அழுத்தம் சற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தது.</div><div><br /></div><div>காலை 9 மணி...</div><div><br /></div><div>9 மணியளவில் எனக்கு IV மூலம் Pitocin என்கிற வலி ஏற்படுத்தும் மருந்து செலுத்தப்பட்டது. வலி ஏற்பட ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள். நான் கண்களை மூடிப் படுத்திருந்தேன். சில நிமிடங்களில் அப்படியே தூங்கியும் போனேன்.</div><div><br /></div><div>காலை 11 மணி</div><div><br /></div><div>எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை. சட்டென்று விழித்துக்கொண்டேன். இலேசாக இடுப்பு வலித்தது. வயிற்றினுள் யாரோ அழுத்துவது போல் உணர்ந்தேன். இதுதான் பிரசவ வலியோ?! மணியடித்ததும் டெபி வந்தாள். நிலமையைச் சொன்னேன். என்னை பரிசோதித்து விட்டு, மகிழ்ச்சியுடன், "கருப்பையின் வாயில் 5cm விரிவடைந்திருக்கிறது. பாதி தூரம் கடந்துவிட்டாய்!" என்றாள். நான் பரபரப்பானேன். கருப்பையின் வாயில் 10cm வரை விரிவடைந்த பின்னரே குழந்தை வெளியே வரமுடியும் என்று மருத்துவர் முன்பே விளக்கியிருக்கிறார்.</div><div><br /></div><div>இன்னும் சில நிமிடங்கள் சென்றபின், என் பனிக்குடம் உடைந்து. ஈரமாக உணர்ந்தேன். மீண்டும் டெபி என்னை பரிசோதித்துவிட்டு "6cm" என்று சொல்லிவிட்டுப் போனாள். பனிக்குடம் உடையும் போது எப்படி இருக்கும் என்றெல்லாம் நான் படித்தும், என் தோழிகளிடம் கேட்டும் வைத்திருந்தேன். நான் அலுவலகத்தில் இருக்கும் போது பனிக்குடனம் உடையாமல் இருக்கவேண்டுமே என்று ஒவ்வொரு நாளும் பிரார்தித்து வந்தேன். நல்லவேளை மருத்துவமனைப் படுக்கையில் அது நடந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி!!</div><div><br /></div><div>மதியம் 1 மணி...</div><div><br /></div><div>இந்தச் சமையத்தில் வலி அதிகரித்தது. பிரசவ வலி எப்படி இருக்குமென்று நிறைய படித்தேன். தோழிகளின் அனுபவத்தையும் கேட்டிருக்கிறேன். அனால் அதை நானே உணரும் போது அது எங்குமே படிக்காத, யாருமே இது வரை விவரிக்காத ஒரு வித வலியாக இருந்தது!! என்னால் கூட அதனை சரியான வார்த்தைகளைக்கொண்டு விவரிக்க முடியாது. அதை அனுபவித்தால் தான் தெரியும். இருந்தாலும், விவரிக்க முயற்சிக்கிறேன். இடுப்பையும் வயிற்றையும் சுற்றி உள்ளிருந்து யாரோ அழுத்துவது போல் இருந்தது. அந்த அழுத்தம் சின்னதாகத் தொடங்கி பின் அதிகரித்தது. ஒரு உச்சத்திற்கு வந்தபின் மீண்டும் குறைந்தது. சில வினாடிகளுக்குப் பின் மீண்டும் தொடங்கி, அதிகரித்து, குறைந்தது. இப்படி ஒரு அலை போல் வந்து வந்து போனது. அந்த அழுத்ததின் அளவிற்குத் தகுந்தார்ப்போல் வலியும் லேசாகத் தொடங்கி, அதிகரித்து, ஒரு உச்சத்திற்குப் போய், பின் குறைந்தது. இப்படி அலை அலையாக பிரசவ வலி தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.</div><div><br /></div><div>டெபி என்னிடம் "Epidural எடுத்துக்கொள்கிறாயா?" என்று கேட்டாள். Epidural என்கிற அற்புதத்தைப் பற்றி மருத்துவர் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தார். அது ஒரு வலி நிவாரண மருந்து. அமெரிக்காவில் பெரும்பாலான பெண்கள் பிரசவத்தின் போது இந்த மருந்தை எடுத்துக்கொள்வார்கள். சிலர் வலி நிவாரணம் இல்லாமலேயே வலியுடன் குழந்தைப் பெற்றுக்கொள்வார்களாம்.</div><div><br /></div><div>நான் டெபியிடம், "Epidural இப்போது வேண்டாம். என்னால் எவ்வளவு நேரம் வலியை பொறுத்துக்கொள்ள முடிகிறது என்று பார்க்கிறேன்". என்றேன். வலி அலை அலையாக வந்து போய்க்கொண்டிருந்தது. அக்கா தன் கையைக் கொடுத்தாள். பிடித்து இறுக்கிக்கொண்டேன். அவளுக்கு கை வலிக்கத் தொடங்கியபோது, கணவர் கைகொடுத்தார். ஒரு கட்டத்தில் எனக்கு மூச்சுத் திணறியது. கண்களில் கண்ணீர் வந்தது. வலி பொறுக்கவில்லை. "Epidural கொடுத்துவிடுங்கள்" என்றேன். டெபி சட்டென்று பேஜரின் மூலம் anesthesiologist ஐ அழைத்தாள். அவர் வந்து எனது முதுகுத்தண்டின் அருகில் ஊசி மூலம் அந்த மருந்தைப் போடுவதற்கு 15 நிமிடங்கள் ஆனது. அந்த 15 நிமிடங்களும் வலியால் துடித்துக்கொண்டிருந்த என்னை டெபி அணைத்துப் பிடித்துக்கொண்டாள். என் முதுகை வருடிக்கொண்டே என்னுடன் பேசிக்கொண்டிருன்தாள். மருந்தை செலித்திய பின் என்னை சாய்வாகப் படுக்கையில் படுக்கவைத்தாள். என்ன ஆச்சரியம்!! ஐந்தே நிமிடத்தில் என்னை வாட்டியெடுத்த வலி கானாமல் போய்விட்டது. ஆனால் அந்த அழுத்தம் தொடர்ச்சியாக அலை அலையாக வந்தபடி இருந்தது. கர்ப்பப் பையிலிருந்து குழந்தையை மெதுவாக வெளியே தள்ளுவதற்கான ஏற்பாடு தான் அந்த அழுத்தமும் அதிர்வும்.</div><div><br /></div><div>மதியம் 4 மணி...</div><div><br /></div><div>மீண்டும் என்னை பரிசோதித்த டெபி, "9cm ஆகிவிட்டது! இனிமேல் தான் நமக்கு நிறைய வேலை இருக்கிறது. குழந்தையை வெளியே தள்ளத் தயாரா?" என்றாள். அந்த நிமிடம் வரை எனக்கு சுகப் பிரசவம் ஆகும் என நம்பிக்கை இல்லை. கடைசியில் சிசேரியனில் தான் முடியும் என்று அதற்கும் தயாராக இருந்தேன். நான் பல மாதங்கள் புத்தகங்களிலும், இணையதளங்களிலும் மகப்பேற்றைப் பற்றிப் படித்திருந்தவையெல்லாம், என் பிரசவ அறையில் எனக்கு மறந்துவிட்டிருந்தது...ஏழு பவுண்டு எடையுள்ள ஒரு குழந்தையை என் உடலில் இருந்து வெளியே கொண்டுவர நான் எந்த விதத்திலும் தயாராக இல்லை, அனால் டெபி யிடம், "நான் தயார்" என்றேன். டெபி மீண்டும், "Lamaze வகுப்பில் நீ கற்றுக்கொண்ட மூச்சுப் பயிற்சி நினைவிருக்கிறதா?" என்று கேட்டாள். என் மூலை மரத்துப்போயிருந்தது! "நினைவில்லை" என்று பதிலளித்தேன்.</div><div><br /></div><div>டெபி எனக்கு அந்த மூச்சுப் பயிற்சியை நினைவூட்டினாள். "ஒரு அலை வரும்வரை காத்திரு. பின் நன்றாக மூச்சை உள்ளிழுத்துக்கொள். நான் 1, 2, 3 என்று எண்ணுவேன். 10 சொல்லும் வரை நன்றாக கடுமையாக முக்கி குழந்தையை வெளியே தள்ளு. 10 சொன்னபின் மூச்சை விடு. அடுத்த அலை வரும்போது மீண்டும் இது போல் செய்யவேண்டும்".</div><div><br /></div><div>மாலை 5 மணி</div><div><br /></div><div>அதுவரை என் பிரசவ அறைக்கு டெபி மட்டுமே வந்து போய்க்கொண்டிருந்தாள். குழந்தை வெளியே வரும் நேரம் வந்துவிட்டதால், என்னுடைய மகப்பேரு மருத்துவரும், இன்னும் இரண்டு தாதிப் பெண்களும் அறைக்குள் வந்தனர். என் பிரசவ அறை கலை கட்டியது!</div><div><br /></div><div>முதல் சில நிமிடங்கள் எனக்குச் சரியாக மூச்சை இழுத்து குழந்தையைத் தள்ளத் தெரியவில்லை. டெபி பொறுமை இழக்காமல் மீண்டும் எனக்குப் பயிற்சி அளித்தாள். பின்னர் எனக்கே அந்த உத்தி பிடிபட்டது. கணவர் என் பக்கவாட்டில் நின்று என் கைகளைப் பிடித்துக்கொண்டார். டெபி, மருத்துவர், மற்ற இரண்டு தாதிப் பெண்கள் எல்லாரும் சேர்ந்து "மூச்சை பிடி...தள்ளு...முச்சை விடு...ம்ம்ம்ம் அடுத்து மூச்சை பிடி..." என்று விடாமல் சொல்லிக்கொண்டிருந்தனர். எனக்கு வியர்த்து ஊத்தியது. தொண்டை வரண்டது. "தண்ணீர் வேண்டும்" என்றேன். ஒரு சிறிய ஐஸ் கட்டியை வாயில் வைத்தாள் டெபி.</div><div><br /></div><div>30 நிமிடங்கள் சென்றன. எனக்கு உடலில் உள்ள சத்தெல்லாம் இறங்கிவிட்டது. குழந்தை நன்றாகக் கீழே இறங்கி இருந்தது தெரிந்த து, ஏனென்றால் என் மேல் வயிற்றைத் தொட்டுப் பார்த்த மருத்துவர், அந்த இடம் காலியாக இருப்பதை உணர்ந்து, "குழந்தை நன்றாகக் கீழே இறங்கியிரு க்கிறது. இன்னும் கடுமையாக தள்ளுவதற்கு நீ முயற்சி செய்யவேண்டும். உனக்கு சிசேரியன் செய்ய நான் விரும்பவில்லை" என்றார்.</div><div><br /></div><div>மாலை மணி 5:30...</div><div><br /></div><div>மீண்டும் 15 நிமிடங்கள் கடுமையான முயற்சி தொடர்ந்தது. இந்தக் குழந்தை இப்போதைக்கு வெளியே வராது. இது ஒரு மிக நீண்ட நாளாக இருக்கப்போகிறது என்று நான் நொந்து போய் மற்றவர்கள் முகத்தைப் பார்த்தபோது, எல்லோரும் சட்டென்று பரபரப்பானார்கள்! கணவரின் முகத்தைப் பார்த்தேன். அவர் முகத்தில் ஆர்வம் கலந்த கலவரம் தெரிந்தது. இடுப்புக்கு கீழ் எனக்கு மரத்துவிட்டதால் எனக்கு என்ன நடக்கிறதென்று உணரமுடியவில்லை. "என்ன ஆச்சு?" என்று கணவரிடம் கேட்டேன். "குழந்தையின் தலை தெரிகிறது" என்றார் அவர். "இன்னும் 2 அல்லது 3 முறை கடுமையாகத் தள்ளு. குழந்தை வெளியே வந்துவிடும்" என்றார் மருத்துவர்.</div><div><br /></div><div>அவ்வளவுதான்! எனக்குள் என்னப் புகுந்தது என்று தெரியாது. உடலில் மிஞ்சியிருந்த அத்தனை சத்தையும் கூட்டி வெறி வந்தது போல் மூச்சைப் பிடித்து தள்ளினேன். மாலை 5:49 க்கு என் மகள் என் கருவறையிலிருந்து என் பிரசவ அறைக்கு வந்தாள்!!! அவள் வெளியே வந்தவுடன் என்னால் அவளைப் பார்க்க முடியவில்லை. தாதிப் பெண்கள் அவளை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அசதியால் சொருகிய என் கண்களின் ஓரத்தில் அவளது பாதங்கள் தான் தென்பட்டன!</div><div><br /></div><div>"புத்தம் புதிய ரத்த ரோஜா...பூமி தொடா பிள்ளையின் பாதம்" என்கிற பாடல் வரிகள் என் மனதிற்குள் ஓடியது!</div><div><br /></div><div>நானும் என் மகளும் இன்னும் சில நிமிடங்களில் நேருக்கு நேர் சந்திக்கப் போகிறோம்! அந்தச் சந்திப்பைப் பற்றி அடுத்தப் பதிவில்...</div><div><br /></div><div><br /></div><div><br /></div>Unknownnoreply@blogger.com13